ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, November 11, 2013

சிக்கல்..!


சுட்டெரிக்கும் சூரியனைக் கூட
நேருக்கு நேராய்
பார்த்து
விடுகிறேன்...
ஆனால் உன் சுட்டு விழியை
என்னால் பார்க்க முடிவதில்லையே
அது எப்படி?
உன் மொழி ஈர்ப்பு விசையில் கூட
வீழாமல் இருக்கிறேன்
உன் விழி ஈர்ப்பு விசையில்
வீழ்ந்து போகிறேனே
அது எப்படி..?
கம்பீரமாய் எப்போதும்
கண் பார்த்து பேசும் எனை
கண்கட்டி வித்தைபோல்
மண் பார்த்து பேச வைத்தாயே
அது எப்படி?
இப்படி என்னுடைய
அடையாளங்களெல்லாம்
உன்னுடைய ஒற்றைப் பார்வையில்
தடுமாறிப் போகிறதே
அது எப்படி 
என்ற
குழப்பச்சிக்கலில்
நான்
குறும்புச் சிரிப்பில் நீ..! 
-------------------------------------------------

(அன்பர் வே. நடனசபாபதி கேட்டதற்கு இணங்க 'சிக்கல்' எனும் தலைப்பில் இக்கவிதை..  அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க கருப்பொருள் 'காதல்'. வேலைப்பளு காரணமாக கவிதை எழுதவதற்கு தாமதம் ஆகிவிட்டது... என்று பொய்யுரைக்க விரும்பவில்லை... இத்தலைப்பில் கவிதை தோணாமல் ஒருவாரம் தவித்துப் போனேன். பின்னர் அழகான கவிதையைப் பார்த்ததும் கிறுக்கி விட்டேன்...)



Blogger வே.நடனசபாபதி said...
உண்டியல் கருத்தும் கவிதையும் அருமை. நீங்கள் கேட்டதால் நான் தருகிறேன் தலைப்பு. ‘சிக்கல்’ என்பதே அது. காத்திருக்கிறேன் கவிதையைப் படிக்க!
October 30, 2013 at 3:35 PM
 Delete