உனைக் கண்டதும்
கட்டற்ற காட்டாற்று
வெள்ளமாய் நான்...
அதில் மூழ்கித் திளைக்கும்
மோகனச் சிலையாய் நீ...
பல்லாண்டுகளாக மனதில்
புதைத்து வைத்திருந்த காதலை
யார் முதலில் வெளிப்படுத்துவது
என்ற போட்டியில் நாம்…
உணர்ச்சிகளின் பிரவாகத்தில்
நம் உயிர்கள் கரைந்து போக
உடலியக்கம் அனைத்தும்
உற்சாக மிகுதியில் உறைந்து போக...
உன் காதலைச் சொன்னாய்..
எனை காற்றில் நிறைத்'தாய்'
முத்தான என் முத்‘தாரமே’
அந்நாளில் இரண்டாம் உலகம் தந்‘தாய்’
மீண்டும் நான் புதி'தாய்’
பிறந்தது போன்ற உணர்வினை தந்'தாய்’
அணைப்பில் அழியா ஒவியமானாய்
அன்பில் அன்னையின் காவியமானாய்…
அன்பே உன் அன்பில்
அகழ்ந்து புதைந்து போகிறேன்
உன்னுள் புதைபொருளாய்..!