ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label யாழினியின் கவிதைகள். Show all posts
Showing posts with label யாழினியின் கவிதைகள். Show all posts

Friday, October 7, 2011

கலியுகத்து அர்ஜுனனோ?



அந்தி மாலை நேரத்தில்...
ஆராவார சாலையில்...
இரு சக்கரத் தேரிலேறி
எங்களது வீதியிலே
நீ வீதி உலா வருகையில்...
உன் விழிகளெனும் வில்லேந்தி
ஓரப்பார்வை எனும் அம்பால்
என் மனதிற்குள் போர்தொடுத்தவனே...
நீதான் என் கலியுகத்து அர்ஜுனனோ?




Monday, September 12, 2011

நீ இருசக்கர வாகனம் வாங்கியதால்..!



நீ இருசக்கர வாகனம் வாங்கியதால்
நேற்று வரை
தங்கத்தின் விலையை மட்டுமே
கவனித்துக் கொண்டிருந்தவள்
இன்று பெட்ரோல் விலையை
மட்டும் கவனிக்கிறேன்..!
நேற்று வரை 
ஆடை விளம்பரங்களை மட்டுமே
ரசித்துக் கொண்டிருந்தவள்
இன்று இருசக்கர வாகன
விளம்பரங்களை மட்டும் ரசிக்கிறேன்..!
நேற்று வரை...
விமானத்தில் மட்டுமே பயணம்
செய்ய விரும்பியவள்...
இன்று உன் இரு சக்கர வாகனத்தில்
மட்டும் பயணம் செய்ய விரும்புகிறேன்...
என்னுள் ஏன் இத்தனை மாற்றங்கள்..
உன் காந்தக் கரம் பட்ட வாகனம்
என் இரும்பு இதயத்தை ஈர்த்ததாலா..?
இல்லை.. நீ எனக்கே எனக்கென
வாங்கிய இரு சக்கர
இரும்புப் பறவையாலா..?




Thursday, December 23, 2010

விரல் தீண்டி இருந்தால்..!


மார்கழி மாதத்தில்...
அதிகாலைப் பனியில்...
என்னில் மட்டும் விடியல்...
என்னவனின் வருகையால்..!

அவன் விழி தீண்டி
என் விழி இமைக்க மறக்க...
அவன் நிழல் தீண்டி
என் இதழ் சிரிக்க மறக்க...
அவன் விரல் தீண்டி இருந்தால்
என் இதயம் துடிக்க மறந்திருக்குமோ..?                                              




Thursday, December 17, 2009

உன்னைத் தவிர அத்தனையும்..!


கண்ணிமை உறக்கத்தைக்
கவர்ந்து கொண்டதேன்..?
கன்னி மொழிப் பேச்சினிலே
எனைக் கவிழ்த்து விட்டதேன்..?
காலம் கடந்து என் கண்
முன்னே வந்து நின்றதேன்..?
காதலெனும் மாய வலையில்
எனை சிக்க வைத்ததேன்..?
உன் காந்தமெனும் கண்ணிலே
எனை சிறை பிடித்ததேன் பெண்ணே..?
வரமாட்டாய் எனத் தெரிந்தும்
உன் வரவிற்காகக்
காத்துக் கொண்டிருக்கிறேன்..!
தரமாட்டாய் எனத் தெரிந்தும்
உன் தாயன்பை
கேட்டுக் கொண்டிருக்கிறேன்..!
காலம் கடந்து வந்தாலும்
காதல் காதல்தானே..!
மறந்துவிடு எனை என்றாய்...
மறந்து விட்டேன்...
உன்னைத் தவிர அத்தனையும்..!




Wednesday, November 11, 2009

காதல்..!


காத்திருக்கிறேனடா... - உனக்காக

னித்திருக்கிறேனடா... - நீ

ல்லாமல் போனால் ல்லறமே எனக்கில்லையடா..!                                                     




Tuesday, November 10, 2009

ஏனடா நீ..?

உன் அன்பிலே
என் அன்னையைக் கண்டேன்…
உன் அறிவுரையிலே
என் தந்தையைக் கண்டேன்…
உன் ஆறுதல் வார்த்தையில்
என் தோழனைக் கண்டேன்…
இப்படி எல்லாமுமாய் வந்தாயே…
ஏனடா நீ...
என்னவனாக
வராமல் போனாய்…?

     

(என் அன்பிற்குரியவள்... எனக்காக எழுதிய கவிதை...)