ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, July 27, 2016

மீண்டும் எழுந்து'வா..!’ - அப்துல் கலாம் நினைவஞ்சலி கவிதை


இந்தியாவின்
கடைக்கோடியில்
பிறந்திருந்தாலும் எங்களை
தலைக்கோடியிலிருந்து
ஆண்ட எங்களின்
எளிமைத் தலை'வா…'
குறளுக்கு
இலக்கணமாய்
இருந்து
குமரித்தமிழ்
பரப்பிய
உண்மைத் தலை'வா…'
அணுவின் அசைவுகளை
நுணுக்கமாய் ஆராயும்
அமெரிக்காவின் கண்ணில்
மண்ணைத் தூவி
பொக்ரானில் அணுவைப் பிளந்த
விஞ்ஞானத் தலை'வா…'
மாணவர்கள் இதயத்தில்
சிம்மாசனமிட்ட
கறுப்புத் தமிழா…
உனை இந்நாளில்
இழந்து தவிக்கின்றோம்
நீ மீண்டும் எழுந்து'வா…'
தமிழ் உலகமே
அழுகின்றதே தலை'வா…'
மீண்டும்'வா…'
கண்ணீரில் கரைகின்றோம்
அன்புக் கரம் கொண்டு
துடைத்திட எழுந்து'வா…'
தலை…. வா…… தலை'வா..!'
****************************





Tuesday, July 12, 2016

ஒப்பற்ற ஒளிவிளக்கு! - காமராஜருக்கு பிறந்தநாள் வாழ்த்து!



கல்வி ஒளியற்று
இருண்டு கிடந்த
தமிழகத்தை
கல்வி ஒளியால்
வெளிச்சமேற்றிய
ஒப்பற்ற ஒளிவிளக்கு
காமாட்சி எனும் விளக்கு
காமராசர் எனும்
தமிழ் விளக்கு!

**************************

பனையோலையில்
'தொட்டணைத்தூறும்
மணற்கேணி'
என்றார் திருவள்ளுவர்
ஏழைகளின்
மன ஒலையில்
கற்றணைத்தூறும்
கல்வி அறிவு
என்று எழுதாமல்
அரசுப்பள்ளிகளின் மூலம்
எழுத வைத்து
கல்விச் செம்மல்
எங்கள் காமராசர்
ஏழைகளுக்கு
கல்விக்கண் திறந்த
காமராசர்!

**************************

எனைப்போன்ற
கல்வி வாசம் அறியா
குழந்தைகளுக்கு
கடையேழு வள்ளல்களை
அறிமுகப்படுத்தியது
யாரென்று கேட்டால்
இலக்கியமில்லை
புத்தகமில்லை
ஆசிரியரில்லை
கல்வி தந்த வள்ளல்
காமராசர் என்பேன்!

**************************

(எங்களின் கல்வி வள்ளல் காமராசரின் பிறந்தநாள் வரும் ஜூலை 15 அன்று வருகிறது. அதற்காக இந்த குட்டிக்கவிதைகள் சமர்ப்பணம்... கடலை கடுகில் அடக்கமுடியாது... அவரின் புகழை எதனாலும் அடக்க முடியாது...)