ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Friday, June 25, 2010

பூவைத் தமிழாள்..! - மரபுக் கவிதை

பூவைத் தமிழாள் பன்மொழி யுருவெடுத் தாளிங்(கே)
கோவைத் தமிழ், நெல்லை தமிழ் - சேலத் தமிழ்
மங்கா மதுரைத் தமிழ், மயக்கும் ஈழத் தமிழ்
செங்கதிர்ச் சென்னைத் தமிழ்.

                                                            - மோகனன்




Thursday, June 24, 2010

கொங்கு நாட்டில்..! - மரபுக் கவிதை


நனித்தமிழ் முகிழ்த்தெழும் கொங்கு நாட்டில்
தனித்தமிழ் தமிழர் களனைவ  - றொன்றூடி
சத்தமி ழுக்குர மேற்றியு ரூட்டவே
இத்தமிழ் தரணியா ளும்.
                                                         - மோகனன்




Wednesday, June 23, 2010

வாழிய செம்மொழித்தமிழ்..!


செந்தமிழ் நாட்டினில் பிறந்ததெனக்குப் பெருமை
பைந்தமிழே தாய்மொழி யானதெனக்குப் பெருமை
தீந்தமிழில் கவி சமைப்பதெனக்குப் பெருமை
பூந்தமிழே நீ பெருமைக்கே பெருமை..!

*********

சங்கம் வளர்த்த தமிழுக்கு இன்று
கொங்கு மண்டலத்தில் திருவிழா..!
தங்கத் தமிழின் பிள்ளைகள் எல்லாம்
மங்காத் தமிழுக்கு எடுக்கும்
பொங்கு தமிழ்த் திருவிழா..!
தாயின் வளத்தை பெருக்கவே
அதன் கிள்ளைகளனைவரும்
ஒன்று சேரும் பெருவிழா..!

*********

எங்களால் நீ வாழவில்லை தமிழ்த்தாயே
உம்மால் நாங்களனைவரும்
வாழ்கிறோம் வளமோடு..!
ஆண்டுகள் செல்லச் செல்ல
வயது கூடி கிழப்பருவம்
எய்வதுதானே இயற்கை..!
இங்கே நீ மட்டும் எப்படி
இயற்கைக்கு எதிர்மறையானாய்..?
உன் கிள்ளைகள் நாங்கள்
கிழப்பருவம் எய்தினாலும்…
எங்களைப் பெற்ற தாயே
நீ மட்டும் எப்படி குன்றா இளமையோடு
குன்றென நிற்கிறாய்..?
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
தாயே உனக்கு இளமைதான்
கூடுகிறதே தவிர…
முதுமை அல்ல…

*********

எங்களின் முதல் மறை நீ..!
எங்களின் மூச்சு நீ..!
எங்களின் சுவாசம் நீ..!
எங்களின் அடையாளம் நீ..!
எங்களின் கலாச்சாரம் நீ..!
எங்களின் பண்பாடு நீ..!
எனக்கு அனைத்தும் நீ..!

உன்னை வாழ்த்த எனக்கு
வயதில்லை என்றாலும்
பெற்ற தாயை பிள்ளை வாழ்த்துவது
பிழையாகாது என்ற நோக்கில்
நீ வாழ்வாங்கு வாழ வேண்டும்..
உம்மோடு சேர்ந்து நாங்களும்..!

வாழிய பைந்தமிழ்…
வாழிய தீந்தமிழ்…
வாழிய பூந்தமிழ்…
வாழிய செந்தமிழ்…
வாழிய செம்மொழித்தமிழ்..!

*********

(இதையும் படிங்க... நான் எழுதியதுதான்....)

செம்மொழிக்கான தகுதிகள் - ஒரு விளக்கம்

தமிழுக்கும் பதினாறு பேறு..!