ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label ஆதித்தன் பிறந்தநாள். Show all posts
Showing posts with label ஆதித்தன் பிறந்தநாள். Show all posts

Friday, September 9, 2016

விடிவெள்ளியாய்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை!


உலக உருண்டையை
வயிற்றுக்குள் வைத்திருக்கும்
பிரபஞ்சத்தைப் போல…
எனது உலகத்தையே
வயிற்றுக்குள் வைத்திருந்தாள்
உன் அன்னை!
திங்கள் நிகர் உன் அன்னை
திங்களாய் உனை சுமந்து
விடிவெள்ளியாய் உனை பெற்றெடுத்தாள்!
இன்னும் நினைவிலிருக்கிறது
அந்த வெள்ளிக்கிழமை
நீ கொடுத்த முதல் மழலைக் குரலால்!
அடங்காத காளை, கோவக்காரன், முரடன்,
திமிர் பிடித்தவன் என பட்டம் பெற்ற எனக்கு
அப்பா எனும் பட்டம் கொடுத்த மழலை!
கன்னியாய் இருந்தவளுக்கு
அம்மா எனும் ஒப்பற்ற பதவி கொடுத்த
எங்களின் முதல் இளவரசன்!
இருண்டு கிடந்த எம் வாழ்வில்
சூரியனாய் உதித்ததால்
ஆதித்தனென்று பெயர் சூட்டினோம்!
கல்வி, கேள்வி, கலைகளில்
சிறந்து விளங்கிய ஆதித்த கரிகாலனைப்போல
ஆதவனாய் வரவே அப்பெயர் தீட்டினோம்!
என்றும் எங்கள் ஆதவனே
மோகனன் வீட்டு இளவரசனே
தாய்க்குத் தலை மகனே!
இன்றோடு நீ பிறந்து
ஆயிற்று ஆண்டுகள் பதினொன்று
வாழ்க ஆண்டுகள் பலநூறு!
எல்லா கலைகளும் கைவரப் பெற
தந்தையை விஞ்சும் தனையனாக மலர

இயற்கையோடு இணைந்து வாழ்த்துகிறேன் மகனே!

(இன்று 11-வது பிறந்தநாள் காணும் எனது முதல் மகன் ஆதித்தனுக்காய் இந்த கவிதை..!)




Wednesday, September 9, 2015

ஆண் நிலவே..! – பிறந்தநாள் வாழ்த்து கவிதை!




எங்கள் அன்பினில்
உதித்த உயிரே…
திங்கள் முகம்தனை
வடித்த உறவே…
சிங்கம் நிகர்த்த
என் மகவே…
தங்கம் இழைத்த
ஆண் நிலவே..!

உன் தாயின்
கருவறையில்…
முத்துப்போல்
துயில் கொண்டு…
பத்துத் திங்கள்
நீங்கக் கண்டு…
நிலவைப் போலின்று
கால் பதித்தாய்..!

இப்புவியில் நீ கால்பதித்து
இன்றோடு ஆயிற்று
ஆண்டுகளும் பத்து..!
முத்தமிழின் முதல் தமிழாம்
இயற்றமிழில் உள்ள
நூல்களுளொன்று பதிற்றுப் பத்து..!
தாய்த் தமிழின் மணிமுடியில்
அந்நூலும் ஒரு முத்து..!

என் தாய்த்தமிழின் வீரமும்
குன்றா வளமையும்
உனக்கு வாய்க்கட்டும்..!
உனது எண்ணம் போல்
அறிவியல் துறையில்
உன் மேதமை வாய்க்கட்டும்..!
இன்று போல் என்று வாழ்க
எங்கள் தலைமகனே..!

(இன்று எனது முதல் மகனான க.ஆதித்தனுக்கு 10-ஆவது பிறந்தநாள். அவருக்காக எழுதிய பிறந்தநாள் வாழ்த்து கவிதை இது...)




Tuesday, September 9, 2014

நீ அளித்த பிச்சைதான்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை



ஆதவனைப் போல் உதித்த என் மலரே..!
மேகத்தைப் போல் தவழ்ந்த என் மகவே..!
அம்புலியைப் போல் வளர்ந்த என் அழகே..!
விண்மீனினைப் போல் சிரித்த என் இதழே..!

முயலினைப் போல் குதித்த என் நிலவே
..!
மானினைப் போல் ஓடிய என் நதியே..!
யானையைப் போல் சிந்தித்த என் மதியே..!
சிங்கத்தைப் போல் ஒலித்த என் குரலே..!

நீ பிறந்து இன்றோடு ஆண்டுகள் ஒன்பது
..!
நீ அளித்த பிச்சைதான் நான் தந்தை என்பது..!
வாழ்வில் எமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது?
நீ பிறந்த இந்நாள்தான் என உலகம் சொல்வது..!

வாழ்க என் மகனே… வளர்க என் மகனே
..!
தாழ்க உன் மனமே... ஏழைக்கு தாழ்க உன் மனமே..!

(எங்கள் வீட்டு பட்டத்து இளவரசர் க. ஆதித்தனுக்கு இன்று ஒன்பதாவது பிறந்தநாள். அவருக்காக நானெழுதிய பிறந்தநாள் வாழ்த்து கவிதை)