உன்னோடு அமர்ந்து வாழ்வின்
யதார்த்தங்களைப் பேசும் போது
உலகத்தை மறக்கிறேன்!
உனையே உலகமாய் சுகிக்கிறேன்
என் துக்கங்களை
உன்னோடு பகிர்ந்து கொள்கையில்
எனக்காக நீ வருந்துவதை
முழுவதுமாய் தவிர்க்கிறேன்!
என் சுகங்களை சொல்லும் போது
உனது முத்துப்பல் தெறிக்க
நீ சிரிப்பதை ரசிக்கிறேன்!
வாழ்வில் தடுமாறும்போதெல்லாம்
"உனக்காக நான் இருக்கிறேன்"
எனும் மந்திர வார்த்தைகளை
நீ மயிலிறகாய் வருடி விடும் போது
தடம் மாறாமல் இருக்கிறேன்!
இத்தனையும் மொத்தமாய் எனக்குச் செய்து
எனை மனிதனாக செதுக்கியவளே
உனக்கு என் காதலர் தின வாழ்த்துகள்!
உன் காதல் நினைவுகளில் என் வாழ்க்கைகள்!
யதார்த்தங்களைப் பேசும் போது
உலகத்தை மறக்கிறேன்!
உனையே உலகமாய் சுகிக்கிறேன்
என் துக்கங்களை
உன்னோடு பகிர்ந்து கொள்கையில்
எனக்காக நீ வருந்துவதை
முழுவதுமாய் தவிர்க்கிறேன்!
என் சுகங்களை சொல்லும் போது
உனது முத்துப்பல் தெறிக்க
நீ சிரிப்பதை ரசிக்கிறேன்!
வாழ்வில் தடுமாறும்போதெல்லாம்
"உனக்காக நான் இருக்கிறேன்"
எனும் மந்திர வார்த்தைகளை
நீ மயிலிறகாய் வருடி விடும் போது
தடம் மாறாமல் இருக்கிறேன்!
இத்தனையும் மொத்தமாய் எனக்குச் செய்து
எனை மனிதனாக செதுக்கியவளே
உனக்கு என் காதலர் தின வாழ்த்துகள்!
உன் காதல் நினைவுகளில் என் வாழ்க்கைகள்!
(எனை நேசிக்கும்
கவிதைக்கு இந்த கவிதை சமர்ப்பணம். உலக காதலர்கள் அனைவருக்கும் ‘இனிய காதலர் தின வாழ்த்துக்கள்’)
*******************************
நானெழுதிய புதிய சிறுகதை: கல்லூத்துப்பட்டி ஆலமரம்!
*******************************
நானெழுதிய புதிய சிறுகதை: கல்லூத்துப்பட்டி ஆலமரம்!
