கனவுகள் வழியே
என் நினைவுகளைத்
திருடிச் செல்லும்
தேவதையே..!
குரலின் வழியே
என்னுயிரினை
உரசிச் செல்லும்
பூங்குயிலே..!
ஓரப்பார்வையின் வழியே
என்னுலகினை
வசியம் செய்யும்
வான்மதியே..!
உன் அன்பின் வழியே
உன்னால் இங்கு
பனியாய் உருகி வழிகின்றேன்..!
ஆறாய் பெருகி ஓடுகின்றேன்..!
நீ அணையாக இருந்தென்னை
அணைப்பாயா?
நீ துணையாக இருந்தென்னை
இணைப்பாயா?
(தமிழரின் வீரவிளையாட்டுகளில் ஒன்றான... சிலம்பாட்டத்தை கற்றுக்கொண்டு வருகிறேன். நான் ஆடிய சிலம்பாட்டத்தை பார்க்கறீங்களா...: மோகனனின் சிலம்பாட்டம்)