ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, March 11, 2014

வாய்கூசாமல் அம்மாவென்று..! - அரசியல் கவிதை


எங்கள் அம்மா
புரட்சித்தலைவி அம்மா
தாயுள்ளம் கொண்ட அம்மா
என்றெல்லாம் பிதற்றும்
ரத்தத்தின் ரத்தங்களே
எந்த அம்மாவாவது
தனது மக்கள்
குடித்தழிந்து சாகட்டும்
என்று நினைப்பாளா?
டாஸ்மாக்கின் விற்பனைக்கு
இலக்கு நிர்ணயிப்பாளா..?
அப்படி நினைப்பவளை
வாய்கூசாமல் அம்மாவென்று
அழைக்கும் உங்களை
என்னென்று சொல்வது
எதனால் அடிப்பது?
மக்களுக்கு
போதையை ஊட்டி
புத்தியை மழுங்கடித்து
அதில் கிடைக்கும் வருவாயினை
வைத்து நடத்தும் ஈனப்பிழைப்பை
என்று ஒழிக்கிறாளோ
அப்போதுதான் அவள் உண்மையான அம்மா
அதுவரை அவள் வெறும் சும்மா?

(நன்றி: கார்டூனிஸ்ட் பாலா)




Monday, April 11, 2011

நவீன வெள்ளைக்காரன்..! - தேர்தல் சிறப்புக் கவிதை


தன்னை விற்று
பிழைப்பு நடத்தும்
வேசி கூட
ஐந்து நிமிடத்திற்கு மட்டுமே
காசு கொடுத்தவனுக்கு
அடிமையாக இருக்கிறாள்..!
ஒர் ஓட்டுக்காக
உன்னை விற்றால்
ஐந்து ஆண்டுகளுக்கு
நீ அடிமையாகப் போவது
மட்டுமின்றி...
அன்னை பாரதத்தையும்
ஊழல்வாதிகளிடம்
அடிமையாக்கி விடுவாய்..!
அரசியல் கொள்ளைக்காரர்களின்
ஓட்டுக்காக விலை போனால்
தாய்நாட்டினை அடிமைப் படுத்தும்
நவீன வெள்ளைக்காரனாகிவிடுவாய்..!
உன்னை விற்காமல்
உண்மையாய் ஓட்டளி...
ஒழுங்கான ஆட்சிக்கு
ஒழுக்கமாய் வாய்ப்பளி..!

(இதையும் படிங்க: அரசியல்வாதியின் வேண்டுதல்..!)

(வாக்களிப்பது நமது உரிமை மட்டுமின்றி ஜனநாயகக் கடமை... ஓட்டிற்காக உங்களை விற்காமல், கம்பீரமாக செல்லுங்கள்...கண்ணியமாய் வாக்களியுங்கள்..!)




Thursday, December 24, 2009

எங்களின் இதயக்கனியே..! - எம்.ஜி.ஆர் நினைவு நாள் கவிதாஞ்சலி


பொன் மனச் செம்மலே!
எங்களின் அண்ணலே..!
புரட்சித் தலைவரே..!
புதுமைப் பித்தரே..!
இந்திரனின் உருவே..!
எங்களின் இதயக்கனியே..!
மக்கள் திலகமே..!
என்றும் மங்காத செல்வமே..!
ஏழைகளின் ஒளிவிளக்கே..!
எங்களின் மணிவிளக்கே..!
நீ மறைந்து இன்றோடு
ஆண்டுகள் இருபத்தி இரண்டு..!

ஆண்டாண்டு காலமாய்
அழுது புரண்டாலும்
மாண்டவர் மீள்வதில்லை..!
நீ மாண்டு போகவில்லை ஐயா
மக்களின் மனங்களில்
குடியிருந்த கோவிலாய்
வாழுகின்றாய்..!
ஒளிவிளக்காய் எங்களுக்கு
வழிகாட்டுகின்றாய்..!

மன்னாதி மன்னா...
நின் மலரடி பணிகின்றோம்..!
நாடோடி மன்னா...
நின் வழி நடக்கின்றோம்..!
மறைந்தும் மறையாத
செல்வமே..
நீ வாழி...
நின் புகழ் வாழி..
வாழி நீ எம்மான்..!



Thursday, November 26, 2009

மும்பை தாக்குதல் - முதலாமாண்டு நினைவு மரபுக்கவிதாஞ்சலி

 

தொம்பையி னாறிய தீயவர் திமிரோடு
மும்பையில் துட்டக் கால் வைத்தனர் – மேலும்
தும்பைப் பூ போன்ற உயிர்களை வதைத்தனர்
வம்பையும் விலைக்கு வாங்கினர்.

வேதனைக் குரல்கள் நாற்புறம் ஓலிக்க
கோதனைக் காக்கிளம் பியதரி மாப்படை
சோதனைத் தீர்க்க தம்மின்னுயிரை ஈந்து
சாதனை படைத்தவ்வெஞ் சமர்.

ஆயிற்றத் துன்பம் நிகழ்ந் தாண் டொன்று
போயிற்றோ நம்மனக் கவலைகள் - மாவீரர்களே..?
தீயிட்டழிக்கும் கொடும் தீவிரவாதி களையவ்
வாயிலினில் வைத்தே வதைத்திடும்.

                                                             
                                                                    - மோகனன்

(மும்பைத் தாக்குதல் நடைபெற்று...இன்றுடன் ஓராண்டு நிறைவு ஆகிறது... அவ்வெஞ்சமிரில் இன்னுயிரை ஈந்து பிற உயிர்களைக் காத்த மாவீரர்களுக்கு உங்களனைவரின் சார்பிலும் இந்த மரபுக்கவிதையினை கண்ணீர் அஞ்சலியுடன் சமர்ப்பிக்கிறேன்... இனியும் இதுபோன்ற துன்பியல்கள் இந்தியாவில் நடைபெறக்கூடாது என்ற நற்சிந்தனைகளுடன் உங்களிடம் இதைப் படையலிடுகிறேன்...)



Monday, November 23, 2009

அரசியல்வாதியின் வேண்டுதல்..!



திருப்பதி ஏழுமலையானே...
இந்த (இடை)த்தேர்தலில்
என்னை நீ ஜெயிக்க வச்சா..?
எனக்கு ஓட்டு போட்ட
ஊர் மக்களுக்கு
மொட்டையடிச்சு
உனக்கு கிரீடம் சாத்துறேன்..!

(20.08.2004 அன்று காலை 9.30 மணியளவில் எழுதி வைத்த கவிதை, தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் வரவிருப்பதால், இங்கே மீள்பதிவாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை கவிதையாய்...)