பத்திடுமே பாழும் ஏப்பு
ஐந்து நிமிட சுகத்திற்கலைந்தால் ஏப்பான
விந்தேயுனை வீழ்த்தி விடும்
கலவிக்கும் கற்புண்டு காணீர் தவறின்
விலையாகும் உமது உயிர்
உயிரான உறவோடி ராமல் வெளிசெல்லின்
உயிர்க்கொல்லி உடலில் சேரும்
உறையுள்ள தென்று முறையற்று நடப்பின்
குறைகொள் குழவி பிறக்கும்
தெளியாத குருதியை தேகத்தில் ஏற்றினால்
எளிதில் வருமாம் ஏப்பு
உமதில் லாளை ஏய்த்தால் காத்திருக்கிறது
எமனின் வாகனம் ஏப்பு
உனைநம் பியுள்ளோரை ஏமாற்றினால் வீணே
வினையாகும் உமது குலம்
பெற்றோரீந்த உடலை ஏப்புக் கிரையாக்கின்
கற்றோனாயினும் இழி கழுதையே
குலம்காக்க உனை ஈன்றால் - உடல்திமிரால்
மலத்தினும் கீழானாய் மனிதா
------------------------------------------------------------------------
ஃ எதுக்கும் அறிஞ்சொற்பொருள் கொடுத்திடறேன்
சதி = மனைவி, பரத்தை= விலைமாதர் , விலைமாதன் , ஏப்பு = எயிட்ஸ், உறை = காண்டம், குறைகொள் = எயிட்ஸ் நோய் பாதிப்பு, குழவி = குழந்தை, தெளியாத குருதி = பரிசோதனை செய்யப்படாத ரத்தம், இல்லாள் = மனைவி, வினையாகும் = அழிந்து விடும்.
(நமக்கு அய்யன் திருவள்ளுவர் அளவுக்கெல்லாம் தமிழ் தெரியாதுங்க... எதோ எனக்கு தோணிணத குறள் வடிவத்துல எழுதியிருக்கேன்... குறையிருந்தால் சுட்டுங்க... ஒழுக்கமா வாழ உறுதியெடுப்போம்... ஏப்பு என்கிற எயிட்ஸை ஒழிப்போம்...
என்றென்றும் அன்புடன்
மோகனன்)
இது குறித்து நானெழுதிய பிற கவிதைகளைப் படிக்க வேண்டுமா..?உலக எயிட்ஸ் தினம் - விழிப்புணர்வுக் கவிதைகள்

