ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label பாரதியார். Show all posts
Showing posts with label பாரதியார். Show all posts

Tuesday, December 11, 2012

மாபெரும் கவியே..! - பாரதியார் பிறந்தநாள் கவிதை!



பாட்டுக்கொரு புலவா! – என்றன்
பாட்டுடைத் தலைவா நின்றன்
சிகக் கோடிகளில் ஒருவன் – உன்றன்
கவிகளுக்கு அடியார்க்கு அடியன்!
தியாகத் தமிழ் திருவுருவே – விழியில்
     தீஞ்சுடர் செந்தமிழ்க் க(ன்)னலே..!
யாக்கையும் குருதியும் ஈந்தே – தமிழ்
     மொழிக்கே மாற்றம் தந்(தை)தாய்..!
ர்ரென்றாலும் நீயிங்கில்லை – அமிழ்
     தமிழ் கவியால் எங்களுள் வாழ்கிறாய்!

தேசத்தின் மாபெரும் கவியே – மொழியில்
விடுத்தாய் விடுதலைத் தணலே..!
ட்டத்தை உடைத்த ரவியே – பரங்கியன்
கொட்டத்தை அடக்கிய கவிப்புனலே..!
ம்மாநிலம் பயனுற வேண்டியே – தீயவற்றை
தீயிட்டழிக்கப் பிறந்த கவிச்சூரியக் கனலே..!


(தேசிய கவிஞர் பாரதியாரின் 130-வது பிறந்த தினம் இன்று. தமிழ் தேசம் இன்று சினிமாவின் பின்னால் போய்க்கொண்டிருக்க, சிற்சில தமிழார்வலர்களாவது பாரதியின் பின்னால் இருப்பது கண்டு மனம் ஆறுதல் கொள்கிறது. தேசியக் கவிக்கு இச்சிறுவனின் கிறுக்கல் சமர்ப்பணம். அவன் வழி தொட்டு வாழிய செந்தமிழ்..!)







Saturday, December 11, 2010

கவியாயுதமேந்தியது யார்..?



நம்மில் சாதிகளில்லை என்றவன் யார்..?

மூடத்தனங்களை ஒழிக்கச் சொன்னது யார்..?
சாத்திரங்கள் பொய்யென்றவன் யார்..?
பெண்ணியத்தை போற்றச் சொன்னது யார்..?

நம் தமிழினத்தை தட்டியெழுப்பியது யார்..?
வீரிய எழுத்தால் வீரத்தை ஊட்டியது யார்..?
பாமரனையும் பாய்ந்தெழச் செய்தது யார்..?
வெள்ளையனை விரட்ட கவியாயுதமேந்தியது யார்..?

யார்..? யார்..? அவன்தான் மகாகவி பாரதியார்?
தன் பாட்டுத் திறத்தாலே ‘எங்களை அடிமையாக்க
வெள்ளையனே நீ யாரெ’ன்று வினவியவன்..!
விடுதலைக்காக பேனாவையே ஆயுதமாக்கியவன்..!

பாரதி யார்? என்று பரங்கியனை கேட்க செய்தவனே...
மங்கிப் போயிருந்தபோது மதியென முளைத்தவனே...
பலமிழந்து கிடந்த போது பரிதி போல் முளைத்தவனே...
துவண்டு கிடந்த போது தோள் கொடுத்தவனே...

எங்களின் சுந்தரத் தமிழனே... தேன் தமிழ்க் கவிஞனே...
என் போன்ற ஏழைகளுக்கு ஏந்தலாய் இருந்தவனே...
நீ பிறந்த இந்நாளினை தேசியக் கவி நாளாக
கொண்டாடுகிறேன்... பண்பாடுகிறேன்.. வாழ்க நீ எம்மான்..!

(இன்று தேசியக் கவி பாரதியாரின் 129 வது பிறந்த நாள் விழா... அந்த மாபெரும் கவிஞனுக்கு... இந்த சிறுவன் கிறுக்கிய பிறந்த நாள் கவிதை...)


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் வித்து
இனிய தமிழ்க் கவிதைகளின் தனிப்பெரும் சொத்து
இந்திய விடுதலை வேள்வியை மூட்டிய முத்து
ஆதலால் அவன் மேல் கொண்டேன் பித்து..!
            
                                                                            - மோகனன்
பாரதி குறித்து நானெழுதிய பிற கவிதைகளைப் படிக்க வேண்டுமா..?
அக்கினிக் குஞ்சொன்று பிறந்தது பார் ..! (பிறந்த நாள் கவிதை)

மகாகவி பாரதிக்கு மரபுக் கவிதாஞ்சலி (நினைவு நாள் மரபுக்கவிதை)





Friday, December 11, 2009

அக்கினிக் குஞ்சொன்று பிறந்தது பார் ..!



ஆயிரத்தி எண்ணூத்தி எண்பத்தி இரண்டு
டிசம்பர் பதினொன்று அன்று
எட்டயபுரத்தில் பிறந்தது பார்
அக்கினிக் குஞ்சொன்று அங்கு...

தமிழ்ப்புவியில்
எட்டுத் திக்கும் எதிரொலிக்க...
எட்டயபுரத்தில்
சங்கத் தமிழும் சடசடக்க...
சிங்கம் நிகர் சின்னசாமிக்கும்
தங்கம் நிகர் லட்சுமிக்கும்
பிறந்தது தமிழ்ச் சிங்கக்குட்டியொன்று..!
அதன் பேரோ சுப்பிரமணியனென்று..!

கல்வி பயிலும் பாலக வயதில்
ஆசுகவி பாட்டிசைத்த
காரணத்தால்...
சுப்பிரமணியர்க்கு சூட்டினர்
பாரதி என்ற ஏற்றதோர் பட்டத்தை..!

சங்கத் தமிழ் கற்றது மட்டுமின்றி
பற்பல சாத்திரங்கள் கற்றது மட்டுமின்றி
பன்மொழியினையும் கற்றுத் தெளிந்தான்
தமிழ்ப்பண் பாட்டிசையும் கற்றறிந்தான்..!




பாரதத் தாயின் அடிமைத் தளையை
அடிச்சுவட்டிலிருந்து அகற்றிடவே
எழுதுகோலை ஆயுதமாய்
பிரயோகித்தான்...
வார்த்தைகளில் வலிமையைக் காட்டியே
வறியோர்க்கும் வலிமையை ஏற்றினான்...
வீழ்ந்து கிடந்த மக்களை எல்லாம்
வீரர்களாய் மாற கவி சமைத்தான்...

சுதந்திரக் கனலை மூட்டி விட்டான்..!
முழுமையற்றவற்களை
முழுமையாக ஆக்கி விட்டான்..!
சாதிப்பிரிவுகளை எதிர்த்து நின்றான்...
ஏற்றத்தாழ்வுகளை அழித்து நின்றான்...
புதுக்கவிதையின் தந்தையாய்
உருவாகி நின்றான்..!
ஆசு கவிகள் பல படைத்து நின்றான்..!
எங்கள் மனதில் குன்றென நின்றான்..!
அவன் பெயர் மாகாகவி பாரதி என்றான்..!

எட்டயபுரத்தில் பிறந்தாலும்
எந்தன் தமிழுக்காகவே நீ பிறந்தாய்..!
இன்றுன் பிறந்தாநாள் அய்யா..!
மகாகவி பாரதி நீயன்று...
மகா பாரதத்தின் தீ
நீயெனக் கண்டு
நின் வழி போற்றி நிற்கின்றேன்..!

உன் புரட்சிப் பாதையில் அடியேனும்
அடிமையாய்ப் பின் தொடருகிறேன்...
உன் சொல் காத்து நிற்கின்றேன்...
நீ பிறந்த இந்நாள் அய்யா...
இந்த தேசத்திற்கே
தேசியக் கவிஞர் தினம் அய்யா..!
வாழ்க எம்மான்...
எங்களுள் அமரனாய் என்றும்
வாழ்கிறாய் எம்மான்...

                                      -  மோகனன்.

(தேசியக் கவியாகிய மகாகவி பாரதியாருக்கு இன்று 128 –வது பிறந்தநாள் விழா... அவருக்கு இந்தக் கிறுக்கனின்  கிறுக்கல்  சமர்ப்பணம்...)


"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி"

                                                                                                   – மகாகவி பாரதியார்



Friday, September 11, 2009

மகாகவி பாரதிக்கு மரபுக் கவிதாஞ்சலி


ஆசுகவி படைத்தெம் தேசியக் கவியே
வீசுகின் றகாற்றில் கரைந்து போனதேன்
பூசுநறு மணந்தமிழ் கவிபடைத் ததமிழே
மாசுநிறை பூமியில் மறைந்ததேன்

ஆரியனை எரித்தது போல் பரங்கியனை
எரித்து நின்றாய்… எழுத்தாணி யெடுத்து
விரித்தெழு தினாய் சுதந் திரத்தை – தமிழ்கவிச்
சூரியனே நின்கவி சூழ்ந்’தேன்’.

உன்னுடைய கவிதை யெல்லாமெனக்கு உரம்
நின்னுடைய வரிகளெல்லாமெனக்கு வரம்
கன்னித் தமிழ்வார்த் தைகள் சரம் – பைந்தமிழ்
மன்னவ நின்கவி ஆலமரம்.

மண்ணை விட் டுமறைந் துவிட்டெம்மை
கண்ணீரில் ஆழ்த்தி விட்டாய் கவிஞனே
விண்ணில் நீ நட்சத் திரமாம் – தீந்தமிழ்ப்
பண்ணில் நீ கவிப் பகலவன்.

துயில்கொண் டெம்மைது யரத்திலாழ்த் திவிட்டாய்
குயில்போலெங் களுக்குக விசமைத் துக் கொடுத்து
நோயிற்குன் னுயிரைக் கொடுத்தாய் – செந்தமிழ்
பாயிரமே நின்னைப் பணிந்’தேன்’.

(மகா கவிக்கு மரபுக் கவிதையால் கவிதாஞ்சலி எழுதியுள்ளேன்... அவருடைய நினைவு நாளில் அவரது மலர்ப்பாதங்களில் இதை சமர்ப்பிக்கிறேன்... குறைகளிருப்பின் சுட்டுங்கள்..)



மகா கவி பாரதிக்கு கவிதாஞ்சலி




பெண்களை உயர்த்துவோம் பேதமை அகற்றுவேம்
சிந்தையில் நல்லெண்ணங்களைக் குவிப்போம்...
பாரதத் தாயின் விலங்கினை அறுப்போம்...
வெள்ளைப் பரங்கியனை நாடு கடத்துவோமென்றவன்..!

பேத நிறை சமூகம், பேய் நிறைக் கொடூரம்
கொண்ட மூடப் பழக்கங்களை கிழித்தெறிந்தவன்...
வேதங்கள் பொய்... வேள்விகள் பொய்...
சாதிகள் பொய்... சமத்துவமே மெய்யென்றவன்..!

வீறு கொண்டெழுவாய்... வேதனை துடைப்பாய்...
கொடுஞ் சாதிகளகற்றுவாய்... சரித்திரம் படைப்பாய்...
வீறு கொண்டெழுவாய்... விண்ணில் நடப்பாய் என
பத்திரிகை ஆசிரியனாய் பாமரனுக்கும் எழுதியவன்..!

பாமரரும் புரிந்து கொண்டு பகுத்தறிவு பெறவதற்கு
கேலிச்சித்திரத்தால் சமூக அவலத்தைக் காண்பித்தவன்
நமக்கு ஏவலர்கள் தேவையில்லை... - தேச
காவலர்கள் வேண்டுமென்ற நிலையைப் படைத்தவன்..!

பரங்கியரிடம் பணிந்திருந்த பாமர மக்களை
தன் புரட்சிப் பாக்களால் புத்துயிரூட்டியவன்
முண்டாசு கட்டியபடி, எழுத்தாணி தீட்டியபடி சமூக
முரண்பாடுகளை வேரறுக்க புறப்பட்டவன்..!

எட்டயபுரத்தில் பிறந்து எட்டு திக்கும்
செந்தமிழ்க்கவியால் சுதந்திரத்தை வளர்த்தவன்
எந்தன் மகாகவி சுப்பிரமணிய பாரதி..!
விந்தன் எந்தன் சுந்தரத் தமிழன் பாரதி..!

கடும் நோயால் விண்ணுலகம் சென்றாய் நீ
உன்பிரிவால்
தமிழன்னை கண்ணீர் உகுக்கிறாள்
உன் கவி முகம் காணாத நம்
தமிழுலகம்
சூரியனை இழந்த வானம் போல் இருண்டுவிட்டது

மண்ணில் நீ மறைந்தாலும் எம்மில் நீ

திண்ணமாய் நீக்கமற வாழுகின்றாய்...
நம் தமிழன்னை தேம்பித் தேம்பி அழுதாழும்
உன் தேன்கவி படித்து ஆறுதல் கொள்கிறாள்..!

தமிழகத்து வானில் ஓப்பற்ற கவிச்சூரியன் நீ..!
நீ நீங்கிய இந்நாள் தமிழகத்தின் துக்கநாள்...
வளரிளங்கவி தலைமுறையின் துயரநாள்...
நீ நீங்கினாலும் ஐயா... நின் கவி மறையாது..!

நின் புகழ் மறையாது... நீ புரட்சிக் கவி மட்டுமல்ல
எங்களின் தேசியக் கவி...
தீவிர தேன்தமிழ்க் கவி நீ...
உன்னடி தொழுதபடி கண்ணீரோடு காகித்திலிட்ட
என் கவிதாஞ்லி உன் திருவடியில் சமர்ப்பணம்..!

(11.09.2007அன்று எழுதியது, சிற்சில மாற்றங்களுடன்,
கண்ணீரோடு இங்கு பதிவிலிடுகிறேன் ..)