ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, December 31, 2009

அன்பிற்கினிய வாசகர்களுக்காக நவீன ஆத்திசூடி..!

ன்பைக் கொடு..!

ணவம் அழி..!

ன்பத்தை நுகர்..!

கையை வளர்..!

வகையைப் பெருக்கு..!

க்கத்தை உயர்த்து..!

ளிமையைப் புகுத்து..!

ற்றம் பெற உழை..!

யம் நீங்கப் பயில்..!

ழுக்கம் நிறை..!

யாமல் சேவை செய்..!

ஓளவை சொல் கேள்..!

தே உமக்கு உயர்வு தரும்..! 


எங்களின் மதிப்பிற்குரிய வாசகர்களாகிய உங்களுக்கும், உங்களின் மேல் அன்பு கொண்டுள்ள அனைவருக்கும் எங்களின் மனம் நிறைந்த...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2010

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்
மோகனன். 




என் காதலி தேன்..!



என் காதலி தேன்..!
ஆதலால்
அவளைப் பார்த்ததும்
காதலித்தேன்..!
என் காதலியின்
முகமலர் தேன்..!
ஆதலால்
அவளைப் பார்த்ததும்
முகமலர்ந்தேன்..!
என்னவளின்
புன்னகை தேன்..!
ஆதலால்
அவளைப் பார்த்ததும்
புன்னகைத்தேன்..!
என்னவளின்
பூமுடி தேன்..!
ஆதலால்
அவள் கூந்தலில் நான்
பூமுடித்தேன்..!



Wednesday, December 30, 2009

இந்த ஆசைகளெல்லாம்..!



உன் அழகிய காது மடலைக்
கடிக்க ஆசை..!
உன் சங்குக் கழுத்தில்
இதழ் பதிக்க ஆசை..!
உன் வெண்டை விரலில்
மோதிரமிட ஆசை..!
உன் முத்தமிழ்ப் பேச்சில்
மூழ்கி விட ஆசை..!
இந்த ஆசைகளெல்லாம்
கரைவதற்குள்
என்னருகில் வந்து விடு அன்பே..!
இல்லையெனில்
என் ஆயுள் கரைந்து விடும்..!



Tuesday, December 29, 2009

உறைந்து போன நிலா..!



உனக்குத் தாலாட்டுப் பாட...
நிலவை உன்னறைக்குள்
வரும்படி அழைத்தேன்…
வெள்ளி நிலவும்
வெளிச்சப் புன்னகையோடு
இசைந்தது..!
உன்னறைக்குள் நுழைந்தது..!
உனைப் பார்த்ததும்
உறைந்து போனது நிலா…
காரணம்..?
நிலவின் 'க்ளோனாம்' நீ..!  



Monday, December 28, 2009

கடைசி வரை உனக்காகவே..! - காதல் குறுங்கவிதைகள்


உலகிலேயே மிகவும்
அழகான கவிதை ஒன்று
சொல் என்றார்கள்..!
நான் உன் பெயரை மட்டும்தான்
சொன்னேன்..!
அதற்கே அசந்து விட்டார்கள்..!

                     *** + ***

குற்றமென்ன செய்தேன் கொடிமலரே
உன் இதயமெனும் சிறையில்
எனை அடைத்து வைத்திருக்கிறாய்..!
ஓ… உன் இதயத்தைத் திருடிய
குற்றத்திற்கான தண்டனையா அது.?   

                     *** + ***

அன்பே…
நீ ஒரு பெண் பிரம்மா..!
எப்படி என்கிறாயோ..?
கல்வி வாசமே இல்லாத
என்னைக் கூட
கவிஞனாக்கிவிட்டாயே..!   

                     *** + ***

காய்ந்து கிடந்த என் மனதில்
காதலை விதைத்து விட்டுச் சென்றவளே
எப்போது வந்து அதை
அறுவடை செய்யப்போகிறாய்
உனக்காக காத்திருக்கிறேன்..!

                     *** + ***

உன் புன்னகைக்குத்தான்
எவ்வளவு வலிமை..?
இரும்பான என் இதயத்தைக்கூட
எளிதில் உடைத்து விட்டதே..!
உன் மௌனத்திற்க்குத்தான்
எவ்வளவு வலிமை..?
பேச்சாளனான என்னைக் கூட
மௌனியாக்கி விட்டதே..!
அட.. இதற்குப் பெயர்தான் காதலா..?

                     *** + ***

காத்திருந்து கரம் பிடிப்பதுதான்
காதல் என்றாய்..!
ஆதலால்தான் அன்பே
கடைசி வரை உனக்காகவே
காத்திருக்கிறேன்..!

                     *** + ***



Thursday, December 24, 2009

எங்களின் இதயக்கனியே..! - எம்.ஜி.ஆர் நினைவு நாள் கவிதாஞ்சலி


பொன் மனச் செம்மலே!
எங்களின் அண்ணலே..!
புரட்சித் தலைவரே..!
புதுமைப் பித்தரே..!
இந்திரனின் உருவே..!
எங்களின் இதயக்கனியே..!
மக்கள் திலகமே..!
என்றும் மங்காத செல்வமே..!
ஏழைகளின் ஒளிவிளக்கே..!
எங்களின் மணிவிளக்கே..!
நீ மறைந்து இன்றோடு
ஆண்டுகள் இருபத்தி இரண்டு..!

ஆண்டாண்டு காலமாய்
அழுது புரண்டாலும்
மாண்டவர் மீள்வதில்லை..!
நீ மாண்டு போகவில்லை ஐயா
மக்களின் மனங்களில்
குடியிருந்த கோவிலாய்
வாழுகின்றாய்..!
ஒளிவிளக்காய் எங்களுக்கு
வழிகாட்டுகின்றாய்..!

மன்னாதி மன்னா...
நின் மலரடி பணிகின்றோம்..!
நாடோடி மன்னா...
நின் வழி நடக்கின்றோம்..!
மறைந்தும் மறையாத
செல்வமே..
நீ வாழி...
நின் புகழ் வாழி..
வாழி நீ எம்மான்..!



Wednesday, December 23, 2009

வாசலில் ஒரு வானத்து தேவதை..!



அடுக்களையில் ஆராய்ந்தபடி
அவசரமாய்
சமையலறையில்
சமைத்துக் கொண்டிருந்தேன்...
அப்போது என் வீட்டுக்
கதவிற்கே வலிக்காமல்...
அக்கதவைத் தட்டும்
மெல்லிய ஓசை கேட்டது..?

உள்ளிருந்தபடியே
‘யாரென்று’ வினவினேன்..!
மறுபடியும்
அதே மெல்லியத் தட்டல்...
‘அட யாருங்கறேன்...’
என்றபடியே எட்டிப்பார்க்க முனைந்தேன்

அதற்குள்...
தேனினும் இனிய குரல் ஒன்று
’நான்தான்’ என்று
தேனமுத கானமாய் ஒலித்தது..!

எட்டிப் பார்த்தேன்..!
வாசலில் ஒரு வானத்து தேவதை..!
பார்த்த வினாடியில்
மூர்ச்சித்துப் போனேன்..!
அவளழகில் முயங்கிப் போனேன்..!

வெள்ளி நிறச் சேலை கட்டி
நீல வான வீதியிலே
துள்ளி வரும் வெண்ணிலவைப் போல்
எந்தன் பெண்ணிலவு
வெண்ணிறச் சேலை கட்டி
பொன்னிலவாய்
என் முன்னே வந்து நின்றது..!

அவளை அப்போதே
அள்ளிப் பருக ஆசை என்றாலும்
அவளழகைப் பார்த்த என் கண்கள்
இமை மூட மறுத்து திகைத்தன...
அவள் அழகில் மூழ்கித் திளைத்தன..!

‘வா என் தேவதையே...
உள்ளே வா...’ என அழைத்தேன்...
அவளும் தன் மெல்லியப்
பூப்பாதங்களை
பூமியிலே பதித்தபடி...
புன்னகையைப் பூவாய் உதிர்த்தபடி
உள்ளே வந்தாள்..!

அவள் அன்று கட்டியிருந்த
வெள்ளை நிறச் சேலையில்
என் மனதை கொள்ளையடித்தாள்..!
முல்லை மலர்ச் சிரிப்பில்
எனை மூழ்கடித்தாள்..!
முயலைப் போல் முறைத்துக் காட்டி
எனை மோகத்தில் சிக்க வைத்தாள்..!

கருங்கூந்தலை தென்றல் காற்றில்
அலைபாய விட்டாள்..
என் மனதை அதனூடே தவழ விட்டு
அக்கூந்தல் மணத்தை
என் இதயமெங்கும் கமழ விட்டாள்..!
அக் கூந்தலின் மணத்தை
என் சுவாசத்திற்க்கு அர்ப்பணித்தாள்..!

அன்று அவள் எனக்காகவே
பிறந்தது போல் தோன்றியது..!
அவள் எனக்காவே என் வாசல் தேடி
வந்தது போல் இருந்தது..!
அன்று முழுவதும் அவளுடனேயே இருக்க
வேண்டுமென்றும் மனசு துடித்தது..!

காலமில்லாத காரணத்தால்
பிரிய மனமின்றி பிரிந்து வந்தேன்..!
அவளின் நினைவால்
பித்தனாய் மாறிச் சென்றேன்..!
அதனை இங்கே கவிதைச்
சித்திரமாய் வரைந்து நின்றேன்..!
இதில் வண்ணங்கள் இல்லை என்றாலும்
என் எண்ணங்கள் உண்டென்பதை
மறவாதே தேவதையே..!
அதோடு சேர்த்து எனையும்...?!

*******

(ஒரு நாள் என்னவள், என் வீட்டிற்கு தேவதையாய் வந்தாள்... அன்று அவளுடைய அழகு எனைப் பாடாய்ப்படுத்திவிட, அவளிடம் இதை எப்படிச் சொல்வேன்... என் ஏக்கத்தை அவளிடம் எப்படித் தெரிவிப்பேன் என யோசித்தேன்... கடைசியில் அதை இங்கே கவிதையாக உளறியிருக்கிறேன்... )




Tuesday, December 22, 2009

இமையெனும் சிறையை..!



'இரவு முழுவதும்
ஏனடா தூங்கவில்லை..?' என
நீ கேட்கிறாய்..!
சுதந்திரமாய் நீ என்
கண்ணுக்குள்
இருக்கும் போது...
இமையெனும் சிறையை
நான் எப்படி அடைப்பது..?



Sunday, December 20, 2009

நீ இந்த உலகத்தில்..! - காதல் குறுங்கவிதைகள்



நீ என்னருகில் இருக்கும் வரை
உலகத்தையே மறந்திருக்கிறேன்..!
நீ என்னை விட்டு்ப் பிரிந்து சென்றால்
இந்த உலகமே என்னை மறக்கும்படி
செய்து கொள்கிறேன்..!
ஏனடா எனக்கிந்த காதல் வேதனை..?

                        *** + ***
என் பெயரை
யார் உச்சரித்தாலும்
சட்டென்று திரும்பாத
என் மனது..?
உன் பெயரை
யார் உச்சரித்தாலும்
சட்டென்று திரும்பி விடுகிறது..!
 
                        *** + ***

கடற்கரையின் மணற்பரப்பில்
கவலையின்றி பேசிக் கொண்டிருக்கும்
காதலர்களைப் பர்க்கும் போதெல்லாம்
எனக்குள்ளும் அந்த ஆசை பிறக்குமடா..?
உன்னுடன் நானும்
இதுபோல் எப்போது
அமர்ந்து பேசப் போகிறேன் என்று..?

                               *** + ***
அன்பே..!
நீ இந்த உலகத்தில்
யாரோவாக இருக்கலாம்..!
ஆனால்
நீதான் எனக்கு
உலகமே..!   

                              *** + ***
காதலென்பது
பொதுவுடமை என்கிறார்களே..?
அது உண்மைதானடா..!
நீ என்பது நானானேன்…
நானென்பது நீயானாய்…
நம் இருவரும் சேர்ந்து 'நாம்' ஆனோம்..!
இதுதானே பொதுவுடமை..!

                             *** + ***
உயிரே..!
உன்னுடைய பிறந்த நாளை
என்னுடைய பிறந்தநாளாக நினைத்து
அனைவருக்கும் இனிப்பு
கொடுத்து மகிழ்கிறேன்..!
ஏனெனில்…
நீ எனக்காகப் பிறந்தவனாயிற்றே..!

                                        - மலர்விழி மோகனன்
                              *** + ***                           




Thursday, December 17, 2009

உன்னைத் தவிர அத்தனையும்..!


கண்ணிமை உறக்கத்தைக்
கவர்ந்து கொண்டதேன்..?
கன்னி மொழிப் பேச்சினிலே
எனைக் கவிழ்த்து விட்டதேன்..?
காலம் கடந்து என் கண்
முன்னே வந்து நின்றதேன்..?
காதலெனும் மாய வலையில்
எனை சிக்க வைத்ததேன்..?
உன் காந்தமெனும் கண்ணிலே
எனை சிறை பிடித்ததேன் பெண்ணே..?
வரமாட்டாய் எனத் தெரிந்தும்
உன் வரவிற்காகக்
காத்துக் கொண்டிருக்கிறேன்..!
தரமாட்டாய் எனத் தெரிந்தும்
உன் தாயன்பை
கேட்டுக் கொண்டிருக்கிறேன்..!
காலம் கடந்து வந்தாலும்
காதல் காதல்தானே..!
மறந்துவிடு எனை என்றாய்...
மறந்து விட்டேன்...
உன்னைத் தவிர அத்தனையும்..!




Wednesday, December 16, 2009

காதலால் பரிதவிக்கிறேனடி..!



ஊருணித் திருவிழாவில்
குழந்தையைத் தொலைத்து விட்டு
பரிதவிக்கும் தாயைப் போல...
அயல் நாட்டில்
பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டு
பரிதவிக்கும் தமிழனைப் போல...
என் மனதை உன்னிடம்
தொலைத்து விட்டு பரிதவிக்கிறேனடி…
காதலால் பரிதவிக்கிறேனடி..!



Friday, December 11, 2009

அக்கினிக் குஞ்சொன்று பிறந்தது பார் ..!



ஆயிரத்தி எண்ணூத்தி எண்பத்தி இரண்டு
டிசம்பர் பதினொன்று அன்று
எட்டயபுரத்தில் பிறந்தது பார்
அக்கினிக் குஞ்சொன்று அங்கு...

தமிழ்ப்புவியில்
எட்டுத் திக்கும் எதிரொலிக்க...
எட்டயபுரத்தில்
சங்கத் தமிழும் சடசடக்க...
சிங்கம் நிகர் சின்னசாமிக்கும்
தங்கம் நிகர் லட்சுமிக்கும்
பிறந்தது தமிழ்ச் சிங்கக்குட்டியொன்று..!
அதன் பேரோ சுப்பிரமணியனென்று..!

கல்வி பயிலும் பாலக வயதில்
ஆசுகவி பாட்டிசைத்த
காரணத்தால்...
சுப்பிரமணியர்க்கு சூட்டினர்
பாரதி என்ற ஏற்றதோர் பட்டத்தை..!

சங்கத் தமிழ் கற்றது மட்டுமின்றி
பற்பல சாத்திரங்கள் கற்றது மட்டுமின்றி
பன்மொழியினையும் கற்றுத் தெளிந்தான்
தமிழ்ப்பண் பாட்டிசையும் கற்றறிந்தான்..!




பாரதத் தாயின் அடிமைத் தளையை
அடிச்சுவட்டிலிருந்து அகற்றிடவே
எழுதுகோலை ஆயுதமாய்
பிரயோகித்தான்...
வார்த்தைகளில் வலிமையைக் காட்டியே
வறியோர்க்கும் வலிமையை ஏற்றினான்...
வீழ்ந்து கிடந்த மக்களை எல்லாம்
வீரர்களாய் மாற கவி சமைத்தான்...

சுதந்திரக் கனலை மூட்டி விட்டான்..!
முழுமையற்றவற்களை
முழுமையாக ஆக்கி விட்டான்..!
சாதிப்பிரிவுகளை எதிர்த்து நின்றான்...
ஏற்றத்தாழ்வுகளை அழித்து நின்றான்...
புதுக்கவிதையின் தந்தையாய்
உருவாகி நின்றான்..!
ஆசு கவிகள் பல படைத்து நின்றான்..!
எங்கள் மனதில் குன்றென நின்றான்..!
அவன் பெயர் மாகாகவி பாரதி என்றான்..!

எட்டயபுரத்தில் பிறந்தாலும்
எந்தன் தமிழுக்காகவே நீ பிறந்தாய்..!
இன்றுன் பிறந்தாநாள் அய்யா..!
மகாகவி பாரதி நீயன்று...
மகா பாரதத்தின் தீ
நீயெனக் கண்டு
நின் வழி போற்றி நிற்கின்றேன்..!

உன் புரட்சிப் பாதையில் அடியேனும்
அடிமையாய்ப் பின் தொடருகிறேன்...
உன் சொல் காத்து நிற்கின்றேன்...
நீ பிறந்த இந்நாள் அய்யா...
இந்த தேசத்திற்கே
தேசியக் கவிஞர் தினம் அய்யா..!
வாழ்க எம்மான்...
எங்களுள் அமரனாய் என்றும்
வாழ்கிறாய் எம்மான்...

                                      -  மோகனன்.

(தேசியக் கவியாகிய மகாகவி பாரதியாருக்கு இன்று 128 –வது பிறந்தநாள் விழா... அவருக்கு இந்தக் கிறுக்கனின்  கிறுக்கல்  சமர்ப்பணம்...)


"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி"

                                                                                                   – மகாகவி பாரதியார்



Thursday, December 10, 2009

உன் வேல்விழியால்..!



அன்பே…
உன் வேல்விழியால்
என் இதயத்தைக் குத்தாதே..?
உள்ளே நீயிருக்கிறாய்..!
உன் பூ மேனி உடலில்
காயம் பட்டுவிடப் போகிறது..!



Wednesday, December 9, 2009

ஷாஜகானைப் போல்..!



எனக்காக ஷாஜகானைப் போல்
தாஜ்மஹால் கட்டுவாயா என்றாய்..?
மாட்டேன் என்றதும்
மனதொடிந்து விட்டாயே..!
அட அறிவாளி...
நீ என்னுடன் வாழப்பிறந்தவள்...
சாகப் பிறந்தவள் அல்ல..!



Tuesday, December 8, 2009

ஒரே ஒரு நொடியில்..!


அருவமாய் இருந்த எனக்கு
கருவில் உருவம்
கொடுத்தாளென் தாய்…
அதற்குப் பத்து மாதங்கள் ஆனது..!
கிள்ளையாய் இருந்த என்னை
நல்ல பெண் பிள்ளையாய்
மாற்றினார் என் தந்தை…
அதற்குச் சில ஆண்டுகள் ஆனது..!
களி மண்ணாய் இருந்த என்னை
சிறந்த கல்விமானாக
மாற்றினாள் என் ஆசிரியை…
அதற்குப் பல ஆண்டுகள் ஆனது..!
என்ன மாயம் செய்தாயடா..?
ஒரே ஒரு நொடியில்
நான் உந்தன் காதலியாகி விட்டேன்..!
                                    
                                                 - மலர்விழி மோகனன்




Monday, December 7, 2009

ஒரே ஒரு ஒற்றை வார்த்தைக்காக..!



எதற்க்கும் அடி பணியாதவன்...
உன் அன்பிற்கு அடிமையானேன்..!
எவற்றுக்கும் அஞ்சாதவன்...
உன் பார்வைக்கு அஞ்சினேன்..!
அடிதடிக்கே பழக்கப்பட்டவன்...
உன் அன்பு கண்டு அண்ணலானேன்..!
பகட்டாகத் திரிந்து கொண்டிருந்தவன்...
உன் எளிமை கண்டு ஏழையானேன்..!
என்னுள் ஏற்பட்ட இத்தனை மாற்றமும்
நீ உதிர்க்கும் அந்த ஒரே ஒரு
ஒற்றை வார்த்தைக்காக
அன்பே எனைக் காதலி..!

(இதற்குச் சரியான படம் கிடைக்க வில்லை என்பதால்... பொதுவாய் இப்படி... ஹி...ஹி...நான் எடுத்த புகைப்படம் என்பதாலும் இப்படி..!)



Friday, December 4, 2009

நீ இல்லாத இரவுகளனைத்தும்..!



குளிர்ச்சியான மார்கழி இரவு..!
வெண்பனி போர்த்திய
வெள்ளை நிலவு..!
நீல வானக் கானகத்தில்
பூத்துச் சிரிக்கும்
நட்சத்திரக் கூட்டங்கள்..!
உரசிச் செல்லும்
வெண் மேகக் குவியல்கள்..!
இரவில் மலரும்
அல்லி மலர்கள்… - என
எத்தனையோ ரசிப்பதற்கு
இருந்தாலும்..?
நீ இல்லாத இரவுகளனைத்தும்
எனக்கு கோடை வெயிலாகத்தான்
தோன்றுகிறது..!



Thursday, December 3, 2009

திறந்து மூடாதே..?



அன்பிற்கினியவளே...
உன் இமைகளை
படபடவென்று திறந்து மூடாதே..?
பட்டாம் பூச்சியோ
எனப் பிடிக்க வருகிறேன்..!
உன் செவ்விழ் அதரங்களைத்
திறந்து மூடாதே..?
கொவ்வைப் பழமோ என
கடிக்க வருகிறேன்..!
உன் இதய வாசலை மட்டும் திறந்து மூடு..!
உள்ளே நானிருக்கிறேன் என்று
இந்த உலகிற்கு தெரியட்டும்..!   



Wednesday, December 2, 2009

உன் மூடிய இமைக்குள்..!



உன் மூடிய இமைக்குள்
கருவிழியாய் நான்..!
கார்மேகக் கூந்தலில்
மணக்கும் மல்லிகையாய் நான்..!
தந்தங்கள் இழைத்த உன் கன்னத்தில்
விழும் குழியாய் நான்..!
உன் சந்திர வடிவ நெற்றியில்
சூரியக் குங்குமமாய் நான்..!

உன் வெண்சங்குக் கழுத்தில்
பொன் மஞ்சள் நாணலாய் நான்..!
மூடி மறைத்த உன்
மார்புகளுக்கிடையில்
இறங்கும் வியர்வைத் துளிகளாய் நான்..!
உன் பூந்தளிர்க் கரங்களில்
ஒலிக்கும் வளையல்களாய் நான்..!

கொழுத்த உன் வயிற்றினில்
கொப்பூழாய் நான்..!
உன் வாழைத் தண்டு கால்களில்
ஒலிக்கும் கொலுசொலிகளாய் நான்..!
மெல்லிய உன் கால் விரல்களில்
ஒளிரும் மெட்டியாய் நான்..!

இப்படி உன்னுள் அனைத்தும்
நானாக விரும்புகிறேன்..!
உன்னுள்ளும் உணர்ச்சிகள்
உண்டென்பதை நானறிவேன்..!
வாழ்க்கைக்காக நீ காத்திருந்தது
போதும் கண்ணே..!
உனக்காக ஒரு வாழ்க்கையே
இங்கு காத்திருக்கிறது..!

நீ விதவையெனில் உனை
நான் காதலிக்கலாகாதோ..!
சகியே… சமூகம் ஒரு குப்பையடி
அது சாத்திரங்களின் நாற்றமடி..!
போதும் உனது பொய் வாழ்க்கையடி..!

உன் விதவைக் கோலத்தைத் துறந்திடடி..!
உன் பழைய வாழ்வை மறந்திடடி..!
என் உணர்வுகளை நீயும் மதித்திடடி..!
என்னுள் இரண்டறக் கலந்திடடி..!



Tuesday, December 1, 2009

உலக எயிட்ஸ் தினம் - விழிப்புணர்வுக் கவிதைகள்



நீர்க்குமிழிகள்...

வழிதவறி உருவான
நீர்க்குமிழிகள்...
இலக்கில்லாமல்
ஆற்றின் நீரோட்டத்தில்
மிதந்து செல்கின்றன...
விரைவில்
பட்டுடைந்து போக...
மனித சமுதாயத்திலும்
நீர்க்குமிழிகளாய்
எயிட்ஸ் நோய்க் குழந்தைகள்...

கற்றுக் கொள்...

ஒருவனுக்கு ஒருத்தியென
வாழக் கற்றுக் கொள்...
ஏனென்றால் எமன் ஒன்றும்
எருமையில் வரவில்லை அப்பனே
மெதுவாக வருவதற்கு...
எயிட்ஸ் மூலம் வந்து கொண்டிருக்கிறான்
ஏவுகணை போல்...

எயிட்ஸ் - குறுங்கவிதை

கலியுக எமதர்மனின்
நவயுக எம வாகனம்
ஏப்பு நோயெனும் எயிட்ஸ்

(இன்று உலக எயிட்ஸ் ஒழிப்பு தினம்... அதற்கான சிறப்பு கவிதைகள் இங்கே... முன்பே இவைகளெல்லாம் எழுதப்பட்டவை என்றாலும்... இன்றைய தினத்திற்கு சரியாக இருக்குமென்பதால் மீள்பதிவாய் இங்கே...)



Monday, November 30, 2009

உன்னைப் போலவே அழகாய்த்தான்..!



தனியாக கிளைத்து
முளைத்திருக்கும்
என்னுடைய பல்லைப் பார்த்து
'அழகான தெற்றுப் பல்' என்றாய்..!
அழகற்ற எனைப் பார்த்து
'அழகின் சிகரமே' என்றாய்..!
என் சாதாரண நடையைக் கூட
'அழகு மயில்' நடையென்றாய்..!
ம்ம்ம்… உன்னைப் போலவே
அழகாய்த்தானிருக்கிறது…
நீ சொல்லும் பொய்களும்..!

                                               - மலர்விழி மோகனன்

(என்னைப்பற்றி என்னவளின் மனதில் உள்ளதை, அவளின் பேரில் வடித்த கவிதை)



Friday, November 27, 2009

கவிதை என்றாலே..!



கவிதை என்றாலே
பொய் என்பார்களே ..?
நீ மட்டும் எப்படி
உண்மையான கவிதையாக
என் கண் முன்னே நிற்கிறாய்..!



Thursday, November 26, 2009

பொல்லாத ஓர் இரவில்..! - மும்பை தாக்குதல் முதலாமாண்டு நினைவுக் கவியாஞ்சலி



பொல்லாத ஓர் இரவில்
பொல்லாங்கு செய்பவர்கள்
பல்லாக்கு தூக்கிகள் போல்
பதுங்கிய படி வந்திட்டார்…
பாகிஸ்தானிலிருந்து
பயங்கர ஆயுதங்களுடன்
மும்பையில் நுழைந்திட்டார்

அவர்களெண்ணத்தில்
அவல எண்ணங்கள் உதித்திருக்க
அதுவரை உதித்திருந்த
கதிரவனோ…
பயங்கர இரவைக் காணச்
சகியாமால்…
சட்டென்று மறைந்து போனான்…

சட சடவென்று
துப்பாக்கியால் சுட்டபடி
தீயவர்கள்
திகில் கொடுக்க…
மும்பை மாநகரம்
திடுக்கிட்டு விழித்தது…
திகிலில் உறைந்தது…

விட்டில் பூச்சிகளிடம்
வீரத்தைக் காட்டிய
ஈனப்பிறவிகள்…
ரயில் நிலையத்தில்
ரணகளத்தை காட்டிவிட்டு
நட்சத்திர விடுதிக்குள்
நரிகளைப் போல் நுழைந்தன…
கண்ணில் பட்டோரை
சடுதியில் கொன்றன…

உலகத்தின் பார்வை அனைத்தும்
இங்கு குவிந்திருக்க…
வெண்ணிலவும் இந்நிகழ்வை
வேதனையோடு பார்த்திருக்க
வெறியாட்டம் போட்ட
ஈனப் பன்றிகள்…
குதியாட்டம் போட்டன…

அப்பன்றிகளை வேட்டையாட
வேங்கைக் கூட்டமொன்று
புயலெனக் கிளம்பிற்று…
உயிரை துச்சமெனக் கருதி
கடமையை உயிரெனக் கருதி
பிற உயிர்களின் நலன்களைக் கருதி
அவ்வேங்கைகள் பாய்ந்து வந்தன…

ஊழல்வாதிகள் செய்த வினை
ஊடகங்கள் செய்த வினை
அத்தீயவர்களுக்கு
திட்டமாக…
வேங்கையின் தாக்குதல்கள்
விபரீதமாயிற்று…
வீரம் காட்டிய வேங்கைகள்
வீரமரணம் எய்தின…

இறுதியில்…
இன்னுயிர்களை ஈந்து
ஈனப்பன்றிகளை
அழித்தன…
இந்தியர் அனைவரும்
அமைதிப் பெருமூச்செய்தினர்…


உயிரினை இழந்தோர் பலர்...
அங்கே உறவுகளை
இழந்தோர் பலர்…
இறந்தவர்
பல மதத்தினராயினும்
அவர்களைக் காத்தது
இந்தியரன்றோ…

ஒற்றுமை காட்டிடும்
இத்தேசத்தில்
பிற நாட்டு
தே… மகன்களுக்கு
ஒற்று வேலை செய்தலாகுமோ…
நம் தேசத்தை
கூறு போட நினைப்பது தகுமோ…

இதற்குப் பின்னேனும்
விழிக்க வேண்டாமோ நாம்…
வீணர்களை விரட்ட
வேண்டாமோ நாம்…
இத்துன்ப நிகழ்வு நிகழ்ந்து
இன்றோடு ஆண்டொன்று

அழுது கரைந்தாலும்
உருண்டு புரண்டாலும்
உயிர்கள் மீளாது…
நம் உள்ளங்களோ கண்ணீர்
உகுக்காமலிருக்காது…
உயிர் நீத்த உள்ளங்களுக்கும்
மானம் காத்த மாவீரர்களுக்கும்
கண்ணீர் கவியாஞ்சலி செலுத்துகிறேன்
காணிக்கையாக்குகிறேன்…

போனவரை போகட்டும்
இனியொமொரு
தாக்குதலை…
இம் மண்ணில் நடத்த
விடமாட்டோம்…
மீறி நடக்க வைக்க முயல்பவர்களை
நசுக்கியெறிவோம்…

எச்சமர் வரினும்
அவனியில் அஞ்சாமாட்டோம்
அசகாய சூரனென்றாலும்
அடியோடு
அழித்தெடுப்போம்…

இது…
நம்நாடு…
நம்தேசம்...
நம் மக்கள்…
நாமனைவரும் இந்தியர்கள்…
என்ற எண்ணம் காப்போம்...
என்றும் இந்தியனாய் இருப்போம்...



மும்பை தாக்குதல் - முதலாமாண்டு நினைவு மரபுக்கவிதாஞ்சலி

 

தொம்பையி னாறிய தீயவர் திமிரோடு
மும்பையில் துட்டக் கால் வைத்தனர் – மேலும்
தும்பைப் பூ போன்ற உயிர்களை வதைத்தனர்
வம்பையும் விலைக்கு வாங்கினர்.

வேதனைக் குரல்கள் நாற்புறம் ஓலிக்க
கோதனைக் காக்கிளம் பியதரி மாப்படை
சோதனைத் தீர்க்க தம்மின்னுயிரை ஈந்து
சாதனை படைத்தவ்வெஞ் சமர்.

ஆயிற்றத் துன்பம் நிகழ்ந் தாண் டொன்று
போயிற்றோ நம்மனக் கவலைகள் - மாவீரர்களே..?
தீயிட்டழிக்கும் கொடும் தீவிரவாதி களையவ்
வாயிலினில் வைத்தே வதைத்திடும்.

                                                             
                                                                    - மோகனன்

(மும்பைத் தாக்குதல் நடைபெற்று...இன்றுடன் ஓராண்டு நிறைவு ஆகிறது... அவ்வெஞ்சமிரில் இன்னுயிரை ஈந்து பிற உயிர்களைக் காத்த மாவீரர்களுக்கு உங்களனைவரின் சார்பிலும் இந்த மரபுக்கவிதையினை கண்ணீர் அஞ்சலியுடன் சமர்ப்பிக்கிறேன்... இனியும் இதுபோன்ற துன்பியல்கள் இந்தியாவில் நடைபெறக்கூடாது என்ற நற்சிந்தனைகளுடன் உங்களிடம் இதைப் படையலிடுகிறேன்...)



Wednesday, November 25, 2009

அரபிக்கடல் போல..!



அரபிக்கடல் போல
அழகாய்த்தானிருக்கிறாய்..!
வங்கக் கடல் போல
வனப்பாய்த்தான் இருக்கிறாய்..!
இந்தியப் பெருங்கடல் போல
இன்பமாய்த்தான் இருக்கிறாய்..!
உன்னுடன் பயணிக்க வேண்டும்
என்ற ஆசை எனக்கு…
காதல் என்னும் படகைத்தான் காணோம்..?




காதலுக்குப் பிரசித்தம்..!



யானைக்குப் பிரசித்தம் மதம்..!
குதிரைக்கு பிரசித்தம் வேகம்..!
தண்ணீருக்குப் பிரசித்தம் தாமரை..!
பன்னீருக்குப் பிரசித்தம் வாசனை..!
பகலிற்குப் பிரசித்தம் சூரியன்..!
இரவிற்குப் பிரசித்தம் நிலவு..!
காதலுக்குப் பிரசித்தம் நீ..!
உனைப் பற்றிய
கவிதைக்குப் பிரசித்தம் நான்..!



Tuesday, November 24, 2009

உன் கடைக்கண் பார்வை..!




வானத்தில் ஏழு வண்ணங்கள்
சேர்ந்தால்…
அது வானவில்..!
நினைவில் பல எண்ணங்கள்
சேர்ந்தால்…
அது கவிதை..!
நிகழ்வில் நம் மனங்கள்
சேர்ந்தால்…
அது காதல்..! அதுதான் காதல்..!

"""""""""""""***""""""""""""

சூரியனின் பார்வை
பட்டால்தான்
இந்த உலகம் விழிக்கும்..!
சந்திரனின் பார்வை
பட்டால்தான்
அந்த இரவும் விழிக்கும்..!
உன் கடைக்கண்
பார்வை பட்டால்தான் பெண்ணே
என் காதல் விழிக்கும்..!

"""""""""""""***"""""""""""




Monday, November 23, 2009

என் தமிழாசானுக்கு... - மரபுக்கவிதை



குருகுல வாசம் பயிலவில்லை நின்பாதத்
திருத்தாழ் பணியவில்லையாயினும் - நீரெனக்கு
அருந்தமிழ்ப் பயில்வித்து ஐயம் நீக்கினீர்
மருந்தமிழே யுனை மறவேன்                        
                                                             - மோகனன்

(எனது சென்னை வாழ்விற்கு காரணமாயிருந்த, எனது இளங்கலை வகுப்பின் தமிழாசிரியர்களுள் ஒருவரான திரு. நல்லதம்பி ஐயா அவர்களை 21.11.2009 அன்று சந்தித்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு எனக்கு தமிழ்ப்பாடம் எடுத்தவர்.  இந்திய அளவில் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் (UGC - NET Exam) தேர்விற்காக, அவரிடம் இன்று ( 21.11.2009)  மீண்டும் பாடம் படித்தேன். 


எனக்கமைந்த தமிழாசிரியர்களுள் சிறந்தவர் திரு. நல்லதம்பி ஐயா அவர்கள், அவருடன் தியாகராய நகருக்கு (அன்று மாலை 6.45 மணி அளவில்) பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது அவருக்காக எழுதிய வெண்பா வடிவில் எழுதிய மரபுக் கவிதை. அதை அவரிடம் கொடுத்தேன்... படித்து, பின் பாராட்டி மகிழ்ந்தார்...


அதே மகிழ்ச்சியை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்)




அரசியல்வாதியின் வேண்டுதல்..!



திருப்பதி ஏழுமலையானே...
இந்த (இடை)த்தேர்தலில்
என்னை நீ ஜெயிக்க வச்சா..?
எனக்கு ஓட்டு போட்ட
ஊர் மக்களுக்கு
மொட்டையடிச்சு
உனக்கு கிரீடம் சாத்துறேன்..!

(20.08.2004 அன்று காலை 9.30 மணியளவில் எழுதி வைத்த கவிதை, தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் வரவிருப்பதால், இங்கே மீள்பதிவாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை கவிதையாய்...)




Friday, November 20, 2009

உன்னோடு சேர்ந்து நடப்பதென்றால்..!



உன்னோடு சேர்ந்து நடப்பதென்றால்
கடும் காடு மலை என்ன..?
சுடும் பாலைவனத்தில் கூட
நடந்து வருவேன்..!
உன் பூப்பாதங்களை தாங்கியபடி..!



Thursday, November 19, 2009

கண்கள் பேசுமா..? - காதல் குறுங்கவிதைகள்..!


கண்கள் பேசுவதை
எங்கும் நான்
கண்டதில்லை பெண்ணே..!
உன் கண்களை
நான் சந்திக்கும் வரை..!

* * * * *


நான் உற்சாகம் இழந்து
வீழும் போதெல்லாம்
உன்னை நினைத்தாலே போதும் கண்ணே..!
எனக்குள் உற்சாகம்
தானாக வந்துவிடும்..!
என் உடலுக்குள் புது வேகம்
பிறந்து விடும்..!

* * * * *

பூமி தன்னைத்தானே
சுற்றியபடி
சூரியனையும் சுற்றிக்
கொண்டிருப்பது போல…
என் உடல் இங்கே சுற்றினாலும்
என் மனசு எப்பொழுதும்
உன்னைத்தான்
சுற்றிக் கொண்டிருக்கிறது..!

* * * * *

உன் நாவில்
தேனூறுகிறதா என்ன..?
நீ பேசுவதைக் கேட்டாலே
என் காதுகளிரண்டும்
இனிக்கின்றனவே..!

* * * * *

உன் பெற்றோர்களே உனை
ஒரு ஓவியமாய் தீட்டியிருக்கும் போது..!
கவிஞனான நான் உன்னைப் பற்றி
என் மனதிற்குள் பெருங்காவியமே
தீட்டி வைத்திருக்கிறேன்...
நீ வந்து படித்துப் பார்ப்பாய் என..!

* * * * *

ஒரு பூக்கூடையே
பூ வாங்க வருவது
போலிருக்கிறது..!
நீ... பூ வாங்க
வரும் அழகு..!

* * * * *




Wednesday, November 18, 2009

அழகிய திருடிக்கு பரிசு..!



என் தூக்கத்தை…
என் பசியை…
என் கனவுகளைத் திருடிய
அழகிய திருடியே...!
இவைகளைத்
திருடிய உனக்கு
என்னையே பரிசளிக்கிறேன்…
எனை ஏற்றுக் கொள்வாயா..?



Tuesday, November 17, 2009

இல்லாதிருந்திருந்தால்..!



பசி என்று ஒன்று மட்டும்
இல்லாதிருந்திருந்தால்
மானுட வாழ்வில்
தேடுதல்கள் என்பதே
இருந்திருக்காது…
மரணம் என்று ஒன்று மட்டும்
இல்லாதிருந்தால்
இம்மண்ணில்
மக்கள் தொகையும்
குறைந்திருக்காது...
உன் காதல் என்று ஒன்று மட்டும்
எனக்குஇல்லாதிருந்தால்
என் பிறப்பின் பயனும்
தெரிந்திருக்காது..!



Monday, November 16, 2009

உனக்கு ரசிகனான பின்பு..!



நீ எழுதிய கவிதைகளுக்கு
நான் ரசிகையாகி
விட்டேனடா என்றாய்..!
அவைகளெல்லாம்...
உனக்கு நான்
ரசிகனான பின்பு
எழுதிய கவிதைகள்தான்
என்பதை
நீ அறிவாயா அன்பே..!



Friday, November 13, 2009

உதடுகளை மறைத்துக்கொள்..!



உன் செம்பவள உதடுகளை
மறைத்துக்கொள்
பெண்ணே..!
உன் இல்லமருகே இருக்கும்
ரத்தின வியாபாரியின்
கண்களில்
பட்டுவிடப் போகிறது..!
பிறகு அவன்
எனக்குப் போட்டியாக
வந்துவிடுவான்..!



Thursday, November 12, 2009

எங்கே கற்றுக் கொண்டாய்..?




என் மனமெனும்
காட்டுக் குதிரையை...
காதலெனும்
கடிவாளமிட்டு
உனதாக்கிக் கொண்டவளே…
எங்கே கற்றுக் கொண்டாய்
இந்த வசியக்கலையை..?
எனக்கும் சொல்..?
கற்றுக் கொள்கிறேன்..!



Wednesday, November 11, 2009

காதல்..!


காத்திருக்கிறேனடா... - உனக்காக

னித்திருக்கிறேனடா... - நீ

ல்லாமல் போனால் ல்லறமே எனக்கில்லையடா..!                                                     




Tuesday, November 10, 2009

ஏனடா நீ..?

உன் அன்பிலே
என் அன்னையைக் கண்டேன்…
உன் அறிவுரையிலே
என் தந்தையைக் கண்டேன்…
உன் ஆறுதல் வார்த்தையில்
என் தோழனைக் கண்டேன்…
இப்படி எல்லாமுமாய் வந்தாயே…
ஏனடா நீ...
என்னவனாக
வராமல் போனாய்…?

     

(என் அன்பிற்குரியவள்... எனக்காக எழுதிய கவிதை...)




மறையாத மின்னலென்று..!



''என் கார்மேகக் கூந்தலில்...
நான் பூ வைத்திருக்கும் அழகு
மூன்றாம் பிறையென்றாய் சரி..!
என் கூந்தல் நீளத்திற்கும்
பூ வைத்தால் என்ன சொல்வாய்..?''
சிறு அளவு பூ… 'மூன்றாம் பிறை'யெனில்
நெடு அளவு பூவிற்குச் சொல்வேன்
உன் கார்மேகக் கூந்தலில் அது
மறையாத மின்னலென்று..!   



Monday, November 9, 2009

நிலா தேவதை..!


இருண்ட வானில்...
திரண்ட மேகங்கள்
நட்சத்திரங்களைக் கண்டு கூட
மகிழாது..?
வெண்ணிலவைக் கண்டதும்
அதோ எங்கள்
நிலா தேவதை
வந்துவிட்டாளென்று
மகிழ்ந்து திரியும்…
உன்னைக் கண்டதும்
என் மனம்
மகிழ்ந்து திரிவதைப் போல..!



Thursday, November 5, 2009

நீ தொட்டு உயிர்ப்பித்தாய் என்பதற்காக..!



ஒரே ஒருநாள் மட்டும்
உயிர் வாழ்ந்தாலும்...
நீ தொட்டு உயிர்ப்பித்தாய் என்பதற்காக
உனக்காகவே உன் வீட்டு வாசலில்
காத்துக் கிடக்கிறது…
என்னைப் போலவே
நீ இட்ட மாக்கோலமும்..!



Tuesday, November 3, 2009

உன்னைப் போலொரு கவிதையை...



வெற்றுக் காகிதத்தில்
உனைப் பற்றி
ஆயிரம் ஆயிரமாய்
கவிதைகள் வடித்தாலும்
உண்மையில்...
உன்னைப் போலொரு கவிதையை
என்னால் வடிக்க முடியாது
என்பதை
திறந்த மனதோடு
ஒத்துக் கொள்கிறேன்..!



Monday, November 2, 2009

பொன்னாபரணங்களின்றி..!



பொன்னாபரணங்களின்றி
எளிமையாக இருப்பதுதான்
உனக்குப் பிடிக்கும் என்றாய்..!
ஆயினும் பெண்ணே
உன் நெற்றியில் பூத்துள்ள
வியர்வைத் துளிகளனைத்தும்
வெண் முத்துக்கள் போன்றும்...
உன் இதழின் ஈரத்தில்
பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி
வைரம் போன்றும் மின்னுகின்றனவே...
இந்த ஆபரணங்களை
நீ என்ன செய்யப் போகிறாய்..!



Friday, October 30, 2009

நூறு மில்லி..!



மறந்தும் கூட பெரிய வார்த்தை
பேசாத அப்பா..!
அன்புடன் அரவணைப்பதில்
அன்னைக்கு
நிகரான தந்தை..!
கேட்டவுடன் அள்ளித் தருவதில்
புராண காலக் கர்ணனை விஞ்சிய
நிகழ்கால வள்ளல்..!
அப்பப்பா... என் அப்பாவிடம்
எவ்வளவு நற்குணங்கள்..!
அத்தனையும் தவிடு பொடியானது
அவரடித்த நூறு மில்லியால்..!



Thursday, October 29, 2009

குறுங்கவிதைகள்: கல்வி..!




இன்றைய கல்வி

சரஸ்வதியைக் காண
லட்சுமியைத்
தேட வேண்டியிருக்கிறது..!

*_*_*_*_*_*_*_*_*_*_*_*

பள்ளி

தமிழுக்கு தொண்டு செய்த
ஔவையின் நினைவாக
ஒரு பள்ளி..!
பெயர் மட்டும்
'ஔவையார் அகாடமி'

*_*_*_*_*_*_*_*_*_*_*_*

கற்பின் விலை

கல்வித்தாயினுடைய
கற்பின் விலை
டொனேஷன்..!

*_*_*_*_*_*_*_*_*_*_*_*



Wednesday, October 28, 2009

உலகின் மிகச் சிறந்த சிற்பிகள்..!



இந்த உலகின்
மிகச்சிறந்த
சிற்பிகள் யார்..?
என்று போட்டி வைத்தால்
முதல் பரிசு
உன்னுடைய
பெற்றோர்களுக்குத்தான்
பெண்ணே..!



Tuesday, October 27, 2009

நீரின்றி..!

நீரின்றி மீன்கள்
வாழுமா பெண்ணே..?
வாழமுடியாதடா என்றாய்
பிறகெப்படி..?
நீரே இல்லாமல்
உன் கண்களுக்குள்
இரண்டு கெண்டை மீன்கள்
துள்ளி விளையாடுகின்றன..?



(இது என்னுடைய 50-வது பதிவு... இந்நேரத்தில் என் தாய், தந்தைக்கும், தாய்த்தமிழுக்கும், அன்பு நண்பர்களுக்கும், எனை எழுதத் தூண்டிய என்னவளுக்கும் எனது நன்றிகள் சமர்ப்பணம்..)




Monday, October 26, 2009

எனக்கும் தேனீக்கும் சண்டை..?




உன்னால்...
எனக்கும் தேனீக்கும்
சண்டை பெண்ணே...
நீ சிந்துவது
புன்னகையா..?
தேனா என்று..?



Friday, October 23, 2009

உதைக்க வருவதேன் பெண்ணே..!




உண்மையைச் சொன்னால்
உதைக்க வருவதேன் பெண்ணே..?
உன் முகம் அழகிய ரோஜா என்றேன்..!
சீச்சீ... என் முகமெல்லாம்
முகப்பருக்கள்..?
ஏனடா ரோஜா என பொய் சொல்கிறாய்
என்றபடி எனை அடிக்க வருகிறாய்..!
அட அசடே...
முள்ளில்லாத ரோஜா ஏது..?