வாலிபக் கவிஞரே
வாலி
வாழ்வாங்கு வாழ்ந்தவரே வாலி - நீ
வாழ்வாங்கு வாழ்ந்தவரே வாலி - நீ
தமிழ்க் கவியில்
நுண்மாண் நுழைபுழம்
மிக்க ஆழி!
காதல் பாடல்களில்
எம் மனதைத் தாலாட்டும்
தூளி!
சோகப் பாடல்களில்
மனதை கவிழ்த்துப்
போடும் சோழி!
தத்துவத்தில்
எம் மனதை ஆழ உழும்
மேழி!
வீரத்தில்
எமை தட்டி எழுப்பும் சேவற்கோழி!
காவியத்தில்
எமை தட்டி எழுப்பும் சேவற்கோழி!
காவியத்தில்
எமைக் கவர்ந்த அறி வாளி!
நீ மறைந்தாலும்
உம் வரிகள் இவ்வுலகில் வாழி வாழி!
