ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து. Show all posts
Showing posts with label மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து. Show all posts

Monday, September 16, 2013

பிறைநிலவே உன்னழகில்..! - பிறந்தநாள் வாழ்த்து


பிறைநிலவே உன்னழகில் பெரும் பித்தானோம்
       வளர்நிலவே உன்னுயிரில் குறும் வித்தானோம்!
சிப்பதெனில் உன் குறும்பைத் தவிர வேறேதுமில்லை
      ருசிப்பததெனில் உன் அரும்பு மொழிக்கு நிகரேதுமில்லை!
திரும்பும் திசையெல்லாம் தீங்கரும்பே நீயானாய்
      எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் சேயானாய்!
க்குவலயத்தில் இன்றோடு நீ பிறந்து ஆண்டொன்று
     இந்நாளை கொண்டாடி மகிழ்கின்றோம் என்றும் நன்றென்று!
ஷாஸ்திரம் பாராமல் சம்பிரதாயம் பாராமல் பாரதியின்
      புதுமைப் பெண்ணாய் என்றென்றும் நீ வாழ்க வாழ்கவே!


(எனது தோழியின் மகளுக்கு இன்று முதலாமாண்டு பிறந்தநாள்... அந்த அன்பு செல்லத்திற்கு என் பாசம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! அந்த குட்டி செல்லத்திற்காக நானெழுதிய கவிதை இங்கே... அந்த குட்டி செல்லத்தின் பெயரை, இக் கவிதையில் தடித்த எழுத்துக்களில், மேலிருந்து கீழாக அமைத்து எழுதியிருக்கிறேன்...)




Friday, July 19, 2013

நீ மகளாகப் பிறந்திருக்கிறாய்! - பிறந்தநாள் கவிதை


உன் அன்னைக்கு
நீ மகளாகப் பிறந்திருக்கிறாய்
என்பதை விட
என் அன்னையே
என் மகளாகப்
பிறந்திருக்கிறாள் என்பதே
உண்மை என
உணர வைத்த தாயே

எங்கள் உயிர் மகள் நீயே!

நீ பிறந்த இந்நாளில்
இதயம் முழுதும்
இன்பம் பொங்குதடா!
அப்பா என நீ
எனை அழைக்கும் போது
என் ஆயுள் கூடுதடா!
என் மகளே... எங்கள் உயிரே...
நீ வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!

உன் அன்னையைப் போல்
கற்பூர மூளையடா உனக்கு
எனையும் குழந்தையாக்கும்
குதூகலக் குறும்படா உனக்கு
மயில் தோகையைப் போல்
படரும் கூந்தலடா உனக்கு
புள்ளி மானைப் போல்
துள்ளும் நடையடா உனக்கு
மலரும் தாமரையைப் போல்
மனம் நிறையும் சிரிப்படா உனக்கு
உனை மகளாய் பெற்றதில்
மகிழ்ச்சி உனக்கல்லடா எனக்கு!