Wednesday, September 8, 2010

மலர் வனமெங்கும்..!


மலர்வனத்தில் உள்ள மலர்கள்
எல்லாம் மொட்டவிழ்ந்த பிறகுதான்
நறுமணத்தைப் பரப்புகின்றன..!
ஆனால்... மலர் வனத்தில்
நீ  காலடி வைத்த மறுகணமே
உன் நறுமணம்
மலர்வனமெங்கும் வீசுதடி..!
உன் நறுமணத்தினால்
அம்மலர்கள்
தங்களின் (சு)வாசத்தை மறந்து
உன் வாசத்தில் மயங்கி நிற்கின்றனடி..!

 (என் அன்பான தோழமைகளுக்கு... நான் தற்போது தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்... படிப்பு: எம்.ஏ., இதழியல், வயது 30, தினமணி, ஆனந்த விகடன் குழுமங்களில் பணியாற்றிய அனுபவங்களுடன் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். இருப்பிடம்: சென்னை. வேலை தேடுவதும் சென்னையில்... தங்களுக்குத் தெரிந்து ஏதேனும் தமிழ் ஊடகம் சார்ந்த. சாராத பணிகள் இருப்பின் தயவு செய்து தகவல் அளிக்கவும். நன்றி..!

எனது மின்னஞ்சல் முகவரி: moganan@gmail.com 
எனது கைப்பேசி எண்: 9444296929..!)

8 comments:

  1. நன்றி தோழரே..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  2. கவிதை நல்லாயிருக்கு நண்பா...

    ReplyDelete
  3. ஆனால்... மலர் வனத்தில்
    நீ காலடி வைத்த மறுகணமே
    உன் நறுமணம்
    மலர்வனமெங்கும் வீசுதடி\\\\\\

    “மெய்” வனத்தில்
    மலர்ந்த
    பொய் மனம் உரைப்பது
    புகழாரமா?

    காயமே இது பொய்யடா......

    மலர் வதனம் உங்களை
    ரொம்பத்தான் ஈர்க்கின்றதோ?
    வண்டல்லவா....!!

    ReplyDelete
  4. மிக்க நன்றி தோழா..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. வாங்க கலா...

    என் கவிதையை விட உங்களின் கருத்துரை அருமையாக இருக்கிறது..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. விரைவில் வேலை கிடைக்க பிராத்திக்கிறேன், வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மிக்க நன்றி தோழரே..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...