ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Friday, November 28, 2025

காதல் விதை

 


விதைத்தவள் நீயென்பதால்

விளைந்து கொண்டே இருக்கிறது

கவிதையும் காதலும்!





Tuesday, August 13, 2019

உடல் உறுப்பு தானம்! - காதல் கவிதை

"தோழரே...
இன்று உடல் உறுப்புகள் 
தான தினம்!
உங்கள் உறுப்புகளை
தானம் தாருங்கள்!"
என்று கேட்ட தன்னார்வலரிடம்
தாராளமாகத் தருகிறேன்!
உடலில் உள்ள
அனைத்தையும் தருகிறேன்!
என் இதயத்தைத் தவிர...
என்றேன்!
"ஏன் தோழர்?" என்றவரிடம்
என்னவளை
எப்போது சந்தித்தேனோ
அப்போதே அவளிடம்
என்னிதயத்தை தந்துவிட்டேன்!
இல்லாத ஒன்றை
எப்படித் தருவது தோழா?


(காதலிக்கும் தோழமைகள் இந்த கவிதையை சுட்டு பயன்படுத்திக்கொள்ளலாம்..!)




Friday, April 29, 2016

ஆறாய்ப் பெருகி..!


கனவுகள் வழியே
என் நினைவுகளைத் 
திருடிச் செல்லும்
தேவதையே..!

குரலின் வழியே
என்னுயிரினை
உரசிச் செல்லும்
பூங்குயிலே..!

ஓரப்பார்வையின் வழியே
என்னுலகினை
வசியம் செய்யும்
வான்மதியே..!

உன் அன்பின் வழியே
உன்னால் இங்கு
பனியாய் உருகி வழிகின்றேன்..!

ஆறாய் பெருகி ஓடுகின்றேன்..!

நீ அணையாக இருந்தென்னை
அணைப்பாயா?
நீ துணையாக இருந்தென்னை 
இணைப்பாயா?

(தமிழரின் வீரவிளையாட்டுகளில் ஒன்றான... சிலம்பாட்டத்தை கற்றுக்கொண்டு வருகிறேன். நான் ஆடிய சிலம்பாட்டத்தை பார்க்கறீங்களா...: மோகனனின் சிலம்பாட்டம்)




Friday, January 29, 2016

முடியாது..!



"என்னால் முடியாது...
எதுவுமே முடியாது...
தொலைதூரத்தில்
இருக்கும் உன்னிடம்
அலைபேசியில்
ஆர்ப்பரிக்கும் அலையைப்போல்
பேசமுடிகின்ற என்னால்…
நேரில் சந்தித்தால்
ஒரு நொடிகூட
தைரியமாய் பேச முடியாது..!"
என அடிக்கடி சொல்லிக் ‘கொல்கிறாய்’
'வாய் பேச முடியாவிட்டாலென்ன?
உன்னிரு கண்கள் போதுமே
பேசுவதற்கு…' - என்றேன்
"அதுவும் முடியாது…
வெட்கத்தால்
கண்களை தாழ்த்திக் கொள்வேன்…
மொத்தத்தில்
உன்னை நேரில் பார்த்தால்
என்னால் எதுவுமே முடியாது…"
என்று சொன்னவளே…
குங்குமப்பூவைப் போல்
வெட்கப்பட மட்டும் உன்னால்
எப்படி முடிந்ததாம்..!


('முடியாது' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுத முடியுமா என்று என்னிடம் சவால் விட்டதற்காக எழுதப்பட்ட காதல் கவிதை இது... அட நீங்களும் கூட சவலான தலைப்பைத் தரலாம். கருப்பொருளும் உங்கள் விருப்பம் போல... 

மயிலிறகோடு நான் தயார்... நீங்கள்..? )




Thursday, January 28, 2016

உம்ம்ம்…!



என் தமிழ் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் பேச்சு பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் மொழி நடை பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் குறும்புகள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் சீண்டல்கள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் கிறுக்கல்கள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் கொஞ்சல்கள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என்னை பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
இப்படி எல்லாவற்றிற்கும்
“உம்ம்ம்” சொன்ன கள்ளியே
என் காதலுக்கு மட்டும்
கள்ளத்தனமாய்
“ஊஹும்…” சொல்வதேன்..!




Wednesday, January 27, 2016

எதுவுமே வேண்டாம்..!



என்னிடமிருந்து
அன்பு வேண்டாம்...
அரவணைப்பு வேண்டாம்...
துன்பம் வேண்டாம்...
துயரம் வேண்டாம்...
அழுகை வேண்டாம்...
பொய்மை வேண்டாம்...
பேதம் வேண்டாம்...
ஆதிக்கம் வேண்டாம்...
இவை எதுவுமே
எனக்கு வேண்டாமென்று
சொல்கிறாயே...
அன்பொன்றிருந்தால்
அரவணைப்பு வந்துவிடும்!
இவையிரண்டும்
வந்துவிட்டால்
மற்றவை எல்லாம்
உன்னிடம் வாராமல் போய்விடுமே...
அப்புறம் எப்படி
அதனை வேண்டாமென்று
சொல்வாய்..?




Wednesday, January 13, 2016

மூன்றாம் பிறைகள்..!


பௌர்ணமி நிலவால்
மூன்றாம் பிறைகள்
அனைத்தும்
மின்னும் நட்சத்திரங்களாகும்
விந்தைதனை
இப்பூவுலகில் காண்கிறேன்! -
உன்றன் வகுப்பறையில்..!




Friday, December 11, 2015

உன் கண்ணீரில் இங்கு..!



 
என் மீதுள்ள கோபத்தில்
எனை நீ கொலையே
செய்தாலும் கூட
கொம்பேறி மூக்கனாய்
ஏற்றுக் கொள்வேனடி..!
பெருங் கோபத்திற்கு பதிலாய்
உன் மை விழிகள்
கண்ணீர் உதிர்க்கிறதென்றால்
அதை மட்டும் என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லையடி…
உன் கண்ணீரிலிங்கு
கரைவது என் மனம் மட்டுமல்ல
என்னுயிரும்தானடி..!




Saturday, November 28, 2015

தொலைந்து போ..?


நமக்கிடையே
நடக்கும்
அலைபேசி
உரையாடல்களில்
அதிகம் ஊடல்தான்
வெற்றி நடை போடும்..!
அதிலும் நீ
அடிக்கடி என்னிடம்
'தொலைந்து போ' என்று
சொல்லும் போது
என்னுள் தோன்றுவது
ஒன்றே ஒன்றுதான்-
'தேடுவது நீ எனில்
மீளா இடத்தில் கூட
தொலைந்து போகத் தயார்!'




Friday, November 27, 2015

அடிக்கடி கேட்கிறாய் நீ..!




‘எப்போதும்
மகிழ்வுடன் இருக்கிறாயே...
அதெப்படிடா’ என்று
என்னிடம் கேட்கும் போதெல்லாம்
இந்த இதழாளனின் இதழோரம்
ஒரு மெல்லிய புன்னகை  கசியும்..!
அந்த கசிவில் நீ கலந்திருப்பதை
அறிந்திருந்தாலும்
என் இதழால் அறிய
வேண்டுமென்பதற்காகவே
அடிக்கடி கேட்கிறாய் நீ..!
கேள்வி கேட்பவனையே
கேள்விக்குறியாக்கிய உனக்கு
இதெல்லாம்
சொல்லியா கொடுக்க வேண்டும்..!




Wednesday, November 25, 2015

நினைவுச் சுமைகளை..



‘உன் நினைவுகளை
மட்டுமே சுமக்க
னக்கு உரிமையுண்டு
என்று சொல்லிவிட்டு
எனது நினைவுகளை மட்டும்
எடுத்துச் செல்பவளே...
என்னையும் உன்னோடு
அழைத்து் செல்...
இல்லையேல் 
என் உயிரை எடுத்துக் 
கொண்டு செல்...
நீயின்றி இங்கே நான்
சடலமாய்த் திரிவதை விட
சாம்பலாய்க் கரைவது மேல்..!