‘எப்போதும்
மகிழ்வுடன் இருக்கிறாயே...
அதெப்படிடா’ என்று
என்னிடம் கேட்கும்
போதெல்லாம்
இந்த இதழாளனின்
இதழோரம்
ஒரு மெல்லிய புன்னகை
கசியும்..!
அந்த கசிவில் நீ
கலந்திருப்பதை
அறிந்திருந்தாலும்
என் இதழால்
அறிய
வேண்டுமென்பதற்காகவே
அடிக்கடி கேட்கிறாய்
நீ..!
கேள்வி கேட்பவனையே
கேள்விக்குறியாக்கிய உனக்கு
இதெல்லாம்
சொல்லியா கொடுக்க
வேண்டும்..!
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...