கல்விக் கண் திறந்ததினால்
எங்கள் கல்வித் தந்தை ஆனீர்..!
எளிமை வாழ்க்கை வாழ்ந்ததினால்
ஏழைகளின் ஏந்தலானீர்..!
அரசியலில் நேர்மைதனை காத்ததினால்
அரசியலுக்கே ஆசானானீர்..!
பல தொழிற்சாலைகள் திறந்ததினால்
நாட்டின் தொழிற்தந்தை ஆனீர்..!
நீரணைகள் கட்டியதால் தாகம்
தீர்த்த தீர்க்கதரிசியானீர்..!
பஞ்சமர்களும் பணிந்து கிடக்கவிருந்த
குலக்கல்வி திட்டத்தினை அழித்தீர்..!
பாமரக் குழந்தைகளும் கல்வி பயில
பல கல்வி சாலைகள் படைத்தீர்..!
மதிய உணவுத் திட்டம் படைத்து
மகத்தான வெற்றி பெற்றீர்..!
கடைக்கோடி ஏழையும் பயனுற
ஏற்ற பல திட்டமமைத்தீர்..!
உம் போன்ற ஓர் ஒப்பற்ற தலைவனை
இத்தமிழ்நாடு மட்டுமல்ல
எந்நாடும் கண்டதில்லை ஐயா..!
அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினை
யாரும் வாழ்ந்ததில்லை ஐயா..!
நீ பிறந்த இந்நாட்டில்
நானும் பிறந்திருக்கிறேன் என
நினைத்து பேருவகை கொள்கிறேன்..!
நீ பிறந்த இந்நாளில்
உன்னடி தொட்டு உன் வழி
நடக்கின்றேன் ஐயா..!