Saturday, December 10, 2011

மழையினை ரசிக்கும்..!



எனை விடுத்து...
மழையினை ரசிக்கும்
என் மதி மலரே..!

மழை முகம் கண்டதும்...
உன் புன்னகையை மேகத்திடம்
காட்ட சென்றாயோ..?

உன் புன்னகை கண்டு
பூரித்த மழை மேகமோ
கண்ணை மின்னலாய் சிமிட்டியதோ..?

உன் கார் கூந்தலைக் கண்டு
பொறாமை கொண்ட வானமகள்
தன் மேகக் கூந்தலை மென்மேலும்
கருமையாக்கியாக்கினாளோ..?

இவை எதையும் நானறியேன்...
வான் நிலவை மறைத்த மேகம்
மழையாய்ப் பொழிவது போல்...
என் நிலவை குடையால்
மறைத்து காதலைப் பொழிவேனடி..!

12 comments:

  1. புரியுது நண்பா புரியுது!
    அருமை!
    பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  2. வந்து ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. Very Nice!!!!!!!

    I Need kavithai for the topic of Vali arithal!!!!!!

    Saranya R

    ReplyDelete
  4. உங்கள் கவிதை மழையில் நனைந்தேன்...

    கவிதை நன்றாக உள்ளது...

    Vijay Chandran

    ReplyDelete
  5. helo sir

    gd mng u r kavithai so nice

    Prabhu C

    ReplyDelete
  6. பாராட்டிற்கு நன்றி சரண்யா...

    'வலி அறிதல்'தானே... விரைவில் தருகிறேன்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. ரசித்து வாழ்த்திநமைக்கு மிக்க நன்றி விஜய் சந்திரன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  8. வாங்க பிரபு...

    ரசித்தமைக்கு எனது நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  9. எப்படி நண்பரே உங்களால் மட்டும் மட்டும் இப்படியல்லாம் முடியுது

    really very grate Ganesh

    I Like Kavithai

    Thanks

    By
    Bhuvana

    ReplyDelete
  10. வாங்க புவனா...

    எல்லாம் ஒரு பூவையால் விளைந்ததுதான்...

    அவள் விளைத்தால் நான் அதை படையாலாக்கினேன்... அவ்வளவே..

    அந்த 'பூவி'ற்கு அவ்வளவு காந்தம்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  11. super pa ramba thanks..!

    shanthi ganeshan

    ReplyDelete
  12. கவிதையை ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சாந்தி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...