ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, July 29, 2011

கண்ணீர் காதல்..!


நீ என் கண்ணுக்குள்
இருப்பதால்
என்னுள் இருந்து
கண்ணீர் வருவதில்லை..!
என் கண்களிலிருந்து
கண்ணீர் வருகையில்
நீ என்னுள் இருப்பதில்லை..!


------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 7 )




Wednesday, July 27, 2011

பிரிவு எனும் மூன்றெழுத்து..!



காதல் என்ற மூன்றெழுத்தின்
மந்திரமே அதில் பின்னியிருக்கும்
அன்பு எனும் மூன்றெழுத்துதான்..!

அதிலே பிரிவு எனும் மூன்றெழுத்து வரின்
தேகம் எனும் மூன்றெழுத்தில்
சோகம் எனும் மூன்றெழுத்து ஏறிவிடும்..!

மனம் எனும் மூன்றெழுத்து
ரணம் எனும் மூன்றெழுத்தில் மூழ்கி
குணம் காணா கூடாகி விடும்..!

பிரிவென்னும் மூன்றெழுத்து இனி எதற்கு...
இணைவு என்ற மூன்றெழுத்தில்
இணை பிரியாமலிருப்போம் தேவி..!




Wednesday, July 20, 2011

உன் காதலுக்கு..!



கவிச்சக்கரவர்த்தி கம்பன்...
மகாகவி பாரதியார்...
புரட்சிக்கவி பாரதிதாசன்...

என மாபெரும் கவிஞர்களைப் போல
எனை ஆக்க விட்டாலும்
ஒரு குறுங் கவிஞனாக
மாற்றிய பெருமை
உன் காதலுக்கு உண்டு கண்ணே..!


------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 7 )




Tuesday, July 19, 2011

வளர் கூந்தல்..!



கருங்கூந்தல் விளையாடும்
கடலலை போலே...
நீள்கூந்தல் அசைந்தாடும்
நிழலினைப் போலே...
கார்கூந்தல் விளையாடும்
கார்மேகம் போலே...
வளர் கூந்தல் வைத்திருக்கும்
வளர் மதியே...
நின் கூந்தல் வளரும்
கரு மதியே..!
------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 7 )




Tuesday, July 12, 2011

பூக்கள் மலரும் காலம்!


தாமரை மலரோ
உதயகாலத்தில் மலரும்..!
செண்பக மலரோ
காலையில் மலரும்..!
பவழ மல்லிகையோ
மாலையில் மலரும்..!
மயக்கும் மல்லிகையோ
இரவினில் மலரும்..!
அழகினிய அல்லியோ
நிலவின் உறவினில் மலரும்..!
என் இதய மலரோ
உனை நினைத்ததுமே மலருமடி!




Friday, July 8, 2011

உதாசீனப்படுத்தும் சொல் கூட..!



ச்சீ…” என்று
உதாசீனப்படுத்தும் சொல் கூட
நீ வெட்கத்தில்
உதிர்க்கும் போது
மேலும் மேலும் உன்னோடு
உறவாடத்தான் தோன்றுகிறதே தவிர...
உனை விட்டுப் பிரியத் தோன்றவில்லை..!




Monday, July 4, 2011

தூரத்தில் தேவதையாய்..!

நள்ளிரவுப் பெண்ணோ
நைச்சியமாய்
ஒளிந்து கொள்ள முயற்சிக்க...
அதிகாலைச் சூரியனோ
அடித்துப் போட்டது
போல் உறங்கிக் கொண்டிருக்க...
உருண்டை வடிவ உலகமோ
விடியலுக்காக
கண்ணயர்ந்து காத்திருக்க...
கணமணி உன் வரவிற்காக
கண் விழித்துக் காத்திருந்தேன்
புவி முனையில்...

காத்திருந்து காத்திருந்து
கால்கள் ஓய்ந்து விட
கண்கள் சோர்ந்து விட
தூரத்தில் தேவதையாய்
நீ வருவதைக் கண்டேன்..!
நெடும்பயண களைப்பில்
நடை தளர்ந்து நீ வந்தாலும்
எனைக்கண்டதும்
ஒளிவீசும் வைரமானாய்..!
அவ்வொளி வெளிச்சம்
உனைக் கண்டதும்
என்னுள்ளும் பரவ...!

நம் கண்கள் நான்கும்
சந்தித்த வேளையில்...
அங்கே உதித்ததடி நம்
காதலின் உற்சாகச் சூரியன்...
அதனுடைய வெளிச்சத்தில்
இருந்த களைப்பு
இடம் தெரியாமல் போய்விட...
என் நிலவைக் கண்ட மகிழ்வில்
என்னிதயம் விண்ணிலடி
என்னழகே உன் அன்பு
என் கண்ணிலடி..! கண்ணிலடி..!




Friday, July 1, 2011

எனக்கு நேரமில்லை..!


என்னிடம் அதைப்படி
இதைப்படி என்று... 
எதை எதையோ
எடுத்துக் கொடுக்கிறாய் அன்பே!
எதையும் படிக்க
எனக்கு நேரமில்லை..!
காரணம்...
உன்னையும்
உன்னிதழையும்
படித்துக் கொண்டிருப்பதால்..!
--------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 6 )