ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label Pongal. Show all posts
Showing posts with label Pongal. Show all posts

Thursday, January 14, 2016

தைப் பொங்கல்..!




வான்மழை பொய்க்காமல்
நீர்நிலை வற்றாமல்
வயல் வெளி சிறுக்காமல்
பயிர் வகைகள் கருக்காமல்
உழவன் நிலை தாழாமல்
தமிழன் மானம் வீழாமல்
இந்த ஆண்டிலேனும்
காக்கட்டும் இந்த தைப் பொங்கல்..!

பூங்கரும்பு பந்தலிட
தேன்கரும்பு பொங்கலிட
வானுயர்ந்த சூரியனும்
நிலமுயர்த்தும் விலங்குகளும்
ஏர் பிடிக்கும் தமிழினமும்
செழித்துத் தழைத்திட
செம்மையாய் வரட்டும்
இந்த தைப்பொங்கல்..!

(என் அன்பு வலைப்பூ நண்பர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்)




Saturday, January 11, 2014

பொங்கலோ பொங்கலடா..!


துலங்கும் தை மாதத் திங்களில் 
       தமிழர் திருநாளாம் பொங்கலடா..!
தையல் வைக்கும் பொங்கலைப்போல்
       தமிழர் உள்ளம் பொங்குதடா..!
துள்ளி இவரும் காளையைப் போல்
        நம் தமிழர் வீரம் துள்ளுதடா..!
உழவர்கள் ஏற்றம் பெறும் நாளிதுதான்
    சொல்லுங்கள் பொங்கலோ பொங்கலடா..!

(எனது வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!

அன்புடன்

மோகனன்)




Saturday, January 12, 2013

தைப்பொங்கல் வருகுதடி தோழி..! - பொங்கல் தின சிறப்புக் கவிதை



தமிழர் திருநாளாம்
தைப்பொங்கல்
வருகுதடி தோழி...
தமிழனின் புகழை
தரணியெலாம்
பாட வருகுதடி தோழி...

நெற்தங்கத்தை
கொட்டிக் கொடுத்த
தமிழ் மண்ணிற்கும்
கதிரவனின் கருணைக்கும்
எருதின் உழைப்பிற்கும்
நன்றி செலுத்தும் நாளிதடி தோழி...

நாள் முழுக்க
உழுது களைத்த காளை...
வயலில் உழவன்
சிந்திய வேர்வை...
நெல்மணியான காலம்
போய்விட்டதடி தோழி...

இன்றோ கழனியெல்லாம்
கட்டடமாய் மாறி விட
காய்கறி விளைவித்த மண்ணெல்லாம்
கூறு போட்டு விற்கும் மனையாகி விட
பச்சை பசுமை மறைந்து
பாழ் பட்ட மண்ணாகி விட்டதடி தோழி...

யானை கட்டி நெற் போராடித்த
காலம் போய்
அண்டை தேசத்திடம்
நெல்மணிக்கு
கையேந்தும் காலம் வரப்
போகுதடி தோழி...

கழனியில்
உழைப்பதற்கு இளைஞர்
கூட்டம் சேர்ந்த காலம் போய்
ஊனை சோம்பி வளர்க்க
மதுக்கடையில்
நிரம்பி வழியுதடி தோழி...

சுறுசுறுப்பாய் இருக்க வேண்டிய மக்களோ
அதிகாலை வேளையில்
அரசின் நூறு ரூபாய் பணத்திற்கும்
ஒருகிலோ அரிசி, வெல்லத்திற்கும்
ஒரு கிலோ மீட்டர் தூரம்
வரிசையாய் நிற்கிறார்களடி தோழி...

நகரமயமாக்கலும்
நரக மயமாக்கலும்
நம் பண்பாட்டை மட்டுமின்றி
நம் முன்னோர்
பட்ட பாட்டையும்
சிதைத்து விட்டதடி தோழி

என் செய்வேன் தோழி...
இக்கொடுமைகளைக் காணுகையில்
உள்ளம் குமுறுகிறது - அவர்கள்
உழைத்தறியா மக்களல்ல தோழி
உழைக்கின்ற வர்க்கத்தை - அரசு
பிச்சைக்காரக்களாக்கி விட்டதடி தோழி...

அத்தனையும் மாற்றுகின்ற
சக்தி வேண்டும் தோழி
சரித்திரத்தில் தமிழினத்தை
தலைநிமிர்த்தும் நாள் வேண்டும் தோழி
வேதனையோடு வருகுதடி
தைப்பொங்கல் தோழி...

மாற்றம் தேடி புறப்படுவோம்
வாடி என் தோழி...
தமிழ் மரபை காத்திடுவோம்
வாடி என் தோழி...
வலையுலக நண்பர்களுக்கு
பொங்கல் வாழ்த்து சொல்வோம் வாடி என் தோழி...!

(இப்பூவலகில் காற்றைப் போல் நீக்கமற நிறைந்திருக்கும் அனைத்து தமிழர்களுக்கும் என் சார்பிலும், என்னவள் சார்பிலும், எனது குடும்பத்தார் சார்பிலும், எனது நட்புகள் சார்பிலும் இனிய தமிழர் திருநாள், தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்..!

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்

மோகனன்)













Saturday, January 14, 2012

பொட்டிட்ட புதுப்பானையில்..! - பொங்கல் வாழ்த்து கவிதை



பொட்டிட்ட புதுப்பானையில்
பொங்குகின்ற பொங்கல் போல்
தங்க மனம் கொண்ட
தமிழர்களின் வாழ்விலும்
தமிழ் நகை பொங்கட்டும்..!

பொன்னான புதுப்பானையில்
பொங்கி வரும் வெண்நுரை போல்
வெள்ளை மனம் கொண்ட
வெள்ளந்தி தமிழர்களின் வாழ்வில்
வெற்றிகள் குவியட்டும்..!

சூரியனார்க்கு நன்றி சொல்லும்
சுந்தரமான பொங்கல் பொல்
சூதில்லா மனம் கொண்ட
சுத்தமான தமிழர்களின் வாழ்வில்
சுகவாழ்வு பெருகட்டும்..!

தரணியை தழைக்கச் செய்யும்
தைமகள் பிறப்பிற்கும்
எருதின் உழைப்பிற்கும் நன்றி சொல்லும்
நல்மனம் கொண்ட தமிழர்களின் வாழ்வில்
நலம் பல திரளட்டும்...
நன்மைகளே விளையட்டும்..!

புலம் பெயர்ந்த தமிழருக்கும்
புலம் பெயரா தமிழருக்கும்
பொங்கலோ பொங்கல்
பொங்குக தமிழ்ப் பொங்கல்..!
பொங்குக எங்கும் மகிழ்ச்சிப் பொங்கல்..!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எனது அன்பு நண்பர்களாகிய உங்களனைவருக்கும் எனது இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!

என்றென்றும் அன்புடன்

மோகனன்.




Friday, January 14, 2011

தையலெனும் தைமகள் வருகிறாள்..!


மதி நிறை மார்கழித் திங்கள்
மறையத் துவங்க...
தையலெனும் தைமகள்
தலை நிமிர்ந்து வருகிறாள்...
தமிழர்களின் உளம் மகிழ வருகிறாள்...

தமிழர்த் திருநாள் போற்ற வருகிறாள்..!

வரவேண்டும்...
வர(ம்)வேண்டும் தமிழ்ப்பெண்ணே
உமை வேண்டி பாடுகிறேன்
தமிழ்ப்பண்ணே..!

நூறு கிலோ அரிசி மூட்டையைச்

சுமப்பவனால்
நல்ல அரிசி ஒரு கிலோ
வாங்கிச் சாப்பிட வழியில்லை..!
ஒரு கிலோ நல்லரிசி வாங்கி
உண்பவனால்
நூறு கிலோ அரிசி மூட்டையைச்
சுமக்க வக்கில்லை..!

பட்டாடை நெய்கின்ற நெசவாளரால்

சிறுபட்டாடை வாங்கியணிய வசதியில்லை
பட்டு வாங்கும் பணக்காரர்களுக்கு
நெசவாளர் நலனறியப் போவதில்லை..!

போதுமிந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்

எல்லோரும் எல்லாமும் பெற
வறியோர்கள் உடையோர்கள் எனும்
ஏற்றத் தாழ்வு மறைய... 
தமிழான தைமகளே தயை புரி..!

ஈழத்து மண்ணில் எம்மக்கள்

இருக்கின்ற இரும்புச்சிறையினை
இருக்குமிடமில்லாமல் செய்..!
உலகத்து தமிழரெல்லாம்
ஒன்றுபட்டு நிற்கும் நிலையினை
இப்புவிதனில் மலரச் செய்..!

அனைவரின் நெஞ்சிலும்

அன்பை விதைத்து...
தீவிரவாதத்தை தீயிட்டழித்து
உயிர் வதையினை உருத்தெரியமலழித்து
உலகெங்கும் அமைதியை பரவச் செய்..!

வியர்வையை உடலில் வரைபடமாக்கி

உழைக்கின்ற பாட்டாளி வர்க்கமும்
வியர்வையை நிலத்தில் நெல்மணியாக்கும்
உயர்ந்த என்னுழவர் வர்க்கமும்
வாழ்வாங்கு வாழ தைமகளே வழி செய்..!

(என் அன்பிற்கினிய வாசக நெஞ்சங்களுக்கு, அடியவனின் இனிய திமழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்...

என்றென்றும் அன்பு
'டன்'


உங்கள்
மோகனன்)