Friday, December 11, 2015

உன் கண்ணீரில் இங்கு..!



 
என் மீதுள்ள கோபத்தில்
எனை நீ கொலையே
செய்தாலும் கூட
கொம்பேறி மூக்கனாய்
ஏற்றுக் கொள்வேனடி..!
பெருங் கோபத்திற்கு பதிலாய்
உன் மை விழிகள்
கண்ணீர் உதிர்க்கிறதென்றால்
அதை மட்டும் என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லையடி…
உன் கண்ணீரிலிங்கு
கரைவது என் மனம் மட்டுமல்ல
என்னுயிரும்தானடி..!

2 comments:

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...