Friday, January 28, 2011
Thursday, January 27, 2011
Tuesday, January 25, 2011
உன்னோடு என் நினைவுகள்..! - 250 வது கவிதைப் பதிவு
பத்து மாதங்கள் சுமந்து
பெற்றெடுப்பது மட்டுமல்ல
பத்து வினாடிகள்
மனதில் சுமந்து
மனதில் சுமந்து
பெற்றெடுப்பது கூட குழந்தைதான்..!
என் கவிதைகளைத்தான்
குழந்தை என்று சொல்கிறேன்..!
அதிலும் அக்குழந்தை...
எனக்குப் பிறந்த
எனக்குப் பிறந்த
குழந்தை என்பைதை விட
நமக்குப் பிறந்த குழந்தை என்றுதான்
சொல்(ல விரும்பு)கிறேன்..!
அதெப்படியடா
அறிவாளி
நம் குழந்தையாகும்..? -
அறிவாளி
நம் குழந்தையாகும்..? -
என்று நீ கேட்கலாம்...
ஆணும் பெண்ணும்
உடலளவில் சேர்வதால்
கண் நிறைந்த குழந்தை பிறக்கிறது..!
உன்னோடு என் நினைவுகள் சேர்வதால்
கவிதையெனும் குழந்தை பிறக்குதடி..!
கண் நிறைந்த குழந்தைக்கு
காரணம் யார் என்று
தாய் சொன்னால்தான்
தாய் சொன்னால்தான்
தந்தை யாரென்று தெரியவரும்..!
என் கவிக்குழந்தைக்கோ...
தந்தை சொன்னால்தான்
இக்குழந்தைக்கு
தாய் நீ என்று தெரிய வரும்..!
தாய் நீ என்று தெரிய வரும்..!
கருவைச் சுமப்பதால் நீ தாயாகிறாய்...
உன்னையும் உன் உணர்வுகளையும்
நம் கவிக்குழந்தைகளையும்
சுமப்பதால் நான் எல்லாமுமாகிறேன்..!
சுமப்பதால் நான் எல்லாமுமாகிறேன்..!
(இது என்னுடைய 250-வது கவி(க்குழந்)தைப் பதிவு... இதனை எனது அன்பிற்கினியவளுக்கும், இவ்வுலகில் அன்பைச் சுமந்து கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்..!
தொடரும் உங்களது மேலான ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்)
தொடரும் உங்களது மேலான ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்)
Thursday, January 20, 2011
நீலவானம் போல..!
அமாவாசை இரவில்
நிலவை இழந்து தவிக்கும்
நீலவானம் போல…
நீ எனை சந்திக்க வராத
நாட்களில்
நானும் தவித்துப்
போகிறேன் அன்பே!
Friday, January 14, 2011
தையலெனும் தைமகள் வருகிறாள்..!
மதி நிறை மார்கழித் திங்கள்
மறையத் துவங்க...
தையலெனும் தைமகள்
தலை நிமிர்ந்து வருகிறாள்...
தமிழர்களின் உளம் மகிழ வருகிறாள்...
தமிழர்த் திருநாள் போற்ற வருகிறாள்..!
வரவேண்டும்...
வர(ம்)வேண்டும் தமிழ்ப்பெண்ணே
உமை வேண்டி பாடுகிறேன்
தமிழ்ப்பண்ணே..!
நூறு கிலோ அரிசி மூட்டையைச்
சுமப்பவனால்
நல்ல அரிசி ஒரு கிலோ
வாங்கிச் சாப்பிட வழியில்லை..!
ஒரு கிலோ நல்லரிசி வாங்கி
உண்பவனால்
நூறு கிலோ அரிசி மூட்டையைச்
சுமக்க வக்கில்லை..!
பட்டாடை நெய்கின்ற நெசவாளரால்
சிறுபட்டாடை வாங்கியணிய வசதியில்லை
பட்டு வாங்கும் பணக்காரர்களுக்கு
நெசவாளர் நலனறியப் போவதில்லை..!
போதுமிந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்
எல்லோரும் எல்லாமும் பெற
வறியோர்கள் உடையோர்கள் எனும்
ஏற்றத் தாழ்வு மறைய...
தமிழான தைமகளே தயை புரி..!
ஈழத்து மண்ணில் எம்மக்கள்
இருக்கின்ற இரும்புச்சிறையினை
இருக்குமிடமில்லாமல் செய்..!
உலகத்து தமிழரெல்லாம்
ஒன்றுபட்டு நிற்கும் நிலையினை
இப்புவிதனில் மலரச் செய்..!
அனைவரின் நெஞ்சிலும்
அன்பை விதைத்து...
தீவிரவாதத்தை தீயிட்டழித்து
உயிர் வதையினை உருத்தெரியமலழித்து
உலகெங்கும் அமைதியை பரவச் செய்..!
வியர்வையை உடலில் வரைபடமாக்கி
உழைக்கின்ற பாட்டாளி வர்க்கமும்
வியர்வையை நிலத்தில் நெல்மணியாக்கும்
உயர்ந்த என்னுழவர் வர்க்கமும்
வாழ்வாங்கு வாழ தைமகளே வழி செய்..!
(என் அன்பிற்கினிய வாசக நெஞ்சங்களுக்கு, அடியவனின் இனிய திமழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்...
என்றென்றும் அன்பு'டன்'
உங்கள்
மோகனன்)
Wednesday, January 12, 2011
அரசி நீ எனில்..!
பூவிற்க்கெல்லாம்
அரசி நீ எனில்...
வண்டிற்கெல்லாம்
அரசன் நான்..!
மரங்களுக்கெல்லாம்
அரசி நீ எனில்...
மண்ணுக்கெல்லாம்
அரசன் நான்..!
பூந்தோட்டத்திற்கெல்லாம்
அரசி நீ எனில்...
தென்றலுக்கெல்லாம்
அரசன் நான்..!
கடலுக்கெல்லாம்
அரசி நீ எனில்...
மழைக்கெல்லாம்
அரசன் நான்..!
கவிதைக்கெல்லாம்
அரசி நீ எனில்...
கவிஞர்களுக்கெல்லாம்
அரசன் நான்..!
காதலுக்கெல்லாம்
அரசி நீ எனில்...
உன் காதலுக்கெல்லாம்
அரசனல்ல, அடிமை நான்..!
Monday, January 10, 2011
உன்னருகில் நானிருக்க..!
நீ மகிழ்ச்சியாய் இருக்கும் போது
உன்னருகில் நானிருப்பதை விட
நீ துன்பத்தில் துவளும் போது
உன்னருகில் நானிருக்க
ஆசைப்படுகிறேன் அன்பே..!
ஏனென்றால்...
உனக்கு நான் எப்போதும்
ஆதரவாய்த் தோள் கொடுப்பதையே
விரும்புகிறேன்..!
Friday, January 7, 2011
ஈழத்தமிழ் மண்ணுக்கே..!
இன்னுயிர் தமிழ் மறவா
ஈழத்தமிழர் இலங்கையில்
சுதந்திரப் போரை நடத்தினர்..!
மாவீரன் பிரபாகரன்
தலைமையில் ஒன்றிணைந்து
தனிநாடு கேட்டு நின்றனர்..!
எதிரிகளோ எம்தமிழரை
எள்ளி நகையாடினர்
எங்கும் துன்பத்தை இழைத்தனர்
திகதி தோறும் நல்பொழுது
விடியாதா என விழித்திருந்தோரை
அகதியாக்கி விரட்டினர்..!
பொறுத்தது போதுமென்று
வீர மறவப் புலிகள்
போர் முரசம் கொட்டினர்..!
வெங்குருதி பெருகினாலும்
செங்குருதி மருகினாலும்
சுதந்திரம் வேண்டி போரிட்டனர்!
செஞ்சோற்றுக் கடனாற்ற
செந்தமிழர் வருவானென்று
ஈழத்தமிழர் எதிர் நோக்கவில்லை!
எதிரிகளைச் சிதறடிக்க
எமதிரு தோள்கள் போதுமென்று
பொருதிப் பார்த்தனர்!
உலகெங்கும் உள்ள
பொல்லாத ஓநாய்களுடன்
கை கோர்தது எதிரிப்படை..!
எப்படை வரினும்
எத்துயர் வரினும்
எம்தமிழர் அசரவில்லை!
இறுதி மூச்சு உள்ளவரை
ஈழத்தமிழ் மண்ணுக்கேயென
இன்னுயிரை ஈந்தனர்..!
அவ்வெஞ்சமரில் பாழாய்ப்போன
வஞ்சகர்களின் சதியால் - பல
இசைப்பிரியாக்கள் அழிந்தனர்..!
பல மாவீரர்கள் தங்கள்
மதிப்பற்ற உயிர்களை - ஈழத் தமிழ்
மண்ணுக்கீந்தனர்..!
எம் தமிழ் தலைவர்
அப்போரில் வீர மரணம் எய்து
இறவாப் புகழடைந்தார்..!
ஈழம் அழிந்ததென்று
எதிரிகள் எக்காளமிட்டனர் - உலகமதிர
போர்குற்றங்கள் புரிந்தனர்..!
வேதனைகள் அரங்கேறுவதை
உலகமே வேடிக்கைதான் பார்த்தது...
தடுப்பார் யாருமில்லை..!
ஏ... ஈனங் கெட்ட எதிரிகளே...
போர்முறை தெரியாப் புல்லர்களே
புழுவினும் கீழானவர்களே..!
நாங்கள் மண்ணில் புதையவில்லை
ஒவ்வொருவரும்
விதைக்கப் பட்டிருக்கிறோம்..!
பீனீக்ஸ் பறவை போல்
மீண்டெழுவோம்...
தமிழரை நிலை நாட்டுவோம்..!
(இசைப் பிரியா கொடுராமாக கொலை செய்யப்பட்டது முதலே மனதில் வலி இருந்து கொண்டே இருந்தது... அதை மிகத் தாமதாகப் பதிவு செய்திருக்கிறேன்... ஈழத்தில் பிறந்திருந்தால். என்னுயிரைக் கொடுத்து ஈழத்தை மீட்டிருப்பேன்... தமிழகத்தில் பிறந்து தொலைத்ததால், ஈழத் தமிழனுக்கு உதவாத ஈனப்பிறவியாகி விட்டேன்... ஈழத் தமிழர்களே எனை மன்னியுங்கள்...)