Friday, September 4, 2009

எங்கள் ஆசிரியர்..!

கர முதல சொல்லித் தந்த எங்கள் ஆசிரியரே... 
அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...
சை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..!

னிய தமிழ் பயிற்றுவித்த  எங்கள் ஆசிரியையே...
னிய கதை சொல்லித்தந்த  எங்கள் ஆசிரியையே...
ன்ற தாயைப் போல நாங்கள் வணங்குவோம் உம்மையே..!

லக மொழி ஆங்கிலத்தை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...
ண்மைதனை எடுத்துரைத்த எங்கள் ஆசிரியரே...
ர் கேட்க  சொல்லிடுவோம்  உங்கள் பெருமையே..!

ண் கணிதத்தை கற்றளித்த எங்கள் ஆசிரியையே...
ளிமைதனை எமக்களித்த எங்கள் ஆசிரியையே...
ற்றிடுவோம் உன் புகழை உலக ஏட்டினிலே..!

ம்புலனும் அறிவியலை அறியவைத்த எங்கள் ஆசிரியரே...
யங்களை நீக்கி வைத்த எங்கள் ஆசிரியரே...
ழுக்கம் கற்று நிற்கின்றோம் உங்கள் அன்பு முறையிலே..!

ர் நிலை சமூகஅறிவியலை படிக்க வைத்த எங்கள் ஆசிரியையே...
ர்குலம் நாமெல்லாம்  என்றுரைத்த எங்கள் ஆசிரியையே...
வை போல கற்று தெளிந்தோம் உங்கள் வழியிலே..!

எஃகு போல் உடற்கல்விதனை உய்ய வைத்த எங்கள் ஆசிரியரே...

(எ)ஃகணமும் தொழுது நிற்போம் உந்தன் பணியையே..!
                                                             

(செப்டம்பர் 5 அன்று ஆசிரியர் தினம், இந்நாளில் என்னை இந்த அளவிற்கு ஆளாக்கிய எனது ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள் உரித்ததாகட்டும்... வாழ்க ஆசிரியர் குலம்...)

6 comments:

  1. நன்றி தியாகராஜன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  2. காலம் கடந்து வாழ்த்தினாலும்... அது எனக்கு மகிழ்ச்சிதான்...

    ReplyDelete
  3. ரொம்ப அழக உணர்ச்சி புர்வமா இருக்கு.மிகச்சிறப்பு

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...