ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

Wednesday, December 7, 2016

தலைநிமிர்ந்த எனது பேனா!

 
உங்கள் ஆட்சியில்
ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள்
நாட்டை சுரண்டிய அமைச்சுகள்
டாஸ்மாக் விற்பனைகள்
என பல்வேறு
விஷயங்களுக்காக
உங்களுக்கு எதிராய்
தலைநிமிர்ந்து
எழுதிய எனது பேனா
நீங்கள் இம்மண்ணிலிருந்து
மறைந்து போன போது
தலைகுனிந்து
கண்ணீர் விட்டதை
பகிரங்கமாய் ஒப்புக்கொள்கிறேன்!
நீங்கள் கட்டிக்காத்த தமிழகம்
இனி என்னாகுமோ
என்ற கவலையில்
என் பேனா
விழிப்போடு இருக்கிறது!
வல்லூறுகளும்
பிணம் தின்னி கழுகுகளும்
என் தமிழ்நாட்டை
கூறுபோட்டிடுமோ
என்ற கவலையில்
என் பேனாவை
முன்னை விட முனைப்போடு
கூர்தீட்டிக் கொள்கிறேன்!
சத்தியத்தின் பக்கத்தில்
சத்தியமாய்
நீங்கள் இருப்பீர்
என்ற நம்பிக்கையில்..!




Tuesday, December 6, 2016

இரும்புத் தாரகையே! - ஜெயலலிதாவிற்கு கவிதாஞ்சலி




சிந்தனை, செயல், வேகம் என அனைத்திலும்
பெண் சிங்கமென செயல்பட்ட மனமே எழுவாயோ?

வந்தனை பாடும் கூட்டத்தை எல்லாம் பந்தாடி
நிந்தனை கூட்டத்தை துரத்தியடித்த மனமே எழுவாயோ?

உன் குரல் கேட்டு ஒடுங்கிய சிறு நரிகளெல்லாம்
இன்று கூடி நின்று வேடிக்கை பார்க்கிறதே எழுவாயோ?

காவிரி, பெண் குழந்தை பாதுகாப்பு, இட ஒதுக்கீடு
என நீ செய்த நன்மைகள் ஒன்றல்ல இரண்டல்ல எனினும்

தமிழகம் நீ இருந்த போதே தள்ளாடிற்று – நீயின்றி
எப்படித் தள்ளாடுமோ என கவலையுறுறேன் குடிமகனாய்!

உன் மேல் எனக்கு ஆயிரம் வருத்தமிருப்பினும் - பெண்
இனத்தின் வழிகாட்டி என்பதில் பெருமை கொள்கிறேன்!

நிலவு முகம் கொண்ட உனைச் சுற்றி இருள் சூழுதே!
உலரும் வங்கக்கரை மண்ணுளுன் பொன்னுடல் மறையுதே!

துரோகங்களைத் தாங்கி துயரங்களைத் தாங்கி
தமிழகத்தினை வழிநடத்திய இரும்புத் தாரகையே

உண்மையில் நீ வானத்துத் தாரகையாகி விட்டாய் - உன்
துதி பாடி, கறை படிந்த கரங்கள் இனி இருளட்டும்

நீ கொண்டு வந்த நல்ல திட்டங்கள் உன் பேர் சொல்லட்டும்!
உன்னால் புனர்வாழ்வு பெற்ற ஏழைகள் உன் புகழ் பாடட்டும்!

தமிழகத்தின் தனிப்பெரும் இரும்பு பெண்மணியே
தாயே நின் ஆன்மா இயற்கையோடு இணையட்டும்!