ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label நெடுங்கவிதை. Show all posts
Showing posts with label நெடுங்கவிதை. Show all posts

Tuesday, January 12, 2010

மலருக்காக மலரிடம் நான் விட்ட தூது..! - நூறாவது கவிதைப் பதிவு

உன் கார்மேகக் கூந்தலில்
பூச்சூடுவதற்க்காக
நான் வாங்கிய
ரோஜாமலரிடம் சொன்னேன்...


‘மெல்லிய மலரே...
உன்னை விட மென்மையானவளிடம்
உன்னைச் சூடக் கொடுக்கிறேன்...
அவள் கார் மேகக் கூந்தலில்
அழுத்தமாய் உட்காராதே
அவளுக்கு காயம் பட்டுவிடும்...’ என்று...

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...’ என்றது

'அவளைப் பார்த்ததும்
அழகாய் ஒரு புன்னகையை
வீசி விட்டு...
அப் பெண்மையிடம்
என் காதலை மென்மையாய்ச் சொல்...' என்றேன்

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!


'என்னவளின் மனசு போல
உன் நிறமிருக்கிறது
என்று பெருமை கொள்ளாதே..?
என்னவளின் மனது...
வெண்ணிலவை விட
வெண்மையானது...
வெண் பனியை விடத்
தூய்மையானது...' என்றேன்..!

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...’ என்றது..!

'உனக்கு வாசமில்லை
என்று வருந்தாதே...
அவளுக்கு வாசமுண்டு...
அவள் வாசத்தை
நீ சுவாசித்தால்...
நீயும் மணக்கும் மலராவாய்...
மல்லிகைப் பூவாவாய்...
நீ மணந்தால் மட்டும் போதாது
அவள் வாசத்தை வாங்கி
என்னிடம் அனுப்பு
நானும் அதை சுவாசிக்க வேண்டும்...' என்றேன்!

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...
அப்படியே செய்கிறேன்’ என்றது..!

'என்னன்பையும்
என் காதலையும்
அவளிடம் அன்பாய்ச் சொல்...
அவள் நினைவில்தான் வாழுகிறேன்...
நிஜத்தில் அவளின்று வாடுகிறேன்'
என்றும் சொல்லென்றேன்..!

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!

சொல்லி விடுமென்று காத்திருந்தேன்..?
அந்த மலரோ...
உன் கார்மேகக் கூந்தலில்
ஏறிய மயக்கத்தில்
அத்தனையும் மறந்துவிட்டு
அசடு வழிந்தபடி சிரித்தது..!
அதுவும் என்னைப் போலவே..!


(இது என்னுடைய நூறாவது பதிவு என்பதில் எனக்கு பெரு மகிழச்சி, இந்த வலைக் குடிலுக்கு ஆதரவு தந்து வரும் எனது அன்பு இணைய வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்...

இக்கவிதைகளை எனக்குள் ஊற்றெடுக்கச் செய்த தாய்த்தமிழுக்கும், என்னவளுக்கும் அன்பு கலந்த முத்தங்களை பரிசளிக்கிறேன்...

தொடரும் உங்கள் ஆதரவுக்கு என்றும் எனது அன்பு கலந்த நன்றிகள்..!

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்

மோகனன்)




Wednesday, December 23, 2009

வாசலில் ஒரு வானத்து தேவதை..!



அடுக்களையில் ஆராய்ந்தபடி
அவசரமாய்
சமையலறையில்
சமைத்துக் கொண்டிருந்தேன்...
அப்போது என் வீட்டுக்
கதவிற்கே வலிக்காமல்...
அக்கதவைத் தட்டும்
மெல்லிய ஓசை கேட்டது..?

உள்ளிருந்தபடியே
‘யாரென்று’ வினவினேன்..!
மறுபடியும்
அதே மெல்லியத் தட்டல்...
‘அட யாருங்கறேன்...’
என்றபடியே எட்டிப்பார்க்க முனைந்தேன்

அதற்குள்...
தேனினும் இனிய குரல் ஒன்று
’நான்தான்’ என்று
தேனமுத கானமாய் ஒலித்தது..!

எட்டிப் பார்த்தேன்..!
வாசலில் ஒரு வானத்து தேவதை..!
பார்த்த வினாடியில்
மூர்ச்சித்துப் போனேன்..!
அவளழகில் முயங்கிப் போனேன்..!

வெள்ளி நிறச் சேலை கட்டி
நீல வான வீதியிலே
துள்ளி வரும் வெண்ணிலவைப் போல்
எந்தன் பெண்ணிலவு
வெண்ணிறச் சேலை கட்டி
பொன்னிலவாய்
என் முன்னே வந்து நின்றது..!

அவளை அப்போதே
அள்ளிப் பருக ஆசை என்றாலும்
அவளழகைப் பார்த்த என் கண்கள்
இமை மூட மறுத்து திகைத்தன...
அவள் அழகில் மூழ்கித் திளைத்தன..!

‘வா என் தேவதையே...
உள்ளே வா...’ என அழைத்தேன்...
அவளும் தன் மெல்லியப்
பூப்பாதங்களை
பூமியிலே பதித்தபடி...
புன்னகையைப் பூவாய் உதிர்த்தபடி
உள்ளே வந்தாள்..!

அவள் அன்று கட்டியிருந்த
வெள்ளை நிறச் சேலையில்
என் மனதை கொள்ளையடித்தாள்..!
முல்லை மலர்ச் சிரிப்பில்
எனை மூழ்கடித்தாள்..!
முயலைப் போல் முறைத்துக் காட்டி
எனை மோகத்தில் சிக்க வைத்தாள்..!

கருங்கூந்தலை தென்றல் காற்றில்
அலைபாய விட்டாள்..
என் மனதை அதனூடே தவழ விட்டு
அக்கூந்தல் மணத்தை
என் இதயமெங்கும் கமழ விட்டாள்..!
அக் கூந்தலின் மணத்தை
என் சுவாசத்திற்க்கு அர்ப்பணித்தாள்..!

அன்று அவள் எனக்காகவே
பிறந்தது போல் தோன்றியது..!
அவள் எனக்காவே என் வாசல் தேடி
வந்தது போல் இருந்தது..!
அன்று முழுவதும் அவளுடனேயே இருக்க
வேண்டுமென்றும் மனசு துடித்தது..!

காலமில்லாத காரணத்தால்
பிரிய மனமின்றி பிரிந்து வந்தேன்..!
அவளின் நினைவால்
பித்தனாய் மாறிச் சென்றேன்..!
அதனை இங்கே கவிதைச்
சித்திரமாய் வரைந்து நின்றேன்..!
இதில் வண்ணங்கள் இல்லை என்றாலும்
என் எண்ணங்கள் உண்டென்பதை
மறவாதே தேவதையே..!
அதோடு சேர்த்து எனையும்...?!

*******

(ஒரு நாள் என்னவள், என் வீட்டிற்கு தேவதையாய் வந்தாள்... அன்று அவளுடைய அழகு எனைப் பாடாய்ப்படுத்திவிட, அவளிடம் இதை எப்படிச் சொல்வேன்... என் ஏக்கத்தை அவளிடம் எப்படித் தெரிவிப்பேன் என யோசித்தேன்... கடைசியில் அதை இங்கே கவிதையாக உளறியிருக்கிறேன்... )




Thursday, November 26, 2009

பொல்லாத ஓர் இரவில்..! - மும்பை தாக்குதல் முதலாமாண்டு நினைவுக் கவியாஞ்சலி



பொல்லாத ஓர் இரவில்
பொல்லாங்கு செய்பவர்கள்
பல்லாக்கு தூக்கிகள் போல்
பதுங்கிய படி வந்திட்டார்…
பாகிஸ்தானிலிருந்து
பயங்கர ஆயுதங்களுடன்
மும்பையில் நுழைந்திட்டார்

அவர்களெண்ணத்தில்
அவல எண்ணங்கள் உதித்திருக்க
அதுவரை உதித்திருந்த
கதிரவனோ…
பயங்கர இரவைக் காணச்
சகியாமால்…
சட்டென்று மறைந்து போனான்…

சட சடவென்று
துப்பாக்கியால் சுட்டபடி
தீயவர்கள்
திகில் கொடுக்க…
மும்பை மாநகரம்
திடுக்கிட்டு விழித்தது…
திகிலில் உறைந்தது…

விட்டில் பூச்சிகளிடம்
வீரத்தைக் காட்டிய
ஈனப்பிறவிகள்…
ரயில் நிலையத்தில்
ரணகளத்தை காட்டிவிட்டு
நட்சத்திர விடுதிக்குள்
நரிகளைப் போல் நுழைந்தன…
கண்ணில் பட்டோரை
சடுதியில் கொன்றன…

உலகத்தின் பார்வை அனைத்தும்
இங்கு குவிந்திருக்க…
வெண்ணிலவும் இந்நிகழ்வை
வேதனையோடு பார்த்திருக்க
வெறியாட்டம் போட்ட
ஈனப் பன்றிகள்…
குதியாட்டம் போட்டன…

அப்பன்றிகளை வேட்டையாட
வேங்கைக் கூட்டமொன்று
புயலெனக் கிளம்பிற்று…
உயிரை துச்சமெனக் கருதி
கடமையை உயிரெனக் கருதி
பிற உயிர்களின் நலன்களைக் கருதி
அவ்வேங்கைகள் பாய்ந்து வந்தன…

ஊழல்வாதிகள் செய்த வினை
ஊடகங்கள் செய்த வினை
அத்தீயவர்களுக்கு
திட்டமாக…
வேங்கையின் தாக்குதல்கள்
விபரீதமாயிற்று…
வீரம் காட்டிய வேங்கைகள்
வீரமரணம் எய்தின…

இறுதியில்…
இன்னுயிர்களை ஈந்து
ஈனப்பன்றிகளை
அழித்தன…
இந்தியர் அனைவரும்
அமைதிப் பெருமூச்செய்தினர்…


உயிரினை இழந்தோர் பலர்...
அங்கே உறவுகளை
இழந்தோர் பலர்…
இறந்தவர்
பல மதத்தினராயினும்
அவர்களைக் காத்தது
இந்தியரன்றோ…

ஒற்றுமை காட்டிடும்
இத்தேசத்தில்
பிற நாட்டு
தே… மகன்களுக்கு
ஒற்று வேலை செய்தலாகுமோ…
நம் தேசத்தை
கூறு போட நினைப்பது தகுமோ…

இதற்குப் பின்னேனும்
விழிக்க வேண்டாமோ நாம்…
வீணர்களை விரட்ட
வேண்டாமோ நாம்…
இத்துன்ப நிகழ்வு நிகழ்ந்து
இன்றோடு ஆண்டொன்று

அழுது கரைந்தாலும்
உருண்டு புரண்டாலும்
உயிர்கள் மீளாது…
நம் உள்ளங்களோ கண்ணீர்
உகுக்காமலிருக்காது…
உயிர் நீத்த உள்ளங்களுக்கும்
மானம் காத்த மாவீரர்களுக்கும்
கண்ணீர் கவியாஞ்சலி செலுத்துகிறேன்
காணிக்கையாக்குகிறேன்…

போனவரை போகட்டும்
இனியொமொரு
தாக்குதலை…
இம் மண்ணில் நடத்த
விடமாட்டோம்…
மீறி நடக்க வைக்க முயல்பவர்களை
நசுக்கியெறிவோம்…

எச்சமர் வரினும்
அவனியில் அஞ்சாமாட்டோம்
அசகாய சூரனென்றாலும்
அடியோடு
அழித்தெடுப்போம்…

இது…
நம்நாடு…
நம்தேசம்...
நம் மக்கள்…
நாமனைவரும் இந்தியர்கள்…
என்ற எண்ணம் காப்போம்...
என்றும் இந்தியனாய் இருப்போம்...