எங்கள் அன்பினில்
உதித்த உயிரே…
திங்கள் முகம்தனை
வடித்த உறவே…
சிங்கம் நிகர்த்த
என் மகவே…
தங்கம் இழைத்த
ஆண் நிலவே..!
உன் தாயின்
உதித்த உயிரே…
திங்கள் முகம்தனை
வடித்த உறவே…
சிங்கம் நிகர்த்த
என் மகவே…
தங்கம் இழைத்த
ஆண் நிலவே..!
உன் தாயின்
கருவறையில்…
முத்துப்போல்
துயில் கொண்டு…
துயில் கொண்டு…
பத்துத் திங்கள்
நீங்கக் கண்டு…
நிலவைப் போலின்று
கால் பதித்தாய்..!
இப்புவியில் நீ கால்பதித்து
இப்புவியில் நீ கால்பதித்து
இன்றோடு ஆயிற்று
ஆண்டுகளும் பத்து..!
முத்தமிழின் முதல் தமிழாம்
இயற்றமிழில் உள்ள
நூல்களுளொன்று பதிற்றுப் பத்து..!
தாய்த் தமிழின் மணிமுடியில்
அந்நூலும் ஒரு முத்து..!
என் தாய்த்தமிழின் வீரமும்
என் தாய்த்தமிழின் வீரமும்
குன்றா வளமையும்
உனக்கு வாய்க்கட்டும்..!
உனது எண்ணம் போல்
அறிவியல் துறையில்
உன் மேதமை வாய்க்கட்டும்..!
இன்று போல் என்று வாழ்க
எங்கள் தலைமகனே..!
(இன்று எனது முதல் மகனான க.ஆதித்தனுக்கு 10-ஆவது பிறந்தநாள். அவருக்காக எழுதிய பிறந்தநாள் வாழ்த்து கவிதை இது...)
(இன்று எனது முதல் மகனான க.ஆதித்தனுக்கு 10-ஆவது பிறந்தநாள். அவருக்காக எழுதிய பிறந்தநாள் வாழ்த்து கவிதை இது...)
4 comments:
இன்று பத்தாவது பிறந்த நாள் கொண்டாடும் தங்கள் மூத்த மகன் ஆதித்தனுக்கு உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா...
ஆண் நிலவு...வாழ்த்துகள்...வலைப்பதிவர் விழாவிற்கு உங்களை அன்புடன் விழாக்குழு சார்பாக வரவேற்கின்றோம்..சார்.
அன்புக்கு நன்றி...
வலைப்பதிவர் விழா... சென்னையில் நடக்கும்போது அவசியம் கலந்து கொள்கிறேன் தோழி...
Post a Comment