ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, February 26, 2014

ஓ… என் நீதி தேவதையே..! - பாலியல் வன்முறை எதிர்ப்புக் கவிதை!


ஓ… என் நீதி தேவதையே
பெண்கள் நாட்டின் கண்கள் என
இருந்த இந்நாட்டில்
இன்று அப்பெண்களின்
கண்கள் மட்டுமல்ல
உயிரினும் மேலான கற்பும்
அவர்களின் உயிர்களுமல்லவா
பறிக்கப்படுகிறது?

நீதியில் பாரபட்சம் கூடாது
பந்த பாசத்திற்கு இடம் தரக்கூடாது
என்றுதான் நீதிதேவனை நிறுத்தாமல்
நீதி தேவதையான உன்னை
நீதியை நிலை நாட்ட
நிறுத்தியிருக்கிறார்கள்..!
உன் இனத்திற்கு நேரும் கதியைப் பார்..!

தில்லியில் அன்று நிர்பயா…
சேலத்தில் நேற்று 5 வயது சிறுமி
சென்னையில் இன்று உமா…
எங்கே சென்று கொண்டிருக்கிறது
இந்தச் சமூகம்..?
ஆணினம் அழிவினத்தின்
உச்சமாகிக் கொண்டல்லவா போகிறது..?
அதை அடக்காமல் விடலாமா?

உன்னிடமுள்ள நீதியெனும் வாளை
கூர் தீட்டிக் கொள்…
காம வெறி பிடித்த கயர்களை
கூண்டிலேற்றிக் கொல்…
அவன் ஆண்டியாக இருந்தாலும்
ஆதிமுதல் பணக்காரனாக இருந்தாலும்
விடாதே… விடாதே கொல்..!

சிறுமியென்றும் பாராமல்
துவம்சம் செய்த அரக்கர்களை அழி
பெண்ணை ஒரு மனுஷியாகக்கூட பார்க்காத
அந்த பாதகர்களை ஒழி...
எவனையும் எக்காரணம்
கொண்டும் மன்னிக்காதே
உன்னினத்தை
நீயே காப்பாற்றவில்லையெனில்
இனத்துரோகி ஆகிவிடுவாய்..!

காம வெறி பிடித்து
கற்பழிப்பில் ஈடுபட்ட நாய்களின்
கழுத்தில் மாட்டு சுருக்கு…
இல்லையேல்
அவன் பிறப்புறுப்பை நறுக்கு
இல்லையேல்
நாட்டை விட்டு கடத்து..!
பெண்களை போகப் பொருளாக்கும்
பொல்லா நாய்களை
தீயில் போட்டு பொசுக்கு..!

தன்னை பெற்ற தாயும்
ஒரு பெண் என மறந்த நாய்களை
தன்னுடன் பிறந்த சகோதரியும்
ஒரு பெண் என்பதை மறந்த ஈனப்பன்றிகளை
அழித்தெடுக்க தண்டனைகளை கடுமையாக்கு
குடிதனை அமல்படுத்தியிருக்கும்
ஆட்சிக்கும் சவுக்கடியை நீட்டு
அப்போதுதான் மாறும் இந்நிலை..!




6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாக... மிகச்சரியாக சொன்னீர்கள்...

மோகனன் said...

சொன்னது நடக்கவேண்டும் தோழரே... அப்போதுதான் இந்நிலை மாறும்...

வே.நடனசபாபதி said...

//நாட்டை விட்டு கடத்து..!//

நாட்டை விட்டு கடத்துவதால் அந்த கயவர்களின் தீய குணம் மறையப்போவதில்லை. அந்த வரிக்கு மேலே குறிப்பிட்டுள்ள தண்டனையைத் நிறைவேற்றினாலே போதும். அடங்கிவிடுவார்கள்.

உணர்ச்கிகரமான கவிதையைப் படைத்தமைக்கு வாழ்த்துக்கள்!

மோகனன் said...

கண்டீப்பாக செய்யத்தான் வேண்டும். அப்போதுதான் இந்த கயமைத்தனங்கள் அழியும்...

sangeetha said...

நண்பரே, உங்களைப் போல தாயையும் சகோதரியையும் நினைத்து பெண்ணைப் பார்க்கும் நிலை வந்தால் அதுவே ஆரோக்கியமான சமுதாயம். ஆனாலும் பெண்கள் தற்காப்புக் கலை ஒன்றைக் கற்று கொள்வதை ஊக்குவிக்க அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்.

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

நன்று நண்பரே.

மோகனன் said...

அன்பு சங்கீதாவுக்கு...

தங்களின் கருத்துக்க மிகச்சரியே... ஒவ்வொரு பள்ளியிலும் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு தற்காப்புக்கலைகள் அனைத்தும் பயிற்றுவிக்க வேண்டியது மிகவும்... இந்த கருத்து என் மனதிலும் முன்பே தோன்றியதுதான்... என் கருத்தும் தங்கள் கருத்தும் ஒன்றாக இருப்பது கண்டு மகிழ்கிறேன்...