ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, June 29, 2010

சொல் தேவி சொல்..?

உன் நிழல் சிறிது தடுமாறினாலும்...
என் நிஜம் தடுமாறுகிறது...
உன் குரல் சிறிது தடுமாறினாலும்...
என் சித்தம் தடுமாறுகிறது...
உன் கண்களில் சிறிது நீர் கோர்த்தாலும்...
என் கண்களில் குருதி கோர்க்கிறது...
ஒற்றையாளாய் நீ அங்கே துவளும்போது
கற்றையாய் நான் இங்கே வீழ்ந்து போகிறேன்...

நீ படும் துயரங்களை எல்லாம்
செல்பேசியில் என்னிடம் சொல்லும் போது...
என் உடலின் செல்களனைத்தும்
செத்து விடத் துடிக்கின்றன..!
உன் துன்பத்தை தடுக்க முடியாமல் போனால்
மாண்டு விடுவதே மேலென்று
மண்டியிட்டு கதறுகின்றன..!
உன்னோடு நானிருக்கையில்
துன்பப்படலாமா..? நீ துயரப்படலாமா..!
சொல் தேவி சொல்..?



Monday, June 28, 2010

இன்றைய அரசுப்பணி..?

லஞ்ச ஒழிப்புத் துறையில்
பணிக்கு ஆள் எடுக்கிறார்கள்
என்றறிந்து மனுப் போட்டேன்..!
'எழுத்துத் தேர்வு எழுது..?' என்றனர்
எழுதி முடித்தேன்..!
'உடல் தேர்வில் தேறு..?' என்றனர்
தேறி முடித்தேன்..!
முடிவாய்...
நேர்முகத் தேர்விற்கு
நேர்மையான சான்றிதழ்களோடு
வா என்றனர்..!
என் சான்றிதழ்களின்
நேர்மையை ஆய்வு செய்த பின்
நேராய்க் கேட்டார்கள்
'இப்பணியில் சேரவேண்டுமெனில்...
இவ்வளவு லஞ்சம் தரவேண்டும்..!
நீ எவ்வளவு தருவாய்..?'



Friday, June 25, 2010

பூவைத் தமிழாள்..! - மரபுக் கவிதை

பூவைத் தமிழாள் பன்மொழி யுருவெடுத் தாளிங்(கே)
கோவைத் தமிழ், நெல்லை தமிழ் - சேலத் தமிழ்
மங்கா மதுரைத் தமிழ், மயக்கும் ஈழத் தமிழ்
செங்கதிர்ச் சென்னைத் தமிழ்.

                                                            - மோகனன்




Thursday, June 24, 2010

கொங்கு நாட்டில்..! - மரபுக் கவிதை


நனித்தமிழ் முகிழ்த்தெழும் கொங்கு நாட்டில்
தனித்தமிழ் தமிழர் களனைவ  - றொன்றூடி
சத்தமி ழுக்குர மேற்றியு ரூட்டவே
இத்தமிழ் தரணியா ளும்.
                                                         - மோகனன்




Wednesday, June 23, 2010

வாழிய செம்மொழித்தமிழ்..!


செந்தமிழ் நாட்டினில் பிறந்ததெனக்குப் பெருமை
பைந்தமிழே தாய்மொழி யானதெனக்குப் பெருமை
தீந்தமிழில் கவி சமைப்பதெனக்குப் பெருமை
பூந்தமிழே நீ பெருமைக்கே பெருமை..!

*********

சங்கம் வளர்த்த தமிழுக்கு இன்று
கொங்கு மண்டலத்தில் திருவிழா..!
தங்கத் தமிழின் பிள்ளைகள் எல்லாம்
மங்காத் தமிழுக்கு எடுக்கும்
பொங்கு தமிழ்த் திருவிழா..!
தாயின் வளத்தை பெருக்கவே
அதன் கிள்ளைகளனைவரும்
ஒன்று சேரும் பெருவிழா..!

*********

எங்களால் நீ வாழவில்லை தமிழ்த்தாயே
உம்மால் நாங்களனைவரும்
வாழ்கிறோம் வளமோடு..!
ஆண்டுகள் செல்லச் செல்ல
வயது கூடி கிழப்பருவம்
எய்வதுதானே இயற்கை..!
இங்கே நீ மட்டும் எப்படி
இயற்கைக்கு எதிர்மறையானாய்..?
உன் கிள்ளைகள் நாங்கள்
கிழப்பருவம் எய்தினாலும்…
எங்களைப் பெற்ற தாயே
நீ மட்டும் எப்படி குன்றா இளமையோடு
குன்றென நிற்கிறாய்..?
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
தாயே உனக்கு இளமைதான்
கூடுகிறதே தவிர…
முதுமை அல்ல…

*********

எங்களின் முதல் மறை நீ..!
எங்களின் மூச்சு நீ..!
எங்களின் சுவாசம் நீ..!
எங்களின் அடையாளம் நீ..!
எங்களின் கலாச்சாரம் நீ..!
எங்களின் பண்பாடு நீ..!
எனக்கு அனைத்தும் நீ..!

உன்னை வாழ்த்த எனக்கு
வயதில்லை என்றாலும்
பெற்ற தாயை பிள்ளை வாழ்த்துவது
பிழையாகாது என்ற நோக்கில்
நீ வாழ்வாங்கு வாழ வேண்டும்..
உம்மோடு சேர்ந்து நாங்களும்..!

வாழிய பைந்தமிழ்…
வாழிய தீந்தமிழ்…
வாழிய பூந்தமிழ்…
வாழிய செந்தமிழ்…
வாழிய செம்மொழித்தமிழ்..!

*********

(இதையும் படிங்க... நான் எழுதியதுதான்....)

செம்மொழிக்கான தகுதிகள் - ஒரு விளக்கம்

தமிழுக்கும் பதினாறு பேறு..!



Tuesday, June 22, 2010

அழகான ராட்சஸி..!

உன்னுடைய அழகால்
என்னைத் தின்றது
மட்டுமின்றி...
என் பசியை...
என் உணர்வுகளை...
என் தூக்கத்தை...
என் துயரங்களை எல்லாம்
தின்று விட்டாய்..!
ஆதலால் உன்னை
அழகான ராட்சஸி
என்றழைப்பதில்
தவறேதுமிருப்பதாகத்
தோன்றவில்லையடி..!



Monday, June 21, 2010

அசராமல் எப்படியடி..?


கொஞ்சம் சிரிப்பு…
கொஞ்சம் தவிப்பு…
கொஞ்சம் மோகம்…
கொஞ்சம் தாகம்…
கொஞ்சம் செல்ல முறைப்பு…
கொஞ்சம் பொய்க் கோபம் என
அத்தனை பார்வைகளையும்
மொத்தமாய்க் கலந்து
உன் மேல் நான் வீசினால்..?
அத்தனையும் வாங்கிக் கொண்டு
அசராமல் எப்படியடி
அழகாய் அமர்ந்திருக்கிறாய்..!
இன்று நீ…
மொளன விரதமா என்ன..?



Friday, June 18, 2010

எரிமலையின் உள்ளே..! - காதல் குறுங்கவிதைகள்


எரிமலையின் உள்ளே
நான் எரிந்து கொண்டிருந்தாலும்
பெண்ணே..!
உன் காதல் பார்வை
பட்டால் போதும்…
பனியாய் நான் குளிர்ந்து போவேன்..!

**+**

கோவைப் பழ இதழுடையாள்…
கொஞ்சிப் பேசும் தமிழுடையாள்…
கொடியான இடையுடையாள்…
புள்ளிமான் நடையுடையாள்…
மோகனச் சிரிப்புடையாள்…
நீதான் என் காதலியாள்..!   

**+**


என் உணர்வுகளுக்கு
உயிர் கொடுத்தவளே…
என் கவிதைகளுக்கு
உயிர் கொடுத்தவளே…
இவைகளுக்கு  கொடுத்தது போல்
என் காதலுக்கு எப்போது
உயிர் கொடுக்கப்போகிறாய்..?
காத்திருக்கிறேன்..!   

**+**
காலன் என்னருகில்
வந்ததற்குக் கூட
கவலைப்படவில்லை அன்பே..!
காதலியான நீ இன்னும்
என்னருகில் வரவில்லையே
என்றுதான் கவலைப் படுகிறேன்..!

**+**

'நீரின்றி அமையாது உலகு' என்பது
வள்ளுவன் வாக்கு..!
'நீயின்றி அமையாது என் உலகு'
இது உன் காதலன் வாக்கு..!

**+**



Wednesday, June 16, 2010

நீயோ நாற்பத்தைந்து கிலோ..?

'நீயோ நாற்பத்தைந்து கிலோ...
நானோ எழுபத்தைந்து கிலோ...
எப்படியடி என் எடையை
நீ தாங்குவாய் ..?' என்றதற்கு
'என் இதயம் எவ்வளவு
எடை இருக்குமென்று சொல்..?
என்று என்னிடமே
எதிர்க்கேள்வி கேட்டாய்..!
அதற்கு நானோ...
'முன்னூறு கிராம்' இருக்குமென்றேன்
'ம்ம்ம்... முன்னூறு கிராம்
எடையுள்ள என் இதயத்தில்
எழுபத்தைந்து கிலோ உள்ள
உன்னையே சுமக்கிறேனென்றால்...
நாற்பத்தைந்து கிலோ உள்ள
நான் உன்னை சுமக்க
மாட்டேனா என்ன..?'
என்று உன் அழகிய
அதரவாயிதழ் திறந்து
என்னையே அசரவைத்துவிட்டாயடி..!



Tuesday, June 15, 2010

எனக்காக எழுதப்பட்ட கவிதை..!

ன் கண்ணெனும் கேமரா
சிறை பிடித்த கவிதைகளில்
மாபெருங் கவிதை நீ..!
ஆதலால்தான்
என் கண்ணை விட்டு என்றும்
அகலாமல் இருக்கிறாய்..!
என் இதயமெனும் இதழ்
படித்தக் கவிதைகளில்
மாபெரும் இன்பக் கவிதை நீ..!
ஆதலால்தான்
என் இதயத்தை விட்டு என்றும்
விலகாமல் இருக்கிறாய்..!
புரிந்து கொண்டேன் பெண்ணே...
எனக்காக எழுதப்பட்ட கவிதை
நீ என்று..!



Monday, June 14, 2010

உன் திறமைகளை..!

தேவைகள் வரும்போதுதான்
திறமைகள் வெளிப்படும்
என்பார்கள்..!
உனக்குள்
திறமை ஏதுமில்லை
என்று அழுது
புலம்பாதே அன்பே..!
இரும்பாய் இருந்த
என்னைக் கூட
கரும்பாய் மாற்றிய
திறமை உன்னிலிருக்கிறது
என்பதை மறவாதே அன்பே..!
உன்னுள்ளும் ஆயிரம்
திறமைகள் உண்டென்பதை
மறவாதே...
மறந்தும் இராதே..!
உன்னுள்ளே நானிருக்கிறேன்
உன் திறமைகளை நானறிவேன்
வா பெண்ணே சாதிப்போம்
வாழ்க்கையில் நாம் இணைந்தபடி..!



Wednesday, June 9, 2010

என்னழகே உன்னழகை ...!

செங்காந்தள் மலரெடுத்து
உன் கருங்கூந்தலில் சூடி விட்டு...
செஞ்சாந்துப் பொட்டெடுத்து
உன் பிறை நெற்றியில் திலகமிட்டு...
வெண்காஞ்சிப் பட்டெடுத்து
உன் பொன்னுடலில் கட்டி விட்டு...
பொன் தாலிதனை யெடுத்து
உன் வெண்சங்குக் கழுத்தில் கட்டி விட்டு...
உனைப் பார்க்கிறேன்...
செங்கதிரோன் மறையும் வேளையில்
வெள்ளி நிலவு எழுவது போல்
என் முன்னே நிற்கின்றாய்...
என்னழகே உன்னழகை
என்னென்று சொல்வேன்...
ஏதென்று சொல்வேன்..!



Tuesday, June 8, 2010

உன் கண்ணோடு உறவாடும்...


கண்ணாடி அணிந்த உன்
முகத்தைப் பார்த்தேன்..!
நிலவிற்கு கண்ணாடியா
என அதிசயித்துப் போனேன்..!
அடி என் அமுதழகே..!
அழகான என் கண்ணழகே..!
உன் கண்ணாடியாகவேனும்
நான் இருந்திருக்கக் கூடாதா..?
தினமும் உன்னோடு இருப்பது மட்டுமின்றி
உன் கண்ணோடு உறவாடும்
பாக்கியமாவது கிட்டியிருக்குமே..!
நான் என்ன செய்வேன்...
நான் என்ன செய்வேன்..?

(என்னவளுக்கு திடீரென கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயம் வர, அவள் அணிந்து கொண்டு என் முன்னே வந்தாள்...  அப்போது அவளுக்காக நானெழுதிய கவிதை..!)



Friday, June 4, 2010

கவி நேசனின் கவிமகனே..! - பிறந்த நாள் கவிதை..!

மையவளின் இளைய மகனே..!
உற்சாகத்தின் இருப்பிடமே..!
வி நேசனின் கவிமகனே..!
கவி நிலவாய் சிரிப்பவனே..!

கிலமாளப் பிறந்தவனே...
அன்பிறகினிய திருமகனே...
கிள்ளை மொழி பேசிப் பேசி...
கிட்டா இன்பம் தந்தவனே...
ட்சம் பொன் கொடுத்தாலும்
தமிழ் மகவே உனக்கிணையில்லை?.
ன்றோடு நீ பிறந்து ஆண்டிரண்டு
ஆயிற்று... மனமகிழ்ச்சியும் கூடிற்று..!

பிறப்பால் எமை மகிழ்வித்தது போல்
உன்னுடைய நற்செயலாலி
வாப் புகழடைந்து...
உன் தாயை மகிழ்விப்பது மட்டுமின்றி
ந்தியாவையே மகிழ்விப்பாயடா..!
இதேசத்தில் நீ பிறந்தமைக்கு நல்
டமொன்றை பதிப்பாயடா..!
அதில் நல்லோரை சேர்ப்பாயடா..!
நானிலம் போற்றும் படி
நனி மகவே நீ வாழ - நல்லு
ள்ளங்கள் வாழ்த்துகிறது..!
இன்று போலெனெறும் வாழ்க..!

(எனது இளைய மகனுக்கு  இரண்டாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! தடித்த எழுத்துக்களை மேலிருந்து கீழாக படித்துப் பாருங்கள்... என் மகனின் பெயர் கிடைக்கும்)




Thursday, June 3, 2010

என்றென்றும் ரசிகன்..!

கொடியிடை ஆட்டி…
நடை உடை மாற்றி…
ஊர் முன்னே ஆடுவதுதான்
நடனமென்பது
அக்காலம் பெண்ணே..!
இந்தப் போலியான
நாகரீக உலகிலும்…
எனக்குப் பிடித்தாற்ப் போல்
எளிமையாய் உடையணிந்து…
அமைதியாய்
எனை நோக்கி நடந்து வருகையில்
இதுதான் உண்மையான...
நளினமான...
நடனமென்பேன்..!
இதற்கு நான் என்றென்றும்
ரசிகனென்பேன்..!     



Wednesday, June 2, 2010

உன் நிழல் போலத்தான்..!


நீ நடந்தால்...
உன்னுடனேயே நடக்கும்..!
நீ சிரித்தால்...
உன்னுடனேயே சிரிக்கும்..!
நீ அழுதால்...
உன்னுடனேயே அழும்..!
உன் நிழல் போலத்தான் அன்பே...
என்னுடைய காதலும்..!   



Tuesday, June 1, 2010

நீ உதிர்க்கும் புன்னகை போல...!

ஒற்றையாய் நிற்கும்
அந்த ரோஜா மலர்..!
கொட்டும் உறை பனியில்
விடிய விடிய நனைந்த படி
இருந்தாலும்...
அதிகாலையில்
கதிரவனைக் கண்டதும்
அம்மலர் புன்னகைத்தபடியே
உற்சாகமாய்ப் பூ பூக்கும்...
எனைப் பார்த்ததும்
உன் முகம் மகிழ்ச்சியில் பூத்தபடி
நீ உதிர்க்கும் புன்னகை போல...!