கடல் கடந்து வந்தாலும்
கடுகளவும் அவன் நினைவுகள் குறையவில்லை
பாஸ்போர்ட் விசா இன்றி
எப்படி வந்தான் என்னோடு புரியவில்லை
கடல் விட்டு ஒதுங்கிய கிளிஞ்சலாக நானிருக்க
ஓயாத அலைகளாக அவன் இருக்க
கடல் சேரவும் முடியாமல்
கரை ஒதுங்கவும் முடியாமல்
ஏன் இந்த நிலை
என்ன நான் செய்த பிழை
மழையாக இருந்தவள்
கானல் நீர் போல் ஆனது ஏனோ?
நீல வானமாய் இருந்தவள்
கலையும் மேகமானது ஏனோ?
வான் நிலவாய் இருந்தவள்
நதியில் விழும் பிம்பம் போல்
ஆனதும் ஏனோ? - புரியல்வில்லை
உன்னை புரிந்துகொள்ளும் திறன் இல்லை,
மறந்துவிட மனமும் இல்லை,
காற்றில் என் உயிர் கரையும் வரை
நெஞ்சோடு இருக்கும் உன் நினைவுகள்
எனக்குள்ளே சிரித்து,
எனக்குள்ளே அழுது,
எனக்குள்ளே மகிழ்ந்து,
எனக்குள்ளே வருந்தி
எனக்குள்ளே அத்தனையும்
ஆனவனே நீ
என் தாயுமானவனே....