ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, November 23, 2011

இரும்பை இலவம் பஞ்சு வளைக்குமா?


வளையா இரும்பை
இலவம் பஞ்சு வளைக்குமா?
துளைக்குமா..?
இவ்வுலகில் நடவாத ஒன்றை
கேட்கிறாயே அறிவிலி...
என்று எனை எல்லோரும்
ஏளனம் செய்கிறார்கள்..!
நீ என் மார்பில் சாய்ந்த போது
இது அத்தனையும்
நடந்ததை யாரறிவார்..?




Monday, November 21, 2011

கூடலும்... ஊடலும்..!


கூடல்தான் காதலெனும் போது
அதில் ஊடல் வருவது இயல்பல்லவா..?
ஊடலை ஊதிப் பெரிதாக்கி
எனை உதறித் தள்ளுவதேனடி..?

நீ அருகிலிருந்தால் அன்பில்லை
தொலைவில் இருந்தால் தொல்லையில்லை
என்று சொன்ன உன் நாவை
என்ன சொல்லி வெட்டி எறிய வேண்டுமடி..?

தேனுண்ட வண்டைப் போல்
உன் காதலையுண்டு மகிழ்ந்திருந்த எனக்கு
அலைபேசியில் நீ பேசிய வார்த்தைகள்
அமிலமாய் கொட்டியதடி.!

என்னை இன்னும் நீ
புரிந்து கொள்ளவில்லையே
அது ஏனென்று கேட்டு
என் மனம் உன்னை திட்டித் தீர்த்ததடி..!

முத்தில்லா சிப்பி போல...
மருந்தில்லா குப்பி போல...
நீயின்றி வெறுமையாய் கிடக்கிறேன்
எப்போது வருவாய்... ஊடலை கூடலாக்குவாய்..!