ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, October 29, 2014

வெட்கத்திற்கு விடுதலை தா..!

வெளிச்சத்தை
இருட்டிலடைத்து
வெட்கத்திற்கு
விடுதலை தா..!
உனை முழுதாய்
ரசிக்க வேண்டுமடி என்றேன்..!
முடியாது போடா என்றுவிட்டு
முகிலை இழுத்துப்
போர்த்தியபடி
மறைந்தே போனாள்
நிலா மகள்...
ஓ... இன்று அமாவாசை..!




Saturday, October 25, 2014

யாழிசையும் குழலிசையும்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை!



யாழிசையும் குழலிசையும் உன் மழலைக் குரலுக்கு
      முன்னால் மண்டியிடுகிறது எங்கள் சந்திர மகவே!
வமிருந்து பெற்ற தமிழகத்தின் தனிப்பெரும் சொத்தே!
      சந்திரனுக்கும் சங்கீதாவிற்கும் நீ விலைமதியா முத்தே!
ங்காளம் தாண்டி சிங்காசனமிட்ட எங்கள் வம்ச வித்தே!
      செந்தமிழ் கொண்டுனக்கு எழுதுகிறேன் பிறந்தநாள் வாழ்த்தே!
ன்று போலென்றும் மகிழ்வோடு மாநிலம் போற்ற வாழ்க!
      புவனம் போற்ற வளர்க எந்தன் மகவே உனக்கு என் வாழ்த்து! 



(இன்று பிறந்தநாள் காணும் எனது தம்பி சந்திரனின் மகனுக்காக நான் எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை... இக்கவிதையின் 1,3,5,7 வது வரிகளில் உள்ள முதல் எழுத்துக்களை மேலிருந்து கீழாக வரிசைப்படி படித்தால், பிறந்த நாள் கொண்டாடும் மழலையின் பெயர் கிடைக்கும். கிடைச்சுதா.. சொல்லுங்க...!)




Tuesday, September 9, 2014

நீ அளித்த பிச்சைதான்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை



ஆதவனைப் போல் உதித்த என் மலரே..!
மேகத்தைப் போல் தவழ்ந்த என் மகவே..!
அம்புலியைப் போல் வளர்ந்த என் அழகே..!
விண்மீனினைப் போல் சிரித்த என் இதழே..!

முயலினைப் போல் குதித்த என் நிலவே
..!
மானினைப் போல் ஓடிய என் நதியே..!
யானையைப் போல் சிந்தித்த என் மதியே..!
சிங்கத்தைப் போல் ஒலித்த என் குரலே..!

நீ பிறந்து இன்றோடு ஆண்டுகள் ஒன்பது
..!
நீ அளித்த பிச்சைதான் நான் தந்தை என்பது..!
வாழ்வில் எமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது?
நீ பிறந்த இந்நாள்தான் என உலகம் சொல்வது..!

வாழ்க என் மகனே… வளர்க என் மகனே
..!
தாழ்க உன் மனமே... ஏழைக்கு தாழ்க உன் மனமே..!

(எங்கள் வீட்டு பட்டத்து இளவரசர் க. ஆதித்தனுக்கு இன்று ஒன்பதாவது பிறந்தநாள். அவருக்காக நானெழுதிய பிறந்தநாள் வாழ்த்து கவிதை)




Friday, July 18, 2014

தாயின் மடி!



காதைப் பிளக்கும்
பீரங்கி குண்டுச் சத்தம்…
ஒற்றையாய் விழுந்து
கற்றையாய் உயிர்களைக் கொல்லும்
கொத்துக் குண்டுகள்…
உயிரினை உரசிச் செல்லும்
எமகாதக தோட்டாக்கள்…
என அத்தனை எமன்களையும் தாண்டி
நாட்டைக் காக்க முன்னேறுகிறேன்
எதிரில்படும் எதிரிகளை
துவம்சம் செய்தபடி…
எங்கிருந்தோ வந்த குண்டு
என் இதயத்தைத் தாக்க
இரத்தத்தை இறைத்தபடி
தாய் மண்ணில் மடிகிறேன்
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு...
அது தாய் மண் என்பதால் அல்ல
அது நான் பிறந்த தாயின் மடி என்பதால்..!

(தாய்மண்ணைக் காக்க போராடி வீரமரணமடைந்த தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்)




Wednesday, June 4, 2014

ஆறுபோல் அறிவைப் பெருக்கி! - பிறந்தநாள் வாழ்த்து!




ஆறு -
இந்த சொல்லுக்கும்
எண்ணிக்கைக்கும்தான்
இப்பூவுலகில்
எத்துனைச் சிறப்பு!
எத்துனை செழிப்பு!

புவிதனில்
மனித நாகரிகத்தை
முதன் முதலில்
வளர்த்து விட்டது
ஆறு!

உலகில் உள்ள
உயிரினங்களில்
மனித இனத்துக்கு
உள்ள அறிவு
ஆறு!

உணவின் சுவைகளில்
ஒன்றல்ல இரண்டல்ல
தமிழன் பகுத்து
வைத்த சுவைகள்
ஆறு!

இப்படி
இன்று நான் ஆறை
ஆராயக் காரணம் உண்டு
என் இளைய மகவே
இன்றோடு உன் அகவை
ஆறு!

ஆறுபோல்
அறிவைப் பெருக்கி
அதன் வேகத்தைப் போல்
பொருளையீட்டி
புவியிலுள்ளோரெல்லாம்
உய்யும்படி வாழ்கவென் அகிலா!


(எனது இளைய மகனுக்கு ஆறாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )




Monday, May 19, 2014

சராசரிக் குடிமகனாய்...


அந்தரத்தில் பறக்கும் அரிசி விலை...
கண்ணாமூச்சி காட்டும் காய்கறி விலை...
ராக்கெட்டாய் சீறும்...
பெட்ரோல் டீசல் விலை...
பாலுக்கு நிகராய் தண்ணீரின் விலை...
அலைமோதும் கூட்டத்தால்
எப்போதும் நிரம்பி வழியும்
நியாய விலைக் கடை...
என இவை அத்தனையும்
சகித்துக் கொண்டு
வறுமைக்கும் வாழ்வுக்கும் இடையே
போராட்டம் நடத்தும்
சராசரிக் குடிமகனாய் இருந்து தொலைப்பதை விட
முற்றிலுமாய் தொலைந்து போவதே
மேலென்று தோன்றுகிறது
குடும்பம் எனும் பந்தம் மட்டும் இல்லையென்றால்....

(அட போங்கடாங்க நீங்களும் உங்க மக்களாட்சியும்....)

***************

கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இலவசப் புத்தக வங்கிகள்!





Monday, April 14, 2014

அன்பும் அறனும்..! - திருமண வாழ்த்து கவிதை


ன்பும் அறனும் உடையதுதான் இல்வாழ்க்கை
     என்றுணர்ந்து இன்று நீ இவ்வாழ்வில் இணைகின்றாய்!
ருசிகரமானதா? பசிகரமானதா இந்த இல்வாழ்க்கை
    என்பதை சோதித்து சாதனை படைக்கப் போகின்றாய்!
ணானல் போல் வளைந்து கொடுத்து வாழப் பழகி
    பரணியுடன் நீ உன் தரணியை ஆளப்போகின்றாய்!
ச்சமூகத்தில் இன்று மூதல் நீயும் ஓர் அங்கமாகி
    அனைவருக்கும் நிகரான குடும்பத் தலைவனாகின்றாய்!
ந்ததி தழைக்க வேண்டி சந்தோஷம் பெருக வேண்டி
   இவ்வினிய தமிழ்ப் புத்தாண்டில், தாலி கட்டப் போகின்றாய்!
ட்சலட்சமாய் கொட்டிக் கொடுத்தாலும் கொடுக்க முடியா
   சந்தோஷ நல் வாழ்க்கைதனை இனி நீ வாழப் போகின்றாய்!
ம்மாநிலத்தில் என்றென்றும் மனமொத்த தம்பதிகளாய்
   வாழையடி வாழையாய் வாழ்கவென்று வாழ்த்துகின்றேன்!


னி படர்ந்த ரோஜாவின் மென்மை குணம் கொண்டு
  பிறந்த குலத்தின் பெருமையைப் போற்றி, வளரும் குலத்தின்
த்தினமாய் என்றும் நீ ஜொலிக்க வேண்டும் பெண்மணியே!
  இல்வாழ்வில் விட்டுக் கொடுத்து வாழப்பழகு கண்மணியே..!
ணிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களும்
   எங்களோடிணைந்து வாழ்த்துகிறது நீவீர் வாழ்க வாழ்கவே!

மணமகன்: து. அருணாச்சலம்
மணமகள்: நா. பரணி

மணநாள்: 14.04.2014
மண இடம்: இளவரசி திருமண மண்டபம், சீலப்பந்தல், திருவண்ணாமலை

(இன்று எனது அலுவலக நண்பருக்கு திருமணம். அவருக்காக நானெழுதிய திருமண வாழ்த்துக் கவிதை இது..! கவிதையின் முதல் வரிகளிலுள்ள தடித்த எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்துப் பாருங்கள்... இல்வாழ்வில் இணையவிருக்கும் இதயங்களின் இயற்பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..?

உங்களனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!)




Monday, April 7, 2014

சிறை பிடிக்க முடியுமா?


மூச்சுக்காற்றை
சிறை பிடிக்க முடியுமா
என்று என்னிடம்
சவால் விட்டாள்!
எப்படி முயன்றும்
"என்னால் முடியவில்லை அன்பே"
என்று தோல்வி சிறையில்
அடைபட்டுக் கொண்டேன்!
சிரித்துக் கொண்டே
அவளுடைய மூச்சுக்காற்றை
காற்றடைக்கும் தலையணையில்
சிறை பிடித்தாள்
என் செல்ல மகள்!




Thursday, March 13, 2014

SMS காதல்


என் குறுஞ்செய்தியைப்
பார்த்ததும்
உன் குவலய முகம்
குதுகலமாய்ப்
பூக்கிறது
என்பதாலேயே
அடிக்கடி உனக்கு
குறுஞ்செய்தி அனுப்புகிறேன்...
செய்தி ஏதும்
இல்லை என்றாலும் கூட..!




Tuesday, March 11, 2014

வாய்கூசாமல் அம்மாவென்று..! - அரசியல் கவிதை


எங்கள் அம்மா
புரட்சித்தலைவி அம்மா
தாயுள்ளம் கொண்ட அம்மா
என்றெல்லாம் பிதற்றும்
ரத்தத்தின் ரத்தங்களே
எந்த அம்மாவாவது
தனது மக்கள்
குடித்தழிந்து சாகட்டும்
என்று நினைப்பாளா?
டாஸ்மாக்கின் விற்பனைக்கு
இலக்கு நிர்ணயிப்பாளா..?
அப்படி நினைப்பவளை
வாய்கூசாமல் அம்மாவென்று
அழைக்கும் உங்களை
என்னென்று சொல்வது
எதனால் அடிப்பது?
மக்களுக்கு
போதையை ஊட்டி
புத்தியை மழுங்கடித்து
அதில் கிடைக்கும் வருவாயினை
வைத்து நடத்தும் ஈனப்பிழைப்பை
என்று ஒழிக்கிறாளோ
அப்போதுதான் அவள் உண்மையான அம்மா
அதுவரை அவள் வெறும் சும்மா?

(நன்றி: கார்டூனிஸ்ட் பாலா)




Friday, March 7, 2014

ஒவ்வொரு பெண்ணும்..! - மகளிர் தின சிறப்புக் கவிதை!




பூமித்தாய் தன்னுள்
உயிர்ப்புடன்
விழுகின்ற
 எதனையும்
வேறுபாடு
காட்டாமல்
உயிரூட்டி
உரமேற்றி
வெளியுலகம்
காணவைப்பாள்!

உயிரற்று வீழ்பவற்றை
வேறுபாடு காட்டாமல்
தன்னுள்
அடக்கிக் கொள்வாள்!
பூமித்தாயைப் போலேதான்
இவ்வுலகில் உள்ள
ஒவ்வொரு பெண்ணும்
தன்னைச் சார்ந்தோரின்
நல் குணங்களை
வெளியுலகுக்கு எடுத்துக்காட்டி
தீயகுணங்களை தன்னுள் அடக்கி
அன்பு நிறை அன்னையாக
அடம்பிடிக்கும் சகோதரியாக
தோள் கொடுக்கும் தோழியாக
அறிவார்ந்த மனைவியாக
அழகு நிறை மகளாக
உருவெடுத்து வாழ்ந்து நிறைகிறாள்
ஆணினத்தை வாழவைத்து மறைகிறாள்!

(உலகிலுள்ள பெண்கள் அனைவருக்கும் எனது சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் மகளிரைப் போற்றுவோம்!)




Wednesday, February 26, 2014

ஓ… என் நீதி தேவதையே..! - பாலியல் வன்முறை எதிர்ப்புக் கவிதை!


ஓ… என் நீதி தேவதையே
பெண்கள் நாட்டின் கண்கள் என
இருந்த இந்நாட்டில்
இன்று அப்பெண்களின்
கண்கள் மட்டுமல்ல
உயிரினும் மேலான கற்பும்
அவர்களின் உயிர்களுமல்லவா
பறிக்கப்படுகிறது?

நீதியில் பாரபட்சம் கூடாது
பந்த பாசத்திற்கு இடம் தரக்கூடாது
என்றுதான் நீதிதேவனை நிறுத்தாமல்
நீதி தேவதையான உன்னை
நீதியை நிலை நாட்ட
நிறுத்தியிருக்கிறார்கள்..!
உன் இனத்திற்கு நேரும் கதியைப் பார்..!

தில்லியில் அன்று நிர்பயா…
சேலத்தில் நேற்று 5 வயது சிறுமி
சென்னையில் இன்று உமா…
எங்கே சென்று கொண்டிருக்கிறது
இந்தச் சமூகம்..?
ஆணினம் அழிவினத்தின்
உச்சமாகிக் கொண்டல்லவா போகிறது..?
அதை அடக்காமல் விடலாமா?

உன்னிடமுள்ள நீதியெனும் வாளை
கூர் தீட்டிக் கொள்…
காம வெறி பிடித்த கயர்களை
கூண்டிலேற்றிக் கொல்…
அவன் ஆண்டியாக இருந்தாலும்
ஆதிமுதல் பணக்காரனாக இருந்தாலும்
விடாதே… விடாதே கொல்..!

சிறுமியென்றும் பாராமல்
துவம்சம் செய்த அரக்கர்களை அழி
பெண்ணை ஒரு மனுஷியாகக்கூட பார்க்காத
அந்த பாதகர்களை ஒழி...
எவனையும் எக்காரணம்
கொண்டும் மன்னிக்காதே
உன்னினத்தை
நீயே காப்பாற்றவில்லையெனில்
இனத்துரோகி ஆகிவிடுவாய்..!

காம வெறி பிடித்து
கற்பழிப்பில் ஈடுபட்ட நாய்களின்
கழுத்தில் மாட்டு சுருக்கு…
இல்லையேல்
அவன் பிறப்புறுப்பை நறுக்கு
இல்லையேல்
நாட்டை விட்டு கடத்து..!
பெண்களை போகப் பொருளாக்கும்
பொல்லா நாய்களை
தீயில் போட்டு பொசுக்கு..!

தன்னை பெற்ற தாயும்
ஒரு பெண் என மறந்த நாய்களை
தன்னுடன் பிறந்த சகோதரியும்
ஒரு பெண் என்பதை மறந்த ஈனப்பன்றிகளை
அழித்தெடுக்க தண்டனைகளை கடுமையாக்கு
குடிதனை அமல்படுத்தியிருக்கும்
ஆட்சிக்கும் சவுக்கடியை நீட்டு
அப்போதுதான் மாறும் இந்நிலை..!