Saturday, April 23, 2011

கோடை மழையின் சாரல் மழை..!


கொளுத்தும் வெயிலில்
கோடை மழையின்
சாரல் மழை
சரம் சரமாக வழிய...
அம்மழைச்சரங்கள்
பூமித்தாயின் உடலெங்கும்
முத்த மழை பொழிய
அவளோ புளங்காகித்தில்
மூச்சு விட்டாள்..!
நம் நாசியில் அவள்
மண் மணம் பரவ
நம் அனைவரின் உடலெங்கும்
புத்துணர்ச்சி பரவ...
நம் இதழ் நமையறியாமல்
புன்னகை பூக்கும்..!
கிராமத்து மண் மணத்தில்
கிறுகிறுத்துப் போகாதோர் யார்?
அவ்வாசனையை பாழும்
சென்னையில் எதிர்பார்த்தேன்
கிடைத்த்தென்னவோ
தார் சிமெண்டின் நாற்றமும்
நகரத்து குப்பைகளின் நாற்றமும்தான்..!

16 comments:

  1. தங்களின் ஏக்கம் நகரத்தில் பூர்த்தியாகாது...

    ReplyDelete
  2. உண்மைதான் சௌந்தர்...

    தங்களின் வருகைக்கு மிக்க நன்றி..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஜோதி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. இம்புட்டு சங்கெதிக
    சொல்லுகிறீகளே! ஏனப்பு அத
    விட்டுபுட்டு பட்டணத்துக்கு
    வந்தீக.........

    ReplyDelete
  5. வயிற்றுப் பிழைப்புக்காக பட்டணத்துக்கு வந்தவனுங்க...

    என்னங்க செய்யறது மண்மனம் மாறுமா? என் மனமும்தான் மாறுமா?

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. rasithu parungal nagramum vasanai veesum.

    ReplyDelete
  7. பார்த்தேன்... வாசனை வீசவில்லை...

    வருகைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  8. நண்பர் மோகன் வலைப்பூ உலகில் உங்கள் சேவை மிகவும் வரவேற்பைப் பெற்றுவருவதை அறிந்து மகிழ்கிறேன். வாய்க்கும் போது என் வலைப்பூவுக்கு வாருங்கள் http://www.doordo.blogspot.com/ வலைப்பூ உலகில் சிறப்பாக இயங்கி வரும் நண்பர்களை அடையாளம் கண்டு அவர்களை பேட்டி எடுக்க இருக்கிறேன். உங்களையும் அந்தப் பட்டியலில் இணைக்கலாம் என்பது என் விருப்பம். அதற்கு உங்களுக்கு விருப்பம் இருப்பின் என் மின்னஞ்சல் அல்லது செல்பேசிக்கு தொடர்பு கொள்ளுங்கள். பேசுவோம்.

    ReplyDelete
  9. வணக்கம் நண்பா...

    தாங்கள் கூறும் அளவிற்கு நான் பெரியவனல்ல... மிகவும் எளியவன்... இருப்பினும் தங்கள் அன்பிற்கு நான் தலைவணங்குகிறேன்...

    எனது மின்னஞ்சலுக்கு, தாங்கள் மின்னஞ்சல் செய்ய வேண்டுகிறேன்... தாங்கள் கேட்ட தகவல்களைத் தருகிறேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  10. Thanking u Mohanan Sir....


    பூமித்தாயின் உடலெங்கும்
    முத்த மழை பொழிய
    அவளோ புளங்காகித்தில்
    மூச்சு விட்டாள்..!
    நம் நாசியில் அவள்
    மண் மணம் பரவ
    நம் அனைவரின் உடலெங்கும்
    புத்துணர்ச்சி பரவ...
    நம் இதழ் நமையறியாமல்
    புன்னகை பூக்கும்..! I like this lines


    By Bhuvana

    ReplyDelete
  11. ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி புவனா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  12. Nan antha man vasathai nangu unarthen athanal than ungalidam kavithai keten.......

    Nan ether partha atha varikal very nice ..........

    Thanks mohanan Sir...

    By Bhuvana

    ReplyDelete
  13. ஒரு பெண் கவிதை
    என்னிடம் கவிதை கேட்டமைக்கு மகிழ்ச்சி...

    அக்கவிதை அப்பெண்கவிதையை மகிழ்ச்சிப் படுத்திற்று என்று அறிந்த பின் மகிழ்ச்சி மடை திறந்த வெள்ளமானது...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  14. அற்புதமான வரிகள் நன்றி மோகனன்

    ReplyDelete
  15. ரசித்தமைக்கு மிக்க நன்றி புவனா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...