Wednesday, May 18, 2011

காதலுக்கு அனுமதி..?


ரோஜாவிடம் அனுமதி கேட்டு
பனித்துளி அதன்மேல் படர்வதில்லை..!
நிலவிடம் அனுமதி கேட்டு
அல்லி மலர் அழகாய்ப் பூப்பதில்லை...
பூவிடம் அனுமதி கேட்டு
தேனை வண்டு குடிப்பதில்லை..!
அதே போலத்தான்
யாரிடமும் அனுமதி கேட்டு
வருவதில்லை காதல்..!
அன்பொழுகும் அழகைக் கண்டால்
ஆர்ப்பரித்து வந்து விடும் காதல்..!
உன் மேல் நான் கொண்டதைப் போல..!

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை)

24 comments:

  1. ம்...ம்...ம்...ம்

    யார் அந்த ரோஜா .........?

    ஆர்ப்பரித்து வந்த காதலை அவள் ஒப்கொண்டாலா தோழா ....?

    பி

    புவனா

    ReplyDelete
  2. நான் சொல்லி ஒத்துக் கொள்ளாமல் இருக்குமா என் ரோஜா...


    வருகைக்கும், கருத்துரைக்கும் எனது நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. காதலும் விபத்தும் ஒன்றென்று நினைக்கிறேன் . கவிதை அருமை

    ReplyDelete
  4. வாங்க சங்கர்...

    தாங்கள் சொன்ன உவமையும் சரிதான்...

    வருகைக்கும், ரசித்தமைக்கும் எனது நன்றிகள்..

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க,,!

    ReplyDelete
  5. ரோஜாவிடம் அனுமதி கேட்டு
    பனித்துளி அதன்மேல் படர்வதில்லை.\\\\\\

    ம்ம்ம்ம..இதற்கு விடையளிக்க உங்கள்
    நண்பரைக் உதவிக்கு அழைக்கலாமா?

    பனித்துளி சங்கர்
    அவர்களே!அனுமதியில்லாத...அனுபவமுண்டா?

    மோகனன்,உங்கள் நண்பர்
    விளக்கம் கொடுத்தால்
    நான்வாங்கிக்கொள்கிறேன்..
    திட்டுவிழுந்தால் நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  6. அன்பொழுகும் அழகைக் கண்டால்
    ஆர்ப்பரித்து வந்து விடும் காதல்\\\\


    அப்படியா? உங்களுடன் பேசும்,பழகும்
    நான்கைந்து பெண்கள் அன்பொழுகப் பேசினால்...........!?
    அப்புறம் காதல்மன்னரா?

    ReplyDelete
  7. ராஜாவின் காதலுடன்...
    பனித்துளிரோஜா
    ஜோராக இருக்கிறது

    வணக்கம் புவனா,
    நான் நலமே.நன்றிஉங்கள் அன்புக்கு!!
    மோகனன் உருகாக்கியதுதான் இங்கிலாந்து...
    நான் அங்கில்லை புவனா

    மோகனனுக்குக் தெரியாமல் உங்களுக்கு
    மட்டும் சொல்லட்டுமா.........?

    ReplyDelete
  8. வாங்க கலா

    ம் ம் ம் ........ சொல்லுங்கள்

    ReplyDelete
  9. தேரை இழுத்து தெருவில் விட்டு விடுவதில் கலா கில்லாடி என்று எனக்குத் தெரியும்...

    இன்று உலகமே தெரிந்து கொள்ளட்டும்... இதற்கு நான் பொறுப்பாளி அல்ல கலா...

    வருகைக்கு நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  10. என்னை அடிவாங்கி வைக்காம விடமாட்டீங்க போலருக்கு கலா...

    எனக்கு எதுக்கு இந்த ஜெமினி கணேசன் பட்டமெல்லாம்.. (எனது பாதி பெயர் இதுதானே என்ற குதர்க்கம் வேண்டாம்...)

    நான் என்னவளை நினைத்துத்தான் எழுதினேன்... எல்லோரையும் அல்ல...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  11. இது அநியாயம் கலா...

    தாங்கள் இங்கிலாந்தில் இருப்பதாகத்தான் எனக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் உறுதிப் படுத்தின...

    சொல்லாமல் போங்க... உங்க கூட நான் டூ....

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  12. அன்பான சாமந்தி சொக்கலிங்கம் அவர்களுக்கு..

    தாங்கள் ரசித்து வாழ்த்தியமைக்கு எனது நன்றிகள் பல...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  13. கலா நீங்க ஒனும் பீல் பண்ணாதிங்க டூ விட்டுட்டு எங்க போய்ட போறாரு சென்னை மண்ணில் தான் இருபார்....................

    ReplyDelete
  14. ஒண்ணு கூடிட்டாங்கப்பா... ஒண்ணு கூடிட்டாங்க...

    ஒரு ஆளையே சமாளிக்க முடியாது... இதுல ரெண்டு பேரா...

    என்னால சமாளிக்க முடியாதுப்பா...

    ReplyDelete
  15. இதுக்காகவே நான் சென்னையை விட்டு போறேன்...

    ஆனா எந்த ஊருக்கு போறது..? எங்க போனாலும் எழுதாம என்னலிருக்க முடியாதே..!

    ReplyDelete
  16. kathal ..... kathalidam mattum anumathi ketkum kanna.

    ReplyDelete
  17. அப்படியா... இது எனக்குத் தெரியாதே...

    ம்.. சரி... ஒத்துக்கறேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  18. sithirayil piranthavaruku than valthukala! vaigasila pirantha ilaya.

    ReplyDelete
  19. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அகிலனுக்கு . வருங்கால கவிஞனுக்கு!

    ReplyDelete
  20. Anna Ungal padaippukal silavarrai enathu facebook il veli ittullen...

    Ungal anumathi kidaithal enakku migavum santhosamaga irukkukm.

    Ithil Yehenum thavarugal irunthal Mannikkavum.

    This is my E-mail Id.: beautybalu003@gmail.com

    ReplyDelete
  21. அன்பு ஸ்ரீக்கு

    என் சார்பிலும் என் அகிலன் சார்பிலும் நன்றிகள்...

    ReplyDelete
  22. வாங்க ராஜ்...

    தாரளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்...

    என் கவிதைகள் எல்லோருக்கும் சொந்தமானது...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...