கல்வி
ஒளியற்று
இருண்டு
கிடந்த
தமிழகத்தை
கல்வி
ஒளியால்
வெளிச்சமேற்றிய
ஒப்பற்ற
ஒளிவிளக்கு
காமாட்சி
எனும் விளக்கு
காமராசர் எனும்
தமிழ் விளக்கு!
தமிழ் விளக்கு!
**************************
பனையோலையில்
'தொட்டணைத்தூறும்
மணற்கேணி'
என்றார்
திருவள்ளுவர்
ஏழைகளின்
மன ஒலையில்
கற்றணைத்தூறும்
கல்வி அறிவு
கல்வி அறிவு
என்று
எழுதாமல்
அரசுப்பள்ளிகளின்
மூலம்
எழுத வைத்து
கல்விச்
செம்மல்
எங்கள்
காமராசர்
ஏழைகளுக்கு
கல்விக்கண் திறந்த
ஏழைகளுக்கு
கல்விக்கண் திறந்த
காமராசர்!
**************************
எனைப்போன்ற
கல்வி வாசம் அறியா
குழந்தைகளுக்கு
கடையேழு வள்ளல்களை
அறிமுகப்படுத்தியது
யாரென்று கேட்டால்
இலக்கியமில்லை
புத்தகமில்லை
ஆசிரியரில்லை
கல்வி தந்த வள்ளல்
காமராசர் என்பேன்!
**************************
(எங்களின் கல்வி வள்ளல் காமராசரின் பிறந்தநாள் வரும் ஜூலை 15 அன்று வருகிறது. அதற்காக இந்த குட்டிக்கவிதைகள் சமர்ப்பணம்... கடலை கடுகில் அடக்கமுடியாது... அவரின் புகழை எதனாலும் அடக்க முடியாது...)
அருமை நண்பா...
ReplyDeleteமகிழ்கிறேன் நட்பே...
ReplyDelete