பிறருக்காக வாழ்! - செல்பி கவிதை
முகநூலில்
முகமறியா நண்பர்களுக்கு
முகம் காட்ட வேண்டும்
என்பதற்காகவும்...
வாட்ஸ் அப்பில்
மணிக்கொரு முறை
புரொபைலை
மாற்ற வேண்டும்
என்பதற்காகவும்
தினந்தோறும்
உயிர்ப்பிக்கப்படுகின்றன
திடீர் செல்பிக்கள்!
வாழ்க இதிலேனும்
'பிறருக்காக வாழ்'கின்ற
தத்துவம்!
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...