என்னிடமிருந்து
அன்பு வேண்டாம்...
அரவணைப்பு வேண்டாம்...
துன்பம் வேண்டாம்...
துயரம் வேண்டாம்...
அழுகை வேண்டாம்...
பொய்மை வேண்டாம்...
பேதம் வேண்டாம்...
ஆதிக்கம் வேண்டாம்...
இவை எதுவுமே
எனக்கு வேண்டாமென்று
சொல்கிறாயே...
அன்பொன்றிருந்தால்
அரவணைப்பு வந்துவிடும்!
இவையிரண்டும்
வந்துவிட்டால்
மற்றவை எல்லாம்
உன்னிடம் வாராமல் போய்விடுமே...
அப்புறம் எப்படி
அதனை வேண்டாமென்று
சொல்வாய்..?
No comments:
Post a Comment