கண்ணிமை உறக்கத்தைக்
கவர்ந்து கொண்டதேன்..?
கன்னி மொழிப் பேச்சினிலே
எனைக் கவிழ்த்து விட்டதேன்..?
காலம் கடந்து என் கண்
முன்னே வந்து நின்றதேன்..?
காதலெனும் மாய வலையில்
எனை சிக்க வைத்ததேன்..?
உன் காந்தமெனும் கண்ணிலே
எனை சிறை பிடித்ததேன் பெண்ணே..?
வரமாட்டாய் எனத் தெரிந்தும்
உன் வரவிற்காகக்
காத்துக் கொண்டிருக்கிறேன்..!
தரமாட்டாய் எனத் தெரிந்தும்
உன் தாயன்பை
கேட்டுக் கொண்டிருக்கிறேன்..!
காலம் கடந்து வந்தாலும்
காதல் காதல்தானே..!
மறந்துவிடு எனை என்றாய்...
மறந்து விட்டேன்...
உன்னைத் தவிர அத்தனையும்..!