ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, July 26, 2010

உன்னால் கரையாத..!

நிலாப் பெண்ணும் உறங்குவதாகத்
தெரியவில்லை..!
இரவுப் பொழுதும் கரைவதாகத்
தெரியவில்லை..!
விளக்குகளும் அணைவதாகத்
தெரியவில்லை..!
கண்களும் இமை மூடுவதாகத்
தெரியவில்லை..!
ஆயினும் என் அன்பே...
உன்னால் கரையாத இந்த இரவு கூட...
உன்னைப் போலவே
இன்பத்தைத் தருகிறதடி..!



5 comments:

கலா said...

உன்னால் கரையாத இந்த இரவு கூட...
உன்னைப் போலவே
இன்பத்தைத் தருகிறதடி\\\\\


உங்கள் கரைகாணா...
இன்பம் கரையாமல் இருப்பதே
சுகம்

இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் ,குயிலே கூவாதே....
சேர்தவர் உயிரைப் பிரிக்காதே!!

போதுமா மோகனன்?
இது நான் உங்களுக்குச் செய்யும் உதவி

மோகனன் said...

தங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றி...

மோகனன் said...

வாங்க கலா...

தங்களின் உதவிக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

"தாரிஸன் " said...

//உன்னால் கரையாத இந்த இரவு கூட...
உன்னைப் போலவே
இன்பத்தைத் தருகிறதடி..!
//இந்த வரிகள் ரொம்ப நல்லா இருக்குங்க...


பீலிங்க்ஸ்........ம்ம்ம்....பீலிங்க்ஸ்...

மோகனன் said...

என்னங்க செய்யறது...

நம்மள பீல் பண்ண வைக்கறதே அவங்களுக்கு வேலையாப் போச்சு... ம்ஹீம்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!