Monday, October 19, 2009

யாருக்கு நன்றி சொல்ல..?




மழையில் நீ நனைந்து விளையாடும்
அழகைப் பார்த்து
கிறங்கிப் போனேன்...
மழையே அழகு..!
அதில் நீ நனைவது அதைவிட அழகு..!
இதில் நான் யாருக்கு நன்றி சொல்ல
மழைக்கா..? உனக்கா..?

2 comments:

  1. mathiniraichelvan@gmail.comOctober 22, 2009 at 10:33 AM

    அய்யா!

    ஏன் எங்கள் வயிற்றெரிச்சலைக் கிளப்பு கின்றீர்கள்? மழையைக் கண்டு பல திங்கள் ஆகிவிட்டதே சென்னையில்... தெரியாத உங்களுக்கு?

    சென்னை இப்போது பாலைவனமாக ஆகி வருகிறது..மக்களின் மன நிலை போல. இனி பாலைவனத்தைப் பற்றி கவிதை எழுதுங்கள்.

    வாழ்த்துக்களுடன்,
    அன்பு மதி நிறை செல்வன்,
    20/10/2009.

    ReplyDelete
  2. வாங்க மதிநிறை செல்வன்...

    உங்கள் வயிற்றெரிச்சலைக் கிளப்பியதற்கு மன்னிக்கவும்... இனி சாந்தப் படுத்துகிறேன்...

    மற்றவர்களைப் போல் மனதிற்குள் பூட்டி வைக்காமல்... மனம் திறந்து கொட்டியமைக்கு நன்றி தோழரே...

    வறுமை, வறட்சி, அழிவு எத் வரினும் காதல் உணர்வு அழியாது...

    பாலைவனம் குறித்து விரைந்து எழுதுகிறேன்...

    அடிக்கடி வந்து (சு)வாசிச்சிட்டுப் போங்க...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...