அன்று நீ இப்பூமிக்கு வந்த தினத்தை
நினைத்துப் பார்க்கிறேனடா அகிலா
இன்றும் ஆறாத வடுவாய் ஆகிப்போனது
நீயிங்கு அவதரித்த அன்றைய தினம் (1)
செஞ்சுடராய் நீ பிறந்திருக்கிறாய் என்று
நான் நினைத்துக்கொண்டு இருந்த போது
மஞ்சள் காமாலை இவனுக்கு - இன்னும்
இருபத்திநான்கு மணி நேரம் போகட்டும் (2)
உயிர் பிழைப்பானா மாட்டானா என்று
உனைப் பரிசோத்தித்த மருத்துவனின் விடை
உயிரே போனது போலாயிற்று எனக்கு
உன் தந்தையின் கண்களில் கண்ணீர் கடை! (3)
உடல் கிழித்து உனை ஈன்ற அன்னைக்கு
என்ன பதில்கூறுவேன் என்ன செய்வேன்?
உடன்பிறப்பு தம்பியென மகிழ்ந்த உன்
அண்ணனுக்கு என்ன பதில் கூறுவேன்? (4)
கண்களில் கண்ணீர் அருவியாய் பெருக்கெடுக்க
தொண்டைக் குழிக்குள் பெருந்துன்பம் அடைக்க
மண்ணுக்கு நீ வாராமலிருந்திருக்கலாம் மகனே
என நினைக்க வைத்த நாட்கள் அவை அகிலா! (5)
ராச மருத்துவரின் கண் பட்டு கை பட்டு
மஞ்சள் பூத்ததெல்லாம் மறைந்து போக
பூசை செய்யும் ஐம்பொன் மேனியனாய்
அகிலத்தில் வளர்ந்தாய் எங்கள் மகனே! (6)
அன்று நீ தாங்கிய மருத்துவ சிகிச்சைகள்தான்
உனை இன்று உரமேற்றி இருக்கின்றனவோ
என்று நானும் உன் அன்னையும் அடிக்கடி பேசிக்
கொள்வோம்..! சிலாகித்துக் கொள்வோம்! (7)
குறும்புகளின் மொத்த உருவமாய் இருப்பதும்
இரும்பென எதையும் தாங்கும் உறுதியிருப்பதும்
அரும்பென மலரும் அழகு புன்னகை இருப்பதும்
உனக்கே உனக்கென வாய்த்த சொத்துகளடா! (8)
எங்களின் பதிற்றுப்பத்தே, எம்வம்சத்தின் முத்தே
அகிலம் ஆண்ட பராந்தக சோழனின் பெயரினில்
பங்கு பிரித்து அகிலனென பெயர் சூட்டினோமன்று
அகிலமாளும் காலத்தில் வாழ்த்துவோம் நின்று! (9)
அன்பு, பண்பு, அறிவு, ஆற்றல், செல்வம், நீளாயுள்
ஆளுமை, திறமை, பொறுமை, வாய்மை பெற்று
இன்பத்தோடு என்றும் வாழ்க எம்மிளைய மகனே
உனக்கென் பத்தாமாண்டு பிறந்தநாள் வாழ்த்து! (10)
ட்விட்டரில் தொடர
Showing posts with label பிறந்தநாள் வாழ்த்து. Show all posts
Showing posts with label பிறந்தநாள் வாழ்த்து. Show all posts
Monday, June 4, 2018
Friday, September 9, 2016
விடிவெள்ளியாய்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை!
உலக உருண்டையை
வயிற்றுக்குள் வைத்திருக்கும்
பிரபஞ்சத்தைப் போல…
எனது உலகத்தையே
வயிற்றுக்குள் வைத்திருந்தாள்
உன் அன்னை!
திங்கள் நிகர் உன் அன்னை
திங்களாய் உனை சுமந்து
விடிவெள்ளியாய் உனை பெற்றெடுத்தாள்!
இன்னும் நினைவிலிருக்கிறது
அந்த வெள்ளிக்கிழமை
நீ கொடுத்த முதல் மழலைக் குரலால்!
அடங்காத காளை, கோவக்காரன், முரடன்,
திமிர் பிடித்தவன் என பட்டம் பெற்ற எனக்கு
அப்பா எனும் பட்டம் கொடுத்த மழலை!
கன்னியாய் இருந்தவளுக்கு
அம்மா எனும் ஒப்பற்ற பதவி கொடுத்த
எங்களின் முதல் இளவரசன்!
இருண்டு கிடந்த எம் வாழ்வில்
சூரியனாய் உதித்ததால்
ஆதித்தனென்று பெயர் சூட்டினோம்!
கல்வி, கேள்வி, கலைகளில்
சிறந்து விளங்கிய ஆதித்த கரிகாலனைப்போல
ஆதவனாய் வரவே அப்பெயர் தீட்டினோம்!
என்றும் எங்கள் ஆதவனே
மோகனன் வீட்டு இளவரசனே
தாய்க்குத் தலை மகனே!
இன்றோடு நீ பிறந்து
ஆயிற்று ஆண்டுகள் பதினொன்று
வாழ்க ஆண்டுகள் பலநூறு!
எல்லா கலைகளும் கைவரப் பெற
தந்தையை விஞ்சும் தனையனாக மலர
இயற்கையோடு இணைந்து வாழ்த்துகிறேன் மகனே!
(இன்று 11-வது பிறந்தநாள் காணும் எனது முதல் மகன் ஆதித்தனுக்காய் இந்த கவிதை..!)
Wednesday, September 9, 2015
ஆண் நிலவே..! – பிறந்தநாள் வாழ்த்து கவிதை!
எங்கள் அன்பினில்
உதித்த உயிரே…
திங்கள் முகம்தனை
வடித்த உறவே…
சிங்கம் நிகர்த்த
என் மகவே…
தங்கம் இழைத்த
ஆண் நிலவே..!
உன் தாயின்
உதித்த உயிரே…
திங்கள் முகம்தனை
வடித்த உறவே…
சிங்கம் நிகர்த்த
என் மகவே…
தங்கம் இழைத்த
ஆண் நிலவே..!
உன் தாயின்
கருவறையில்…
முத்துப்போல்
துயில் கொண்டு…
துயில் கொண்டு…
பத்துத் திங்கள்
நீங்கக் கண்டு…
நிலவைப் போலின்று
கால் பதித்தாய்..!
இப்புவியில் நீ கால்பதித்து
இப்புவியில் நீ கால்பதித்து
இன்றோடு ஆயிற்று
ஆண்டுகளும் பத்து..!
முத்தமிழின் முதல் தமிழாம்
இயற்றமிழில் உள்ள
நூல்களுளொன்று பதிற்றுப் பத்து..!
தாய்த் தமிழின் மணிமுடியில்
அந்நூலும் ஒரு முத்து..!
என் தாய்த்தமிழின் வீரமும்
என் தாய்த்தமிழின் வீரமும்
குன்றா வளமையும்
உனக்கு வாய்க்கட்டும்..!
உனது எண்ணம் போல்
அறிவியல் துறையில்
உன் மேதமை வாய்க்கட்டும்..!
இன்று போல் என்று வாழ்க
எங்கள் தலைமகனே..!
(இன்று எனது முதல் மகனான க.ஆதித்தனுக்கு 10-ஆவது பிறந்தநாள். அவருக்காக எழுதிய பிறந்தநாள் வாழ்த்து கவிதை இது...)
(இன்று எனது முதல் மகனான க.ஆதித்தனுக்கு 10-ஆவது பிறந்தநாள். அவருக்காக எழுதிய பிறந்தநாள் வாழ்த்து கவிதை இது...)
வகைப்பாடு
Birthday poems,
அனுபவம்,
ஆதித்தன் பிறந்தநாள்,
பிறந்தநாள் வாழ்த்து
Thursday, June 4, 2015
எங்கள் உலகின் வானவில்லாய்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை
காய்ந்து கிடக்கும் பூமிக்கு
வளத்தைத்தரும் வான மகள்
மழை தரும்போது
முறுவலிக்கும் வானவில்லின்
நிறங்களுமிங்கே ஏழு!
நாம் வாழும் பூமியை
கடலைத் தவிர்த்து
நிலப்பரப்பின் அடிப்படையில்
பிரிக்கப்பட்ட கண்டங்களின்
எண்ணிக்கையுமது ஏழு!
பூமியில் இயற்கையாய்
வகைப்படுத்திய அதிசயங்களும்
மனிதன் செயற்கையாய்
வகைப்படுத்திய அதிசயங்களும்
இங்கே ஏழு!
காலச் சக்கரத்தின் வேகத்தை
கட்டுக்குள் கொண்டுவர
காலத்தை கணக்காய்
வகைப்படுத்திய போது
வாரத்தின் நாட்களுமிங்கே ஏழு!
உலகின் மூத்த மொழியாம்
முத்தமிழின் முத்தான இலக்கியங்கள்
வகைப்படுத்திய
பிள்ளைப் பருவங்களின்
எண்ணிக்கையது ஏழு!
மழலையாய் இருந்த போது
நீ அழுகையில்
உனை அமைதிப்படுத்த
உன் அன்னை பாடிய தாலாட்டிசையின்
சுரங்களின் எண்ணிக்கையும் ஏழு!
எங்கள் உலகின் வானவில்லாய்
பெருமழையாய், பேரிசையாய்
அதிசயமாய், அழகிய இளவலாய்
இந்நாளில் பிறந்தாயே என் அகிலா…
இன்றோடு உன் அகவை ஏழு!
(இன்று எனது இளைய மகன் க. அகிலனின் ஏழாவது பிறந்தநாள். உன் அன்னை மட்டுமல்ல அகிலமே பெருமைப்படும்படி எதிர்காலத்தில் சாதிக்க வேண்டும். நிச்சயம் நீ சாதிக்கப் பிறந்தவன்.அன்பு, மதி, செல்வம் அனைத்தையும் நீ ஆண்டு, பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க மகனே..!)
வகைப்பாடு
Birthday poems,
Special post,
அகிலன்,
அனுபவம்,
பிறந்தநாள் கவிதை,
பிறந்தநாள் வாழ்த்து,
புனைவு
Tuesday, March 24, 2015
இன்னுமொரு இளவலாய்..! - பிறந்தநாள் வாழ்த்து
சந்தனத்து வாசமும் சங்கத்தமிழ் நேசமும்
வந்தனம் பாடும் வேளையில் வந்துதித்தாய்!
ந்திரன் பிறந்தானென்று நம் பெற்றோருனக்கு
மலேயாவில் தமிழையும் உனக்கூட்டி வளர்த்தனர்!
திரைகடலோடி திரவியம் தேடிய எம்குலத்தின்
இன்னுமொரு இளவலாய் நீ பிறந்த தினமின்று!
ரகளையாய் நீ குறும்பு செய்த காலங்களில்
உன்னோடு நான் இல்லாமல் போய்விட்டேன்!
ன்று போல் என்றும் நீ மலர் போல் சிரித்தபடி
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்கவே!
(1,3,5,7,9 வரிகளின் முதல் எழுத்துகளை மேலிருந்து படித்தால்... இன்று பிறந்தநாள் காணும் எனது தம்பியின் பெயர் கிடைக்கும்... புகைப்படத்தில் தனது மகனுடன் எனது தம்பி)
வகைப்பாடு
Birthday poems,
அனுபவம்,
கவிதை,
பிறந்தநாள் வாழ்த்து
Saturday, October 25, 2014
யாழிசையும் குழலிசையும்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை!
யாழிசையும் குழலிசையும் உன் மழலைக் குரலுக்கு
முன்னால் மண்டியிடுகிறது எங்கள் சந்திர மகவே!
தவமிருந்து பெற்ற தமிழகத்தின் தனிப்பெரும் சொத்தே!
சந்திரனுக்கும் சங்கீதாவிற்கும் நீ விலைமதியா முத்தே!
வங்காளம் தாண்டி சிங்காசனமிட்ட எங்கள் வம்ச வித்தே!
செந்தமிழ் கொண்டுனக்கு எழுதுகிறேன் பிறந்தநாள் வாழ்த்தே!
ன்று போலென்றும் மகிழ்வோடு மாநிலம் போற்ற வாழ்க!
புவனம் போற்ற வளர்க எந்தன் மகவே உனக்கு என் வாழ்த்து!
(இன்று பிறந்தநாள் காணும் எனது தம்பி சந்திரனின் மகனுக்காக நான் எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை... இக்கவிதையின் 1,3,5,7 வது வரிகளில் உள்ள முதல் எழுத்துக்களை மேலிருந்து கீழாக வரிசைப்படி படித்தால், பிறந்த நாள் கொண்டாடும் மழலையின் பெயர் கிடைக்கும். கிடைச்சுதா.. சொல்லுங்க...!)
வகைப்பாடு
Birthday poems,
பிறந்தநாள் கவிதை,
பிறந்தநாள் வாழ்த்து
Tuesday, September 9, 2014
நீ அளித்த பிச்சைதான்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை
ஆதவனைப் போல் உதித்த
என் மலரே..!
மேகத்தைப் போல் தவழ்ந்த என் மகவே..!
மேகத்தைப் போல் தவழ்ந்த என் மகவே..!
அம்புலியைப் போல்
வளர்ந்த என் அழகே..!
விண்மீனினைப் போல்
சிரித்த என் இதழே..!
முயலினைப் போல் குதித்த என் நிலவே..!
முயலினைப் போல் குதித்த என் நிலவே..!
மானினைப் போல்
ஓடிய என் நதியே..!
யானையைப் போல்
சிந்தித்த என் மதியே..!
சிங்கத்தைப் போல்
ஒலித்த என் குரலே..!
நீ பிறந்து இன்றோடு ஆண்டுகள் ஒன்பது..!
நீ பிறந்து இன்றோடு ஆண்டுகள் ஒன்பது..!
நீ அளித்த பிச்சைதான்
நான் தந்தை என்பது..!
வாழ்வில் எமக்கு
கிடைக்கும் மகிழ்ச்சி என்பது?
நீ பிறந்த இந்நாள்தான்
என உலகம் சொல்வது..!
வாழ்க என் மகனே… வளர்க என் மகனே..!
வாழ்க என் மகனே… வளர்க என் மகனே..!
தாழ்க உன் மனமே...
ஏழைக்கு தாழ்க உன் மனமே..!
(எங்கள் வீட்டு பட்டத்து இளவரசர் க. ஆதித்தனுக்கு இன்று ஒன்பதாவது பிறந்தநாள். அவருக்காக நானெழுதிய பிறந்தநாள் வாழ்த்து கவிதை)
(எங்கள் வீட்டு பட்டத்து இளவரசர் க. ஆதித்தனுக்கு இன்று ஒன்பதாவது பிறந்தநாள். அவருக்காக நானெழுதிய பிறந்தநாள் வாழ்த்து கவிதை)
Friday, December 13, 2013
முத்தாரக் கவியெடுத்து..! - பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை
முத்துத் தமிழெடுத்து
முத்தாரக் கவியெடுத்து
உன்
மாமன் வருகிறேன் பிறந்தநாள் வாழ்த்துப் பாட
குயிலாய் குரல்
கொடுக்கும் குழவியாயிருந்த நீ
இன்றோடோராண்டை எட்டுகிறாய் மருமகனே- உனக்காக
ந்திர லோக சபையை
நான் கூட்டட்டுமா..!
மாமன்
முதுகிலேற்றி உலகைக் காட்டட்டுமா..!
தங்க நண்பனுக்கு
தப்பாமல் நீ பிறந்தாய்..!
தங்க
மகனென்று போற்றிடவே நீ வளர்வாய்..!
ன்று மட்டுமன்று
என்னாளும் ஊருலகம் உனைப்
போற்றும்படி
வாழ்வாங்கு வாழ்கவென் மருமகவே!
*********************************************************************************
(எனது ஆருயிர் நண்பனும், எனக்கு தோள் கொடுக்கும் தோழனுமான வ.நவநீதகிருஷ்ணனின் மகனாகிய எனது மருமகனுக்கு இன்று முதல் பிறந்தநாள். அவனுக்காக எழுதிய பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை. பிறந்தநாள் கொண்டாடும் எனது மருமகனின் பெயர் தெரியவிரும்பினால் கவிதை வரிகளில் தடித்த எழுத்துக்களில் இருப்பவற்றை மேலிருந்து கீழாகப் படித்துப் பாருங்கள்... குதுகலமாய் உங்கள் நாவில் உலா வருவான் என் மருமகன்...)
**************************************************************************************************
நானெழுதிய புதிய சிறுகதை: என்னப் பெத்தவரு
நானெழுதிய புதிய சிறுகதை: என்னப் பெத்தவரு
வகைப்பாடு
Birthday poems,
அனுபவம்,
கவிதை,
நட்பு,
பிறந்தநாள் வாழ்த்து,
புனைவு
Subscribe to:
Posts (Atom)






