தி.நகரில் உள்ள
ஒரு திருமண மண்டபத்தின் முன்
ஆட்டோ நிற்கவே
மண்டபத்தின் முகத்திலுள்ள
முகவரியை சரிபார்த்து
தரை இறங்கினான்
ஆட்டோ ஒட்டுனருக்கு
தரவேண்டிய
தொகையைத் தந்து விட்டு
அவருக்கொரு நன்றியை
உதிர்த்து விட்டு
உள்ளே சென்றான்
மண்டபத்தின் வாயிலில்
வாய் நிறைய
புன்னகையோடு
திசைகள் ஆசிரியர் குழு
வழங்கிய உபசரிப்பை
வணங்கி ஏற்றுக் கொண்டான்
உள்ளே ஐம்பது பேர்
அமர்வதற்கான
நாற்காலிகள் இருக்க
அதில் பாதி நாற்காலிகள்
காலியாகவே இருக்க
அதில் ஒன்றில் அமர்ந்தான்
அமர்வதற்கு முன்
அவன் கையில்
நிகழ்ச்சி நிரல் அடங்கிய
அழகிய கோப்புடன்
அந்த வாரத்தின்
திசைகள் இதழும் அளிக்கப்பட்டது
பத்திரிகையாளர்களுக்கான
பயிற்சிக் கூட்டம்
காலை ஒன்பது மணிக்கு
துவங்குமென
நிகழ்ச்சி நிரலில்
குறிப்பிடப்பட்டிருந்தது
கடிகாரத்தைப் பார்த்தான்
நிகழ்ச்சி துவங்க
இன்னும் ஒன்பது நிமிடங்கள்
இருக்கிறதென்பதை
இயந்திரக் கூடு
இதயம் துடித்துக் காட்டியது
கையிலிருந்த திசைகள்
இதழைப் புரட்டினான்
மூன்றாம் பக்கத்திலேயே
இளம் பத்திரிகையாளர்களின்
பெயருடன் நிழற்படங்களும்
வெளியிடப்பட்டிருந்தது
அந்தாண்டில்
மாணவ பத்திரிகையாளர்களாக
நாற்பத்தி இரண்டு
மாணவர்கள் தேர்வு பெற்றனர்
அதில் நாற்பதாவது
ஆளாக விமலன் இருந்தான்
தன் நிழற்படம் கண்டு
மனமகிழ் கொண்ட
மறு நிமிடம்
நாற்பத்தியோராவது
நிழற்படத்தைக் கண்டதும்
இதயம் துடிக்க மறந்தான்
அச்சமயத்தில்
அவனருகில் அமர்வதற்கு
அழகுக் குயிலொன்று
அனுமதியைக் கேட்டது
அக்குயிலைப் பாராமல்
அனுமதியைத் தந்தான்
அந் நிழற்படத்தை
மீண்டும் ஒருமுறை பார்த்தான்
அங்கே தாமரை
புன்னகை பூத்திருந்தாள்
தன்னையறியாமல்
தாமரை என்று கூவினான்
மூன்றாமாண்டு
தமிழ் இலக்கியம் பயிலும்
முத்தமிழ் மாணவி
காஞ்சி அரசு கலைக்கல்லூரியின்
பேச்சுப்புயல் மான் கவி
என சிறுகுறிப்பு வரைந்தான்
குறிப்பினைப்
படித்துச் சிரித்தான்
குயிலின் படத்தினை
தடவி ரசித்தான்
தாமரை என
அழைத்துச் சிலிர்த்தான்
அவன் அழைத்த மாத்திரத்தில்
'ம்...ம்... சொல்லுங்கள்'
என்பது போல்
தாமரையின் குரலினை
அவன் செவியினிக்கக் கேட்டான்
'ம்...ம்... சொல்லுங்கள்
நான்தான் தாமரை..."
என மீண்டும் தாமரையின்
குரல்தனைக் கேட்டான்
தாமரையின் மயக்கத்தில்
மூழ்கியிருக்கும்
விமலனை
தளிர்க்கரம் ஒன்று
தட்டி எழுப்பியது
கைதட்டி எழுப்பியது
எழுப்பியது யார் என்று
விழித்துப் பார்த்தவன்
தன் விழி மூட மறந்தான்
அங்கே... அங்கே...
அழகுத் தாமரை
அமர்ந்திருந்தாள்
தங்கத் தாமரையாள்
அவனை எழுப்பியது கண்டு
தன்னை மறந்தான்
'ம்...ம்....நான்தான் தாமரை
ஏன் அழைத்தீர்கள்
சொல்லுங்கள்'
என மீண்டும் தாமரை
கேட்டபின்தான்
சுயநினைவுக்கு வந்தான்
பயிற்சி கூட்டம்
அப்போது துவங்கி விடவே
தற்காலிகமாக
தாமரையின் கேள்வியிலிருந்து
தப்பித்துக் கொண்டான்
பத்திரிகையாளர்களின்
பயிற்சிக் கூட்டத்தில்
பத்திரிகை உலகின்
அனைத்து அம்சங்களும்
விவரிக்கப்பட்டன
செய்தி சேகரித்தல்
இக்கட்டான சூழலை சமாளித்தல்
என நாற்பத்தி இரண்டு
மாணவர்களின் திறனும்
பட்டை தீட்டப்பட்டன
அனைத்து நிகழ்வுகளையும்
அச்சு பிசகாமல்
குறிப்பெடுத்துக் கொண்டான்
இடையிடையே
தாமரையை தன் கண்களால்
அளவெடுத்துக் கொண்டான்
உணவு இடைவேளை வந்ததும்
தனியிடம் நோக்கி சென்றான்
அவனிடம் நோக்கி
தாமரை வந்து கொண்டிருந்தாள்
(தொடரும்)
@@@@@@@@@@@@@@@@@@@@@
விமலனின் காதலி! - முதல் பாகம்
விமலனின் காதலி! - இரண்டாம் பாகம்
விமலனின் காதலி! - மூன்றாம் பாகம்
விமலனின் காதலி! - நான்காம் பாகம்
விமலனின் காதலி! - ஐந்தாம் பாகம்
விமலனின் காதலி! - ஆறாம் பாகம்
ஒரு திருமண மண்டபத்தின் முன்
ஆட்டோ நிற்கவே
மண்டபத்தின் முகத்திலுள்ள
முகவரியை சரிபார்த்து
தரை இறங்கினான்
ஆட்டோ ஒட்டுனருக்கு
தரவேண்டிய
தொகையைத் தந்து விட்டு
அவருக்கொரு நன்றியை
உதிர்த்து விட்டு
உள்ளே சென்றான்
மண்டபத்தின் வாயிலில்
வாய் நிறைய
புன்னகையோடு
திசைகள் ஆசிரியர் குழு
வழங்கிய உபசரிப்பை
வணங்கி ஏற்றுக் கொண்டான்
உள்ளே ஐம்பது பேர்
அமர்வதற்கான
நாற்காலிகள் இருக்க
அதில் பாதி நாற்காலிகள்
காலியாகவே இருக்க
அதில் ஒன்றில் அமர்ந்தான்
அமர்வதற்கு முன்
அவன் கையில்
நிகழ்ச்சி நிரல் அடங்கிய
அழகிய கோப்புடன்
அந்த வாரத்தின்
திசைகள் இதழும் அளிக்கப்பட்டது
பத்திரிகையாளர்களுக்கான
பயிற்சிக் கூட்டம்
காலை ஒன்பது மணிக்கு
துவங்குமென
நிகழ்ச்சி நிரலில்
குறிப்பிடப்பட்டிருந்தது
கடிகாரத்தைப் பார்த்தான்
நிகழ்ச்சி துவங்க
இன்னும் ஒன்பது நிமிடங்கள்
இருக்கிறதென்பதை
இயந்திரக் கூடு
இதயம் துடித்துக் காட்டியது
கையிலிருந்த திசைகள்
இதழைப் புரட்டினான்
மூன்றாம் பக்கத்திலேயே
இளம் பத்திரிகையாளர்களின்
பெயருடன் நிழற்படங்களும்
வெளியிடப்பட்டிருந்தது
அந்தாண்டில்
மாணவ பத்திரிகையாளர்களாக
நாற்பத்தி இரண்டு
மாணவர்கள் தேர்வு பெற்றனர்
அதில் நாற்பதாவது
ஆளாக விமலன் இருந்தான்
தன் நிழற்படம் கண்டு
மனமகிழ் கொண்ட
மறு நிமிடம்
நாற்பத்தியோராவது
நிழற்படத்தைக் கண்டதும்
இதயம் துடிக்க மறந்தான்
அச்சமயத்தில்
அவனருகில் அமர்வதற்கு
அழகுக் குயிலொன்று
அனுமதியைக் கேட்டது
அக்குயிலைப் பாராமல்
அனுமதியைத் தந்தான்
அந் நிழற்படத்தை
மீண்டும் ஒருமுறை பார்த்தான்
அங்கே தாமரை
புன்னகை பூத்திருந்தாள்
தன்னையறியாமல்
தாமரை என்று கூவினான்
மூன்றாமாண்டு
தமிழ் இலக்கியம் பயிலும்
முத்தமிழ் மாணவி
காஞ்சி அரசு கலைக்கல்லூரியின்
பேச்சுப்புயல் மான் கவி
என சிறுகுறிப்பு வரைந்தான்
குறிப்பினைப்
படித்துச் சிரித்தான்
குயிலின் படத்தினை
தடவி ரசித்தான்
தாமரை என
அழைத்துச் சிலிர்த்தான்
அவன் அழைத்த மாத்திரத்தில்
'ம்...ம்... சொல்லுங்கள்'
என்பது போல்
தாமரையின் குரலினை
அவன் செவியினிக்கக் கேட்டான்
'ம்...ம்... சொல்லுங்கள்
நான்தான் தாமரை..."
என மீண்டும் தாமரையின்
குரல்தனைக் கேட்டான்
தாமரையின் மயக்கத்தில்
மூழ்கியிருக்கும்
விமலனை
தளிர்க்கரம் ஒன்று
தட்டி எழுப்பியது
கைதட்டி எழுப்பியது
எழுப்பியது யார் என்று
விழித்துப் பார்த்தவன்
தன் விழி மூட மறந்தான்
அங்கே... அங்கே...
அழகுத் தாமரை
அமர்ந்திருந்தாள்
தங்கத் தாமரையாள்
அவனை எழுப்பியது கண்டு
தன்னை மறந்தான்
'ம்...ம்....நான்தான் தாமரை
ஏன் அழைத்தீர்கள்
சொல்லுங்கள்'
என மீண்டும் தாமரை
கேட்டபின்தான்
சுயநினைவுக்கு வந்தான்
பயிற்சி கூட்டம்
அப்போது துவங்கி விடவே
தற்காலிகமாக
தாமரையின் கேள்வியிலிருந்து
தப்பித்துக் கொண்டான்
பத்திரிகையாளர்களின்
பயிற்சிக் கூட்டத்தில்
பத்திரிகை உலகின்
அனைத்து அம்சங்களும்
விவரிக்கப்பட்டன
செய்தி சேகரித்தல்
இக்கட்டான சூழலை சமாளித்தல்
என நாற்பத்தி இரண்டு
மாணவர்களின் திறனும்
பட்டை தீட்டப்பட்டன
அனைத்து நிகழ்வுகளையும்
அச்சு பிசகாமல்
குறிப்பெடுத்துக் கொண்டான்
இடையிடையே
தாமரையை தன் கண்களால்
அளவெடுத்துக் கொண்டான்
உணவு இடைவேளை வந்ததும்
தனியிடம் நோக்கி சென்றான்
அவனிடம் நோக்கி
தாமரை வந்து கொண்டிருந்தாள்
(தொடரும்)
@@@@@@@@@@@@@@@@@@@@@
விமலனின் காதலி! - முதல் பாகம்
விமலனின் காதலி! - இரண்டாம் பாகம்
விமலனின் காதலி! - மூன்றாம் பாகம்
விமலனின் காதலி! - நான்காம் பாகம்
விமலனின் காதலி! - ஐந்தாம் பாகம்
விமலனின் காதலி! - ஆறாம் பாகம்








