ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, December 30, 2011

எப்போது நீ வருவாய்..?


நிலவின் தீண்டலுக்காக
மேக கூட்டங்கள் காத்திருப்பது போல...
பனித்துளியின் தீண்டலுக்காக
பூ கூட்டங்கள் காத்திருப்பது போல...
மழையின் தீண்டலுக்காக
கரிசல் காடு காத்திருப்பது போல...
பூந்தேனின் தீண்டலுக்காக
வண்டினங்கள் காத்திருப்பது போல...
ஒரு பெண் பூவிற்காக
என் புவனமே காத்திருகிறது
பூவினமே எப்போது நீ வருவாய்..?




Tuesday, December 27, 2011

இதழ் விரிந்தால்..!



பூக்களின் இதழ்
விரிந்தால்
புன்னகை மலரும் ..!
பூவிலிருந்து மணம்
விரிந்தால்
முகமே மலரும்..!
பூவினமே உன் இதழ்
விரிந்தால்
என் வாழ்வே மலருமடி ...!




Tuesday, December 20, 2011

வலி அறிதல் - முல்லை பெரியாறு அணை சிறப்புக் கவிதை


'கொண்டான் கொடுத்தான்' என
விளங்கிய தமிழனும்
கேரளனும்
இன்று கொலைவெறியோடு
ஒருவரை ஒருவர்
கொளுத்தி விடப் பார்ப்பதேன்..?

வெள்ளை இனத்தில்
வெளிப்பட்ட
வெளிச்சக் கீற்றாய்
வந்த பென்னி குயிக்
தன் கடைசி 'பென்னி' வரை
செலவிட்டுக் கட்டிய
முல்லைப் பெரியாறால்
வந்த வினையா அது?

வெளிநாட்டில் பிறந்த
பென்னி குயிக்கிற்கு இருந்த
நாடுகடந்த நேசம்
நமக்கில்லாமல்  போனதேன்..!
இங்கேயே பிறந்து வளர்ந்த
தமிழனுக்கும்
கேரளனுக்கும் அந்த உணர்வு
இல்லாமல் போனதேன்..?

வேற்றுமையில் ஒற்றுமை
காணச் சொன்ன
நம் இந்தியாவில்
நம் ஒற்றுமையில் வேற்றுமையை
கிளப்பி விட்டவர்கள் யார்..?
அந்த கீழ்த்தர மூடர்கள் யாரென அறிக..?
அரசியல் ஆதாயம் தேடும்
பச்சோந்தி நாய்கள் எவையெனத் தெளிக..!
சிந்திக்கத்தானே ஆறாம் அறிவு..?
அதை சிந்தையிலிருந்தே
அகற்றி விட்டது ஏன்?

அதிகம் படிப்பறிவு பெற்ற
மக்கள் அங்கே மாக்களாய்
தமிழர்களிடம் நடந்து கொள்ள...
நாமும் அதே போல்
நடந்து கொள்ளல் நியாயமா?
வலி என்பது அனைவர்க்கும்
பொது என்றாலும்...
அதையே திருப்பி செய்வது
தமிழரின் மாண்பல்லவே..!

உங்கள் எதிர்ப்பை காட்ட
அமைதியையும் அகிம்சையும்
கையாளுங்கள்...
அமைதியாய் போனால்
அடங்கிப் போவது என்பதல்ல..?
அது அன்பின் வழி எனக் கொள்க..!
அன்னை தேசத்தின் மீதுள்ள
அபிமானம் எனக் கொள்க..!
அமைதியாய் பேசி தீர்த்துக் கொள்க..!

நம்மின் வலி அறிதலை
நையாண்டியாய் கேரளம் கொண்டால்
அவர்களை நையப்புடைக்க
வினாடி நேரம் ஆகாது...
விரைவில் நல் முடிவு வரும்..!
அது வரை கேரளத்து பொருட்களை
புறக்கணியுங்கள்..
கேரளத்து கடைகளை புறக்கணியுங்கள்
இங்கிருக்கும் கேரளர்களை புறக்கணியுங்கள்

நம் வலி(மை)யை
ஆதிகாலம் தொட்டே
அவர்களறிந்திருப்பர்...
சிறுநரி ஊளையிட்டு
சிறுத்தை ஓடாது என்பதை
கேரளனுக்குக் காட்ட
விரைவில் நமக்கு காலம் வரும்..!
அன்பால் கட்டுண்டோம்...
காத்திருப்போம்...
காலம் வரும் சாதிப்போம்..!

******************************

ஆர். சரண்யா என்பவர் 'மழையினை ரசிக்கும்' என்ற கவிதைக்கு பின்னூட்டமிடுகையில் 'வலி அறிதல்' என்ற தலைப்பில் கவிதை கேட்டார். அதை இன்றைய முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இணைத்து எழுதியிருக்கிறேன்... நன்றி..!

******************************


Anonymous Saranya R said...



Very Nice!!!!!!!

I Need kavithai for the topic of Vali arithal!!!!!!

Saranya R
15 December 2011 12:44 PM




Tuesday, December 13, 2011

எவையெல்லாம் கவிதை..?


எவையெல்லாம் கவிதை
என சொல்வாய்..?
என்று என்னிடம் வினவுகிறாய்...
நீ உதடு பிரித்து படிப்பது
கூட கவிதைதானடி என்றேன்...
அழகாய் சிரித்து...
அழகாய் இருக்கிறது
உங்களது பொய் என்கிறாய்...
உன் சிரிப்புக்கு முன்பு
அவையெல்லாம் சாதரணமே
உன் சிரிப்பை காணா விடில்
என் மனம் சதா ரணமே...
என்றேன்
போய்யா போ..
என்று பொய்க்கோபம்
காட்டியே எனை மயக்குகிறாயடி..!
இந்த மயக்கத்தில்
என் சிந்தனைச் சிறகு
சிறகு விரிக்காமல் எப்படி இருக்கும்?




Saturday, December 10, 2011

மழையினை ரசிக்கும்..!



எனை விடுத்து...
மழையினை ரசிக்கும்
என் மதி மலரே..!

மழை முகம் கண்டதும்...
உன் புன்னகையை மேகத்திடம்
காட்ட சென்றாயோ..?

உன் புன்னகை கண்டு
பூரித்த மழை மேகமோ
கண்ணை மின்னலாய் சிமிட்டியதோ..?

உன் கார் கூந்தலைக் கண்டு
பொறாமை கொண்ட வானமகள்
தன் மேகக் கூந்தலை மென்மேலும்
கருமையாக்கியாக்கினாளோ..?

இவை எதையும் நானறியேன்...
வான் நிலவை மறைத்த மேகம்
மழையாய்ப் பொழிவது போல்...
என் நிலவை குடையால்
மறைத்து காதலைப் பொழிவேனடி..!




Wednesday, December 7, 2011

இப்படிக்கு ராணுவ வீரன்..!


உனது கரு வானவில்
புருவங்களை உயர்த்திபடி
எனை பார்க்காதே...
உன் செந்தாமரை இதழ்களை
உனக்குள் சுழற்றியபடி
எனை பார்க்காதே...
கண்ணீர் புகை குண்டிற்கு கூட
மயங்காத நான்...
கன்னி உன் செய்கைகளால்
இங்கே மயங்கிக் கொண்டிருக்கிறேன்..!




Monday, December 5, 2011

நீ அறிவாயா..?


என் கவிதைகளனைத்தும்
அழகான கவிக்குழந்தைகள்
என்று சொல்கிறாயே பெண்ணே
அவர்களெல்லாம்
உனை பார்த்த பின்
பிறந்த கவிப் பிள்ளைகள்
என்பதை நீ அறிவாயா..?