Tuesday, July 13, 2010

உனைக் காணும் ஆர்வத்தில்..!

பூங்காவனத்தில்
நீ எனக்காக காத்திருந்து
தவிப்பது
பிடித்திருக்கிறது..!
அதற்காகவேனும்
சற்றுத் தாமதமாக
வர முயற்சிப்பேன்..!
ஆனால் உனைக் காணும்
ஆர்வத்தில்
வெகு சீக்கிரமாகவே
வந்து விடுகிறேன்..!
இதுதான் காதல் மயக்கமோ..?

6 comments:

  1. ஆர்வத்தில்
    வெகு சீக்கிரமாகவே
    வந்து விடுகிறேன்..!
    இதுதான் காதல் மயக்கமோ\\\\\\

    நண்பரே! இன்னும் இரண்டு,மூன்று
    பூங்காக்களுக்கும் போக வேண்டுமென்ற
    அவசரமாயுமிருக்கலாமல்லவா?


    இப்படித்தான் இப்போது காலம்
    நகர்கிறதய்யா!

    காதல் மயக்கத்தில்
    பூ வ{த}னம் தேடிப்
    புறப்பட்ட கவி
    அற்புதந்தான்
    நன்றி மோகனன்

    ReplyDelete
  2. //காதல் மயக்கத்தில்
    பூ வ{த}னம் தேடிப்
    புறப்பட்ட கவி
    அற்புதந்தான்
    நன்றி மோகனன்//

    நீங்கள் என்னை விட மிக அழகாக கவி சமைக்கிறீர்களு கலா... வாழ்த்துக்கள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. அருமையான கவிதை கலா சொல்லிருப்பது உண்மையில்லாமல் இருந்தால் நல்லது

    ReplyDelete
  4. வாங்க ஹசீம்...

    கலா மட்டும்தான் என்னை சீண்டிக் கொண்டிருந்தார்... இப்போது தாங்களும் அவருடன் இணைந்து விட்டீரா...

    இருப்பினும் தோரழே.. தங்களின் வருகைக்கும், இணைப்பிற்கும், அழகான (?) கருத்திற்கும் எனது நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. நன்றி நண்பா..

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...