ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label வாசகர் விருப்பம். Show all posts
Showing posts with label வாசகர் விருப்பம். Show all posts

Saturday, August 6, 2016

பச்சை உயிரி!


உலக உயிர்கள்
எல்லாம்
சுவாசிக்க வேண்டும்
என்பதற்காக
தன் உடலெங்கும்
சுவாசப் பையினை
சுமந்து கொண்டிருக்கும்
பச்சை உயிரி
'மரம்..!'

(இன்றும், வழக்கம் போல சிலம்பாட்டப் பயிற்சியில் இருக்கும் போது, பிரசாந்த் எனும் 16 வயது பையன் என்னிடம்  கவிதை சொல்லக் கேட்ட தலைப்பு 'மரம்'

இரண்டு நிமிட யோசிப்பில், சிலம்பத்தை சுழற்றியபடியே அவனிடம் சொன்ன கவிதை இது...)




Friday, August 5, 2016

ரசாயனக் காதலால்..!


இரும்பிற்கும்
ஈரப்பதக் காற்றிற்கும்
ஏற்பட்ட
ரசாயனக் காதலால்
பிறந்த குழந்தை
'துரு'

**************************

(இன்று காலை சிலம்பப் பயிற்சியின் போது, என்னுடன் பயிற்சி செய்யும் 16 வயது பையன் ஒருவன்... அண்ணா நீங்க கவிதை எல்லாம் சொல்லுவீங்களாமே... எனக்கு ஒரு கவிதை சொல்லுங்கண்ணா என்று கேட்க... எதைப்பத்தி கவிதை சொல்லணும் என்று கேட்டேன். பக்கத்தில் இருந்த இரும்புப் பெட்டியில் துரு பிடித்திருந்ததைப் பார்த்ததும்... 'துரு' பத்தி கவிதை சொல்லுங்கண்ணா என்றான்.

அடுத்த ஒரு நிமிடத்தில் கவிதை சொன்னேன்... அண்ணா.. சூப்பருங்கண்ணா... என் ஸ்கூல்ல கவிதைப் போட்டின்னா உங்ககிட்டதான் வருவேன்.. எழுதிக் கொடுங்கண்ணா என்றான். 


அவனிடம் சொன்னது அப்படியே மேலே....)




Thursday, January 23, 2014

பேரழகின் வள்ளல்!


நடையழகில் காட்டுகிறாய்
மானினத் துள்ளல்!
இடையழகில் பூட்டுகிறாய்
மயக்குறு விள்ளல்!
இதழழகில் காட்டுகிறாய்
முல்லைப்பூ எள்ளல்!
விழியழகில் நீட்டுகிறாய்
கயல்களின் அள்ளல்!
மார்பழகில் காட்டுகிறாய்
மனம்மயக்கும் கள்ளல்!
மதியழகில் தீட்டுகிறாய்
அசாத்திய மள்ளல்!

சிகையழகில் காட்டுகிறாய்
மேகத்தின் மேடுபள்ளல்
நகையழகில் கூட்டுகிறாய்
நறுந்தேனின் நள்ளல்!


என்னிதயத்தில் இட்டுவிட்டாய்
மாபெரும் தொள்ளல்!
எப்போது வந்து நீக்குவாய்
மனதிலுள்ள பொள்ளல்!
மயிலிறகென வருடுகிறாய்
பேச்சினில் சுள்ளல்!
சிரித்து எனை சிக்கவைத்தாய்
மையலெனும் சள்ளல்!
உன்னிடம் ஈர்த்து விட்டாய்
காதல்தனை கொள்ளல்!
கனவுகளில் ஆழ்த்திவிட்டாய்
நினைவுகள் உள்ளல்!
பெண்ணினத்தை நாண வைத்தாய்
நீயே பேரழகின் வள்ளல்!

(நண்பர் சாமுராய் கேட்டுக்கொண்டதற்காக 'வள்ளல்' எனும் தலைப்பில் இக்காதல் கவிதை. உங்களுக்கு இங்குள்ள சொற்களுக்கு அர்த்தம் தெரிஞ்சிருக்கும்தான்... எதுக்கும் அருஞ்சொற்பொருள் கொடுத்திடறேன்...)

(விள்ளல் = கட்டித் தழுவல், எள்ளல் = சிரிப்பு, 
கயல் = மீன், மதி = அறிவு, மள்ளல் = வலிமை, 
கள்ளல் = திருடுதல், சிகை = கூந்தல், பள்ளல் = பள்ளம்,
நள்ளல் = உறவு கொள்ளுதல், தொள்ளல் = துளை,
பொள்ளல் = வடு, சுள்ளல் = வலிமை, மையல் = காதல்,
சள்ளல் = சேறு, சிக்கல், உள்ளல் = நினைத்தல், மகிழ்தல்)

---------------------------------------------------------

Blogger சாமுராய் said...

கவிதை நல்லா இருக்கு அண்ணா :)
நீங்க தலைப்புக் குடுத்தா கவிதை குடுக்கிறதுல கர்ணனாமே? எனக்கு "வள்ளல்" எண்டுற தலைப்பில ஒரு (காதல்) கவிதை?
வாழ்த்துக்கள் :)
January 21, 2014 at 2:42 AM
 Delete




Monday, November 11, 2013

சிக்கல்..!


சுட்டெரிக்கும் சூரியனைக் கூட
நேருக்கு நேராய்
பார்த்து
விடுகிறேன்...
ஆனால் உன் சுட்டு விழியை
என்னால் பார்க்க முடிவதில்லையே
அது எப்படி?
உன் மொழி ஈர்ப்பு விசையில் கூட
வீழாமல் இருக்கிறேன்
உன் விழி ஈர்ப்பு விசையில்
வீழ்ந்து போகிறேனே
அது எப்படி..?
கம்பீரமாய் எப்போதும்
கண் பார்த்து பேசும் எனை
கண்கட்டி வித்தைபோல்
மண் பார்த்து பேச வைத்தாயே
அது எப்படி?
இப்படி என்னுடைய
அடையாளங்களெல்லாம்
உன்னுடைய ஒற்றைப் பார்வையில்
தடுமாறிப் போகிறதே
அது எப்படி 
என்ற
குழப்பச்சிக்கலில்
நான்
குறும்புச் சிரிப்பில் நீ..! 
-------------------------------------------------

(அன்பர் வே. நடனசபாபதி கேட்டதற்கு இணங்க 'சிக்கல்' எனும் தலைப்பில் இக்கவிதை..  அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க கருப்பொருள் 'காதல்'. வேலைப்பளு காரணமாக கவிதை எழுதவதற்கு தாமதம் ஆகிவிட்டது... என்று பொய்யுரைக்க விரும்பவில்லை... இத்தலைப்பில் கவிதை தோணாமல் ஒருவாரம் தவித்துப் போனேன். பின்னர் அழகான கவிதையைப் பார்த்ததும் கிறுக்கி விட்டேன்...)



Blogger வே.நடனசபாபதி said...
உண்டியல் கருத்தும் கவிதையும் அருமை. நீங்கள் கேட்டதால் நான் தருகிறேன் தலைப்பு. ‘சிக்கல்’ என்பதே அது. காத்திருக்கிறேன் கவிதையைப் படிக்க!
October 30, 2013 at 3:35 PM
 Delete




Tuesday, December 20, 2011

வலி அறிதல் - முல்லை பெரியாறு அணை சிறப்புக் கவிதை


'கொண்டான் கொடுத்தான்' என
விளங்கிய தமிழனும்
கேரளனும்
இன்று கொலைவெறியோடு
ஒருவரை ஒருவர்
கொளுத்தி விடப் பார்ப்பதேன்..?

வெள்ளை இனத்தில்
வெளிப்பட்ட
வெளிச்சக் கீற்றாய்
வந்த பென்னி குயிக்
தன் கடைசி 'பென்னி' வரை
செலவிட்டுக் கட்டிய
முல்லைப் பெரியாறால்
வந்த வினையா அது?

வெளிநாட்டில் பிறந்த
பென்னி குயிக்கிற்கு இருந்த
நாடுகடந்த நேசம்
நமக்கில்லாமல்  போனதேன்..!
இங்கேயே பிறந்து வளர்ந்த
தமிழனுக்கும்
கேரளனுக்கும் அந்த உணர்வு
இல்லாமல் போனதேன்..?

வேற்றுமையில் ஒற்றுமை
காணச் சொன்ன
நம் இந்தியாவில்
நம் ஒற்றுமையில் வேற்றுமையை
கிளப்பி விட்டவர்கள் யார்..?
அந்த கீழ்த்தர மூடர்கள் யாரென அறிக..?
அரசியல் ஆதாயம் தேடும்
பச்சோந்தி நாய்கள் எவையெனத் தெளிக..!
சிந்திக்கத்தானே ஆறாம் அறிவு..?
அதை சிந்தையிலிருந்தே
அகற்றி விட்டது ஏன்?

அதிகம் படிப்பறிவு பெற்ற
மக்கள் அங்கே மாக்களாய்
தமிழர்களிடம் நடந்து கொள்ள...
நாமும் அதே போல்
நடந்து கொள்ளல் நியாயமா?
வலி என்பது அனைவர்க்கும்
பொது என்றாலும்...
அதையே திருப்பி செய்வது
தமிழரின் மாண்பல்லவே..!

உங்கள் எதிர்ப்பை காட்ட
அமைதியையும் அகிம்சையும்
கையாளுங்கள்...
அமைதியாய் போனால்
அடங்கிப் போவது என்பதல்ல..?
அது அன்பின் வழி எனக் கொள்க..!
அன்னை தேசத்தின் மீதுள்ள
அபிமானம் எனக் கொள்க..!
அமைதியாய் பேசி தீர்த்துக் கொள்க..!

நம்மின் வலி அறிதலை
நையாண்டியாய் கேரளம் கொண்டால்
அவர்களை நையப்புடைக்க
வினாடி நேரம் ஆகாது...
விரைவில் நல் முடிவு வரும்..!
அது வரை கேரளத்து பொருட்களை
புறக்கணியுங்கள்..
கேரளத்து கடைகளை புறக்கணியுங்கள்
இங்கிருக்கும் கேரளர்களை புறக்கணியுங்கள்

நம் வலி(மை)யை
ஆதிகாலம் தொட்டே
அவர்களறிந்திருப்பர்...
சிறுநரி ஊளையிட்டு
சிறுத்தை ஓடாது என்பதை
கேரளனுக்குக் காட்ட
விரைவில் நமக்கு காலம் வரும்..!
அன்பால் கட்டுண்டோம்...
காத்திருப்போம்...
காலம் வரும் சாதிப்போம்..!

******************************

ஆர். சரண்யா என்பவர் 'மழையினை ரசிக்கும்' என்ற கவிதைக்கு பின்னூட்டமிடுகையில் 'வலி அறிதல்' என்ற தலைப்பில் கவிதை கேட்டார். அதை இன்றைய முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இணைத்து எழுதியிருக்கிறேன்... நன்றி..!

******************************


Anonymous Saranya R said...



Very Nice!!!!!!!

I Need kavithai for the topic of Vali arithal!!!!!!

Saranya R
15 December 2011 12:44 PM