ஓ… என் நீதி தேவதையே
பெண்கள் நாட்டின் கண்கள் என
இருந்த இந்நாட்டில்
இன்று அப்பெண்களின்
கண்கள் மட்டுமல்ல
உயிரினும் மேலான கற்பும்
அவர்களின் உயிர்களுமல்லவா
பறிக்கப்படுகிறது?
நீதியில் பாரபட்சம் கூடாது
பந்த பாசத்திற்கு இடம் தரக்கூடாது
என்றுதான் நீதிதேவனை நிறுத்தாமல்
நீதி தேவதையான உன்னை
நீதியை நிலை நாட்ட
நிறுத்தியிருக்கிறார்கள்..!
உன் இனத்திற்கு நேரும் கதியைப் பார்..!
தில்லியில் அன்று நிர்பயா…
சேலத்தில் நேற்று 5 வயது சிறுமி
சென்னையில் இன்று உமா…
எங்கே சென்று கொண்டிருக்கிறது
இந்தச் சமூகம்..?
ஆணினம் அழிவினத்தின்
உச்சமாகிக் கொண்டல்லவா போகிறது..?
அதை அடக்காமல் விடலாமா?
உன்னிடமுள்ள நீதியெனும் வாளை
கூர் தீட்டிக் கொள்…
காம வெறி பிடித்த கயர்களை
கூண்டிலேற்றிக் கொல்…
அவன் ஆண்டியாக இருந்தாலும்
ஆதிமுதல் பணக்காரனாக இருந்தாலும்
விடாதே… விடாதே கொல்..!
சிறுமியென்றும் பாராமல்
துவம்சம் செய்த அரக்கர்களை அழி
பெண்ணை ஒரு மனுஷியாகக்கூட பார்க்காத
அந்த பாதகர்களை ஒழி...
எவனையும் எக்காரணம்
கொண்டும் மன்னிக்காதே
உன்னினத்தை
நீயே காப்பாற்றவில்லையெனில்
இனத்துரோகி ஆகிவிடுவாய்..!
காம வெறி பிடித்து
கற்பழிப்பில் ஈடுபட்ட நாய்களின்
கழுத்தில் மாட்டு சுருக்கு…
இல்லையேல்
அவன் பிறப்புறுப்பை நறுக்கு
இல்லையேல்
நாட்டை விட்டு கடத்து..!
பெண்களை போகப் பொருளாக்கும்
பொல்லா நாய்களை
தீயில் போட்டு பொசுக்கு..!
தன்னை பெற்ற தாயும்
ஒரு பெண் என மறந்த நாய்களை
தன்னுடன் பிறந்த சகோதரியும்
ஒரு பெண் என்பதை மறந்த ஈனப்பன்றிகளை
அழித்தெடுக்க தண்டனைகளை கடுமையாக்கு
குடிதனை அமல்படுத்தியிருக்கும்
ஆட்சிக்கும் சவுக்கடியை நீட்டு
அப்போதுதான் மாறும் இந்நிலை..!