தமிழ்க் கவிதைகள்..!
ட்விட்டரில் தொடர
http://twitter.com/moganan
Wednesday, December 30, 2015
அழுதது மரம்..!
புவி தழைக்க
மழை வேண்டி
மரம் வளர்த்தது
ஒரு கூட்டம்...
மகிழ்ந்தது மரம்..!
மழை வேண்டி
யாகம் நடத்த
மரத்தை வெட்டியது
ஒரு கூட்டம்...
அழுதது மரம்..!
மரம் போல்
வளர்ந்திருக்கும்
மனிதர்களே...
இதில் நீங்கள்
எந்தக் கூட்டம்?
Monday, December 21, 2015
கடவுளைத் தேடும் மனிதர்களே...
மார்க்கத்தில்
கடவுளைத் தேடும்
மனிதர்களே...
மழையில் கரைந்த
மனிதங்களைத்
தேடுங்கள்...
மதங்களைக் கடந்த
மகத்தான
கடவுளாவீர்கள்..!
(மழை வெள்ளத்தில் பல்லுயிர்களைக் காத்த மாவீரர்களுக்கும், நிவாரணப் பணிகளில் களமாடிக்கொண்டிருக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்...)
Friday, December 11, 2015
உன் கண்ணீரில் இங்கு..!
என் மீதுள்ள கோபத்தில்
எனை நீ கொலையே
செய்தாலும் கூட
கொம்பேறி மூக்கனாய்
ஏற்றுக் கொள்வேனடி..!
பெருங் கோபத்திற்கு பதிலாய்
உன் மை விழிகள்
கண்ணீர் உதிர்
க்கிறதென்றால்
அதை மட்டும் என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லையடி…
உன் கண்ணீரிலிங்கு
கரைவது என் மனம் மட்டுமல்ல
என்னுயிரும்தானடி..!
Newer Posts
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Posts (Atom)