அம்மா அப்பா
பொண்டு பொடிசு என
குடும்பமே ஒன்றிணைந்து
ஆழக்குழி தோண்டி
இரும்புக்கம்பிகளை இருத்தி வைத்து
வெயிலென்றும்
மழையென்றும் பாராமல்
அடுக்கடுக்காய்
செங்கல் சுமந்து
பெட்டி பெட்டியாய்
மணல் சுமந்து
மூட்டை மூட்டையாய்
சிமெண்ட் சுமந்து
வியர்வையாய்
நீராய்க் கரைத்து எழுப்பிய வீட்டை
கட்டி முடித்தவுடன்
விட்டு விட்டு
தன் குடிசைக்குச் சென்றது
கட்டடத் தொழிலாளியின் குடும்பம்!
