Wednesday, July 7, 2010

உன் நெஞ்சணையில்..!

பஞ்சணையில் படுத்தால்
தூக்கம் வரவில்லை என்று
உன் நெஞ்சணையில் படுத்தேன்…
அது மலர்ப்படுக்கையில்
படுத்தது போலிருந்தது..!
அப்போதும் எனக்கு
தூக்கம் வரவில்லை பெண்ணே..?
எங்கே என்னுடல் பட்டு
உன்னுடைய மலர்ப் படுக்கை
வாடி விடுமோ என்ற பயத்தால்..?

No comments:

Post a Comment

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...