Wednesday, December 30, 2015
Monday, December 21, 2015
Friday, December 11, 2015
Saturday, November 28, 2015
Friday, November 27, 2015
அடிக்கடி கேட்கிறாய் நீ..!
‘எப்போதும்
மகிழ்வுடன் இருக்கிறாயே...
அதெப்படிடா’ என்று
என்னிடம் கேட்கும்
போதெல்லாம்
இந்த இதழாளனின்
இதழோரம்
ஒரு மெல்லிய புன்னகை
கசியும்..!
அந்த கசிவில் நீ
கலந்திருப்பதை
அறிந்திருந்தாலும்
என் இதழால்
அறிய
வேண்டுமென்பதற்காகவே
அடிக்கடி கேட்கிறாய்
நீ..!
கேள்வி கேட்பவனையே
கேள்விக்குறியாக்கிய உனக்கு
இதெல்லாம்
சொல்லியா கொடுக்க
வேண்டும்..!
Wednesday, November 25, 2015
Tuesday, November 24, 2015
வெள்ளத்தால் வீழ்ந்து சாகிறோம்
ஒற்றையாளாய்
ஊரின் எல்லையில்
கம்பீரமாய் நின்று
ஊரைக்காக்கும்
எல்லைச்சாமி..!
ஊருலகம்
நீர் நிறைவாய் வாழ
ஒற்றைக் காலில்
தவம் கிடக்கும்
முனிவன்..!
கரும்பாசிகள்
கயல்கள்
கரு நண்டுகள்
என நீராதாரம் காக்கும்
கடவுள்..!
ஊருணி நிறைய
உழைக்கும்
விவசாயிகள் மகிழ
உயிர் நீர் காக்கும்
உத்தமன்!
ஆபத்து காலங்களில்
இரும்பென நின்று
இடர்தனை
நீக்கும்
பெரும் கரும்பன்..!
காவிரியே ஆனாலும்
கல்லணையே ஆனாலும்
கரும் வைரமாய்
தாங்கி நிற்கும்
கம்பீரன்
காகம், குருவிகளுக்கு
மட்டுமின்றி
மானிடத்திற்கும்
நன்மை பயக்கும்
அபயன்..!
இப்படி
எத்தனை வகையில்
எடுத்துச் சொல்லினும்
உன் சிறப்புகளை
வரிகளில் அடக்கமுடியவில்லை..!
கரைகளை கவ்விப்
பிடித்த உன் கருங்கரங்களை
கருணையின்றி
வெட்டி வீழ்த்தினோம்
கண்ட துண்டமாக்கினோம்
ஆக்கிரமிப்புகளால்
உனை அடியோடு வீழ்த்தினோம்…
இன்று வெள்ளத்தால்
வீழ்ந்து சாகிறோம்
பனை மரமே!
Monday, November 23, 2015
Friday, November 20, 2015
காதலில் நாணயம்..?
"எனை நேசிப்பதில்
நாணயமாக
இருப்பாயா..?" என்று
என்னவள்
என்னிடம் கேட்டாள்..!
"அன்பு காட்டுவதில்
இருந்து
அரவணைப்பது வரை
எல்லாவற்றிலும்
நாணயமாய் இருப்பேனடி"
என்று அவள் தலையலடித்து
சத்தியம் செய்தேன்...
"உன்னால் அப்படி
நாணயமாக
இருக்க முடியாது
சோதித்து பார்க்கலாமா..?"
என்று சவால் விட்டாள்!
"காதலில்
என் நாணயத்திற்கு
சோதனையா..?
சோதித்துப் பார்..!"
என்று எதிர் சவால்
விட்டேன்
"அப்படியா..?
அதையும் பார்க்கலாம்...
எங்கே எனக்கு
சத்தமில்லாமல்
ஒரு முத்தம் தா..!"
என்றாள்
தீராக் காதலால்
ஓராயிரம்
முத்தச் சந்தம்
தந்தேன்..!
எனையறியாமல்
நாணயம் இழந்து
நின்றேன்..!
Wednesday, November 18, 2015
'தண்ணி'யும் அரசும்..!
அன்று –
ஊரெல்லாம்
‘தண்ணி’ என்று
‘குடி’மக்களிடம் சொன்னது அரசு…
‘குடி’ மக்கள் அதை
கண்டுகொண்டனர்…
கொண்டாடியது அரசு..!
இன்று –
இன்று –
ஊரெல்லாம்
தண்ணி என்று
அரசிடம் சொன்னது
பொதுமக்கள்…
கண்டு கொள்ளவில்லை அரசு
திண்டாடினர் மக்கள்..!
(தீபாவளியை ஒட்டிய ஒரு வார டாஸ்மாக் வருமானம் ரூ. 500 கோடிக்கும் மேல்... தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புக்கு அரசு ஒதுக்கீடு ரூ. 500 கோடி மட்டும்)
(தீபாவளியை ஒட்டிய ஒரு வார டாஸ்மாக் வருமானம் ரூ. 500 கோடிக்கும் மேல்... தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புக்கு அரசு ஒதுக்கீடு ரூ. 500 கோடி மட்டும்)