ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, December 31, 2009

அன்பிற்கினிய வாசகர்களுக்காக நவீன ஆத்திசூடி..!

ன்பைக் கொடு..!

ணவம் அழி..!

ன்பத்தை நுகர்..!

கையை வளர்..!

வகையைப் பெருக்கு..!

க்கத்தை உயர்த்து..!

ளிமையைப் புகுத்து..!

ற்றம் பெற உழை..!

யம் நீங்கப் பயில்..!

ழுக்கம் நிறை..!

யாமல் சேவை செய்..!

ஓளவை சொல் கேள்..!

தே உமக்கு உயர்வு தரும்..! 


எங்களின் மதிப்பிற்குரிய வாசகர்களாகிய உங்களுக்கும், உங்களின் மேல் அன்பு கொண்டுள்ள அனைவருக்கும் எங்களின் மனம் நிறைந்த...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2010

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்
மோகனன். 




என் காதலி தேன்..!



என் காதலி தேன்..!
ஆதலால்
அவளைப் பார்த்ததும்
காதலித்தேன்..!
என் காதலியின்
முகமலர் தேன்..!
ஆதலால்
அவளைப் பார்த்ததும்
முகமலர்ந்தேன்..!
என்னவளின்
புன்னகை தேன்..!
ஆதலால்
அவளைப் பார்த்ததும்
புன்னகைத்தேன்..!
என்னவளின்
பூமுடி தேன்..!
ஆதலால்
அவள் கூந்தலில் நான்
பூமுடித்தேன்..!



Wednesday, December 30, 2009

இந்த ஆசைகளெல்லாம்..!



உன் அழகிய காது மடலைக்
கடிக்க ஆசை..!
உன் சங்குக் கழுத்தில்
இதழ் பதிக்க ஆசை..!
உன் வெண்டை விரலில்
மோதிரமிட ஆசை..!
உன் முத்தமிழ்ப் பேச்சில்
மூழ்கி விட ஆசை..!
இந்த ஆசைகளெல்லாம்
கரைவதற்குள்
என்னருகில் வந்து விடு அன்பே..!
இல்லையெனில்
என் ஆயுள் கரைந்து விடும்..!



Tuesday, December 29, 2009

உறைந்து போன நிலா..!



உனக்குத் தாலாட்டுப் பாட...
நிலவை உன்னறைக்குள்
வரும்படி அழைத்தேன்…
வெள்ளி நிலவும்
வெளிச்சப் புன்னகையோடு
இசைந்தது..!
உன்னறைக்குள் நுழைந்தது..!
உனைப் பார்த்ததும்
உறைந்து போனது நிலா…
காரணம்..?
நிலவின் 'க்ளோனாம்' நீ..!  



Monday, December 28, 2009

கடைசி வரை உனக்காகவே..! - காதல் குறுங்கவிதைகள்


உலகிலேயே மிகவும்
அழகான கவிதை ஒன்று
சொல் என்றார்கள்..!
நான் உன் பெயரை மட்டும்தான்
சொன்னேன்..!
அதற்கே அசந்து விட்டார்கள்..!

                     *** + ***

குற்றமென்ன செய்தேன் கொடிமலரே
உன் இதயமெனும் சிறையில்
எனை அடைத்து வைத்திருக்கிறாய்..!
ஓ… உன் இதயத்தைத் திருடிய
குற்றத்திற்கான தண்டனையா அது.?   

                     *** + ***

அன்பே…
நீ ஒரு பெண் பிரம்மா..!
எப்படி என்கிறாயோ..?
கல்வி வாசமே இல்லாத
என்னைக் கூட
கவிஞனாக்கிவிட்டாயே..!   

                     *** + ***

காய்ந்து கிடந்த என் மனதில்
காதலை விதைத்து விட்டுச் சென்றவளே
எப்போது வந்து அதை
அறுவடை செய்யப்போகிறாய்
உனக்காக காத்திருக்கிறேன்..!

                     *** + ***

உன் புன்னகைக்குத்தான்
எவ்வளவு வலிமை..?
இரும்பான என் இதயத்தைக்கூட
எளிதில் உடைத்து விட்டதே..!
உன் மௌனத்திற்க்குத்தான்
எவ்வளவு வலிமை..?
பேச்சாளனான என்னைக் கூட
மௌனியாக்கி விட்டதே..!
அட.. இதற்குப் பெயர்தான் காதலா..?

                     *** + ***

காத்திருந்து கரம் பிடிப்பதுதான்
காதல் என்றாய்..!
ஆதலால்தான் அன்பே
கடைசி வரை உனக்காகவே
காத்திருக்கிறேன்..!

                     *** + ***



Thursday, December 24, 2009

எங்களின் இதயக்கனியே..! - எம்.ஜி.ஆர் நினைவு நாள் கவிதாஞ்சலி


பொன் மனச் செம்மலே!
எங்களின் அண்ணலே..!
புரட்சித் தலைவரே..!
புதுமைப் பித்தரே..!
இந்திரனின் உருவே..!
எங்களின் இதயக்கனியே..!
மக்கள் திலகமே..!
என்றும் மங்காத செல்வமே..!
ஏழைகளின் ஒளிவிளக்கே..!
எங்களின் மணிவிளக்கே..!
நீ மறைந்து இன்றோடு
ஆண்டுகள் இருபத்தி இரண்டு..!

ஆண்டாண்டு காலமாய்
அழுது புரண்டாலும்
மாண்டவர் மீள்வதில்லை..!
நீ மாண்டு போகவில்லை ஐயா
மக்களின் மனங்களில்
குடியிருந்த கோவிலாய்
வாழுகின்றாய்..!
ஒளிவிளக்காய் எங்களுக்கு
வழிகாட்டுகின்றாய்..!

மன்னாதி மன்னா...
நின் மலரடி பணிகின்றோம்..!
நாடோடி மன்னா...
நின் வழி நடக்கின்றோம்..!
மறைந்தும் மறையாத
செல்வமே..
நீ வாழி...
நின் புகழ் வாழி..
வாழி நீ எம்மான்..!



Wednesday, December 23, 2009

வாசலில் ஒரு வானத்து தேவதை..!



அடுக்களையில் ஆராய்ந்தபடி
அவசரமாய்
சமையலறையில்
சமைத்துக் கொண்டிருந்தேன்...
அப்போது என் வீட்டுக்
கதவிற்கே வலிக்காமல்...
அக்கதவைத் தட்டும்
மெல்லிய ஓசை கேட்டது..?

உள்ளிருந்தபடியே
‘யாரென்று’ வினவினேன்..!
மறுபடியும்
அதே மெல்லியத் தட்டல்...
‘அட யாருங்கறேன்...’
என்றபடியே எட்டிப்பார்க்க முனைந்தேன்

அதற்குள்...
தேனினும் இனிய குரல் ஒன்று
’நான்தான்’ என்று
தேனமுத கானமாய் ஒலித்தது..!

எட்டிப் பார்த்தேன்..!
வாசலில் ஒரு வானத்து தேவதை..!
பார்த்த வினாடியில்
மூர்ச்சித்துப் போனேன்..!
அவளழகில் முயங்கிப் போனேன்..!

வெள்ளி நிறச் சேலை கட்டி
நீல வான வீதியிலே
துள்ளி வரும் வெண்ணிலவைப் போல்
எந்தன் பெண்ணிலவு
வெண்ணிறச் சேலை கட்டி
பொன்னிலவாய்
என் முன்னே வந்து நின்றது..!

அவளை அப்போதே
அள்ளிப் பருக ஆசை என்றாலும்
அவளழகைப் பார்த்த என் கண்கள்
இமை மூட மறுத்து திகைத்தன...
அவள் அழகில் மூழ்கித் திளைத்தன..!

‘வா என் தேவதையே...
உள்ளே வா...’ என அழைத்தேன்...
அவளும் தன் மெல்லியப்
பூப்பாதங்களை
பூமியிலே பதித்தபடி...
புன்னகையைப் பூவாய் உதிர்த்தபடி
உள்ளே வந்தாள்..!

அவள் அன்று கட்டியிருந்த
வெள்ளை நிறச் சேலையில்
என் மனதை கொள்ளையடித்தாள்..!
முல்லை மலர்ச் சிரிப்பில்
எனை மூழ்கடித்தாள்..!
முயலைப் போல் முறைத்துக் காட்டி
எனை மோகத்தில் சிக்க வைத்தாள்..!

கருங்கூந்தலை தென்றல் காற்றில்
அலைபாய விட்டாள்..
என் மனதை அதனூடே தவழ விட்டு
அக்கூந்தல் மணத்தை
என் இதயமெங்கும் கமழ விட்டாள்..!
அக் கூந்தலின் மணத்தை
என் சுவாசத்திற்க்கு அர்ப்பணித்தாள்..!

அன்று அவள் எனக்காகவே
பிறந்தது போல் தோன்றியது..!
அவள் எனக்காவே என் வாசல் தேடி
வந்தது போல் இருந்தது..!
அன்று முழுவதும் அவளுடனேயே இருக்க
வேண்டுமென்றும் மனசு துடித்தது..!

காலமில்லாத காரணத்தால்
பிரிய மனமின்றி பிரிந்து வந்தேன்..!
அவளின் நினைவால்
பித்தனாய் மாறிச் சென்றேன்..!
அதனை இங்கே கவிதைச்
சித்திரமாய் வரைந்து நின்றேன்..!
இதில் வண்ணங்கள் இல்லை என்றாலும்
என் எண்ணங்கள் உண்டென்பதை
மறவாதே தேவதையே..!
அதோடு சேர்த்து எனையும்...?!

*******

(ஒரு நாள் என்னவள், என் வீட்டிற்கு தேவதையாய் வந்தாள்... அன்று அவளுடைய அழகு எனைப் பாடாய்ப்படுத்திவிட, அவளிடம் இதை எப்படிச் சொல்வேன்... என் ஏக்கத்தை அவளிடம் எப்படித் தெரிவிப்பேன் என யோசித்தேன்... கடைசியில் அதை இங்கே கவிதையாக உளறியிருக்கிறேன்... )




Tuesday, December 22, 2009

இமையெனும் சிறையை..!



'இரவு முழுவதும்
ஏனடா தூங்கவில்லை..?' என
நீ கேட்கிறாய்..!
சுதந்திரமாய் நீ என்
கண்ணுக்குள்
இருக்கும் போது...
இமையெனும் சிறையை
நான் எப்படி அடைப்பது..?



Sunday, December 20, 2009

நீ இந்த உலகத்தில்..! - காதல் குறுங்கவிதைகள்



நீ என்னருகில் இருக்கும் வரை
உலகத்தையே மறந்திருக்கிறேன்..!
நீ என்னை விட்டு்ப் பிரிந்து சென்றால்
இந்த உலகமே என்னை மறக்கும்படி
செய்து கொள்கிறேன்..!
ஏனடா எனக்கிந்த காதல் வேதனை..?

                        *** + ***
என் பெயரை
யார் உச்சரித்தாலும்
சட்டென்று திரும்பாத
என் மனது..?
உன் பெயரை
யார் உச்சரித்தாலும்
சட்டென்று திரும்பி விடுகிறது..!
 
                        *** + ***

கடற்கரையின் மணற்பரப்பில்
கவலையின்றி பேசிக் கொண்டிருக்கும்
காதலர்களைப் பர்க்கும் போதெல்லாம்
எனக்குள்ளும் அந்த ஆசை பிறக்குமடா..?
உன்னுடன் நானும்
இதுபோல் எப்போது
அமர்ந்து பேசப் போகிறேன் என்று..?

                               *** + ***
அன்பே..!
நீ இந்த உலகத்தில்
யாரோவாக இருக்கலாம்..!
ஆனால்
நீதான் எனக்கு
உலகமே..!   

                              *** + ***
காதலென்பது
பொதுவுடமை என்கிறார்களே..?
அது உண்மைதானடா..!
நீ என்பது நானானேன்…
நானென்பது நீயானாய்…
நம் இருவரும் சேர்ந்து 'நாம்' ஆனோம்..!
இதுதானே பொதுவுடமை..!

                             *** + ***
உயிரே..!
உன்னுடைய பிறந்த நாளை
என்னுடைய பிறந்தநாளாக நினைத்து
அனைவருக்கும் இனிப்பு
கொடுத்து மகிழ்கிறேன்..!
ஏனெனில்…
நீ எனக்காகப் பிறந்தவனாயிற்றே..!

                                        - மலர்விழி மோகனன்
                              *** + ***                           




Thursday, December 17, 2009

உன்னைத் தவிர அத்தனையும்..!


கண்ணிமை உறக்கத்தைக்
கவர்ந்து கொண்டதேன்..?
கன்னி மொழிப் பேச்சினிலே
எனைக் கவிழ்த்து விட்டதேன்..?
காலம் கடந்து என் கண்
முன்னே வந்து நின்றதேன்..?
காதலெனும் மாய வலையில்
எனை சிக்க வைத்ததேன்..?
உன் காந்தமெனும் கண்ணிலே
எனை சிறை பிடித்ததேன் பெண்ணே..?
வரமாட்டாய் எனத் தெரிந்தும்
உன் வரவிற்காகக்
காத்துக் கொண்டிருக்கிறேன்..!
தரமாட்டாய் எனத் தெரிந்தும்
உன் தாயன்பை
கேட்டுக் கொண்டிருக்கிறேன்..!
காலம் கடந்து வந்தாலும்
காதல் காதல்தானே..!
மறந்துவிடு எனை என்றாய்...
மறந்து விட்டேன்...
உன்னைத் தவிர அத்தனையும்..!




Wednesday, December 16, 2009

காதலால் பரிதவிக்கிறேனடி..!



ஊருணித் திருவிழாவில்
குழந்தையைத் தொலைத்து விட்டு
பரிதவிக்கும் தாயைப் போல...
அயல் நாட்டில்
பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டு
பரிதவிக்கும் தமிழனைப் போல...
என் மனதை உன்னிடம்
தொலைத்து விட்டு பரிதவிக்கிறேனடி…
காதலால் பரிதவிக்கிறேனடி..!



Friday, December 11, 2009

அக்கினிக் குஞ்சொன்று பிறந்தது பார் ..!



ஆயிரத்தி எண்ணூத்தி எண்பத்தி இரண்டு
டிசம்பர் பதினொன்று அன்று
எட்டயபுரத்தில் பிறந்தது பார்
அக்கினிக் குஞ்சொன்று அங்கு...

தமிழ்ப்புவியில்
எட்டுத் திக்கும் எதிரொலிக்க...
எட்டயபுரத்தில்
சங்கத் தமிழும் சடசடக்க...
சிங்கம் நிகர் சின்னசாமிக்கும்
தங்கம் நிகர் லட்சுமிக்கும்
பிறந்தது தமிழ்ச் சிங்கக்குட்டியொன்று..!
அதன் பேரோ சுப்பிரமணியனென்று..!

கல்வி பயிலும் பாலக வயதில்
ஆசுகவி பாட்டிசைத்த
காரணத்தால்...
சுப்பிரமணியர்க்கு சூட்டினர்
பாரதி என்ற ஏற்றதோர் பட்டத்தை..!

சங்கத் தமிழ் கற்றது மட்டுமின்றி
பற்பல சாத்திரங்கள் கற்றது மட்டுமின்றி
பன்மொழியினையும் கற்றுத் தெளிந்தான்
தமிழ்ப்பண் பாட்டிசையும் கற்றறிந்தான்..!




பாரதத் தாயின் அடிமைத் தளையை
அடிச்சுவட்டிலிருந்து அகற்றிடவே
எழுதுகோலை ஆயுதமாய்
பிரயோகித்தான்...
வார்த்தைகளில் வலிமையைக் காட்டியே
வறியோர்க்கும் வலிமையை ஏற்றினான்...
வீழ்ந்து கிடந்த மக்களை எல்லாம்
வீரர்களாய் மாற கவி சமைத்தான்...

சுதந்திரக் கனலை மூட்டி விட்டான்..!
முழுமையற்றவற்களை
முழுமையாக ஆக்கி விட்டான்..!
சாதிப்பிரிவுகளை எதிர்த்து நின்றான்...
ஏற்றத்தாழ்வுகளை அழித்து நின்றான்...
புதுக்கவிதையின் தந்தையாய்
உருவாகி நின்றான்..!
ஆசு கவிகள் பல படைத்து நின்றான்..!
எங்கள் மனதில் குன்றென நின்றான்..!
அவன் பெயர் மாகாகவி பாரதி என்றான்..!

எட்டயபுரத்தில் பிறந்தாலும்
எந்தன் தமிழுக்காகவே நீ பிறந்தாய்..!
இன்றுன் பிறந்தாநாள் அய்யா..!
மகாகவி பாரதி நீயன்று...
மகா பாரதத்தின் தீ
நீயெனக் கண்டு
நின் வழி போற்றி நிற்கின்றேன்..!

உன் புரட்சிப் பாதையில் அடியேனும்
அடிமையாய்ப் பின் தொடருகிறேன்...
உன் சொல் காத்து நிற்கின்றேன்...
நீ பிறந்த இந்நாள் அய்யா...
இந்த தேசத்திற்கே
தேசியக் கவிஞர் தினம் அய்யா..!
வாழ்க எம்மான்...
எங்களுள் அமரனாய் என்றும்
வாழ்கிறாய் எம்மான்...

                                      -  மோகனன்.

(தேசியக் கவியாகிய மகாகவி பாரதியாருக்கு இன்று 128 –வது பிறந்தநாள் விழா... அவருக்கு இந்தக் கிறுக்கனின்  கிறுக்கல்  சமர்ப்பணம்...)


"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி"

                                                                                                   – மகாகவி பாரதியார்



Thursday, December 10, 2009

உன் வேல்விழியால்..!



அன்பே…
உன் வேல்விழியால்
என் இதயத்தைக் குத்தாதே..?
உள்ளே நீயிருக்கிறாய்..!
உன் பூ மேனி உடலில்
காயம் பட்டுவிடப் போகிறது..!



Wednesday, December 9, 2009

ஷாஜகானைப் போல்..!



எனக்காக ஷாஜகானைப் போல்
தாஜ்மஹால் கட்டுவாயா என்றாய்..?
மாட்டேன் என்றதும்
மனதொடிந்து விட்டாயே..!
அட அறிவாளி...
நீ என்னுடன் வாழப்பிறந்தவள்...
சாகப் பிறந்தவள் அல்ல..!



Tuesday, December 8, 2009

ஒரே ஒரு நொடியில்..!


அருவமாய் இருந்த எனக்கு
கருவில் உருவம்
கொடுத்தாளென் தாய்…
அதற்குப் பத்து மாதங்கள் ஆனது..!
கிள்ளையாய் இருந்த என்னை
நல்ல பெண் பிள்ளையாய்
மாற்றினார் என் தந்தை…
அதற்குச் சில ஆண்டுகள் ஆனது..!
களி மண்ணாய் இருந்த என்னை
சிறந்த கல்விமானாக
மாற்றினாள் என் ஆசிரியை…
அதற்குப் பல ஆண்டுகள் ஆனது..!
என்ன மாயம் செய்தாயடா..?
ஒரே ஒரு நொடியில்
நான் உந்தன் காதலியாகி விட்டேன்..!
                                    
                                                 - மலர்விழி மோகனன்




Monday, December 7, 2009

ஒரே ஒரு ஒற்றை வார்த்தைக்காக..!



எதற்க்கும் அடி பணியாதவன்...
உன் அன்பிற்கு அடிமையானேன்..!
எவற்றுக்கும் அஞ்சாதவன்...
உன் பார்வைக்கு அஞ்சினேன்..!
அடிதடிக்கே பழக்கப்பட்டவன்...
உன் அன்பு கண்டு அண்ணலானேன்..!
பகட்டாகத் திரிந்து கொண்டிருந்தவன்...
உன் எளிமை கண்டு ஏழையானேன்..!
என்னுள் ஏற்பட்ட இத்தனை மாற்றமும்
நீ உதிர்க்கும் அந்த ஒரே ஒரு
ஒற்றை வார்த்தைக்காக
அன்பே எனைக் காதலி..!

(இதற்குச் சரியான படம் கிடைக்க வில்லை என்பதால்... பொதுவாய் இப்படி... ஹி...ஹி...நான் எடுத்த புகைப்படம் என்பதாலும் இப்படி..!)



Friday, December 4, 2009

நீ இல்லாத இரவுகளனைத்தும்..!



குளிர்ச்சியான மார்கழி இரவு..!
வெண்பனி போர்த்திய
வெள்ளை நிலவு..!
நீல வானக் கானகத்தில்
பூத்துச் சிரிக்கும்
நட்சத்திரக் கூட்டங்கள்..!
உரசிச் செல்லும்
வெண் மேகக் குவியல்கள்..!
இரவில் மலரும்
அல்லி மலர்கள்… - என
எத்தனையோ ரசிப்பதற்கு
இருந்தாலும்..?
நீ இல்லாத இரவுகளனைத்தும்
எனக்கு கோடை வெயிலாகத்தான்
தோன்றுகிறது..!



Thursday, December 3, 2009

திறந்து மூடாதே..?



அன்பிற்கினியவளே...
உன் இமைகளை
படபடவென்று திறந்து மூடாதே..?
பட்டாம் பூச்சியோ
எனப் பிடிக்க வருகிறேன்..!
உன் செவ்விழ் அதரங்களைத்
திறந்து மூடாதே..?
கொவ்வைப் பழமோ என
கடிக்க வருகிறேன்..!
உன் இதய வாசலை மட்டும் திறந்து மூடு..!
உள்ளே நானிருக்கிறேன் என்று
இந்த உலகிற்கு தெரியட்டும்..!   



Wednesday, December 2, 2009

உன் மூடிய இமைக்குள்..!



உன் மூடிய இமைக்குள்
கருவிழியாய் நான்..!
கார்மேகக் கூந்தலில்
மணக்கும் மல்லிகையாய் நான்..!
தந்தங்கள் இழைத்த உன் கன்னத்தில்
விழும் குழியாய் நான்..!
உன் சந்திர வடிவ நெற்றியில்
சூரியக் குங்குமமாய் நான்..!

உன் வெண்சங்குக் கழுத்தில்
பொன் மஞ்சள் நாணலாய் நான்..!
மூடி மறைத்த உன்
மார்புகளுக்கிடையில்
இறங்கும் வியர்வைத் துளிகளாய் நான்..!
உன் பூந்தளிர்க் கரங்களில்
ஒலிக்கும் வளையல்களாய் நான்..!

கொழுத்த உன் வயிற்றினில்
கொப்பூழாய் நான்..!
உன் வாழைத் தண்டு கால்களில்
ஒலிக்கும் கொலுசொலிகளாய் நான்..!
மெல்லிய உன் கால் விரல்களில்
ஒளிரும் மெட்டியாய் நான்..!

இப்படி உன்னுள் அனைத்தும்
நானாக விரும்புகிறேன்..!
உன்னுள்ளும் உணர்ச்சிகள்
உண்டென்பதை நானறிவேன்..!
வாழ்க்கைக்காக நீ காத்திருந்தது
போதும் கண்ணே..!
உனக்காக ஒரு வாழ்க்கையே
இங்கு காத்திருக்கிறது..!

நீ விதவையெனில் உனை
நான் காதலிக்கலாகாதோ..!
சகியே… சமூகம் ஒரு குப்பையடி
அது சாத்திரங்களின் நாற்றமடி..!
போதும் உனது பொய் வாழ்க்கையடி..!

உன் விதவைக் கோலத்தைத் துறந்திடடி..!
உன் பழைய வாழ்வை மறந்திடடி..!
என் உணர்வுகளை நீயும் மதித்திடடி..!
என்னுள் இரண்டறக் கலந்திடடி..!



Tuesday, December 1, 2009

உலக எயிட்ஸ் தினம் - விழிப்புணர்வுக் கவிதைகள்



நீர்க்குமிழிகள்...

வழிதவறி உருவான
நீர்க்குமிழிகள்...
இலக்கில்லாமல்
ஆற்றின் நீரோட்டத்தில்
மிதந்து செல்கின்றன...
விரைவில்
பட்டுடைந்து போக...
மனித சமுதாயத்திலும்
நீர்க்குமிழிகளாய்
எயிட்ஸ் நோய்க் குழந்தைகள்...

கற்றுக் கொள்...

ஒருவனுக்கு ஒருத்தியென
வாழக் கற்றுக் கொள்...
ஏனென்றால் எமன் ஒன்றும்
எருமையில் வரவில்லை அப்பனே
மெதுவாக வருவதற்கு...
எயிட்ஸ் மூலம் வந்து கொண்டிருக்கிறான்
ஏவுகணை போல்...

எயிட்ஸ் - குறுங்கவிதை

கலியுக எமதர்மனின்
நவயுக எம வாகனம்
ஏப்பு நோயெனும் எயிட்ஸ்

(இன்று உலக எயிட்ஸ் ஒழிப்பு தினம்... அதற்கான சிறப்பு கவிதைகள் இங்கே... முன்பே இவைகளெல்லாம் எழுதப்பட்டவை என்றாலும்... இன்றைய தினத்திற்கு சரியாக இருக்குமென்பதால் மீள்பதிவாய் இங்கே...)